வெள்ளி, 20 செப்டம்பர், 2013

* மிகச்சிறிய முட்டைகளை இடும் பறவை ஹம்மிங் பறவை.

* அதிகமாக தேசம்விட்டு தேசம் செல்லும் பறவை ஆர்க்டிக்.

* பறவைகளில் மிகவும் அறிவு கூர்ந்தவை ப்லூடிட்.

* மிக அழகான இறக்கைகளை கொண்ட பறவை, சொர்க்கப் பறவை (வடஆஸ்திரேலியா).                                                                                                                    * டெல்லி, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

* கல்கத்தா, ஹுக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது.

* பிரெஸ்பூர், சட்லெஜ் நதிக்கரையில் அமைந்துள்ளது,

* கோமதி நதிக்கரையில் லக்னோ அமைந்துள்ளது.

* தபதி நதிக்கரையில் சூரத் நகர் அமைந்துள்ளது.

* கெய்ரோ நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

* ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள நகர் ஸ்ரீநகர்.

* கோதாவரி நதிக்கரையில் நாசிக் அமைந்துள்ளது.                                                    * நெதர்லாந்தில் கைதூர்ன் கிராமத்தில் போக்குவரத்துக்கு சாலைகளே கிடையாது, கால்வாய்களே உதவுகிறது.

* கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை கணிக்கும் முறைக்கு `கிராபாலஜி' என்று பெயர்.

* நிலவில் நடப்பதைவிட ஓடுவது எளிதானது.

* மனிதனின் கண்களால் 17 ஆயிரம் விதமான வண்ணங்களைப் பிரித்து அறிய முடியும்.

* இந்திய எல்லைப் பாதுகாப்பு படையிடம் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்ட 700 ஒட்டகங்கள் உள்ளன.

* பேரரசர் அலெக் சாண்டர், தன் படைவீரர்கள் எதிரிகளிடம் சிக்காமல் இருக்க கட்டாயம் முகச்சவரம் செய்திருக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.         * இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்கலா வெங்கையா.

* இந்திய மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சான மொழி `தமிழ்'. அச்சான நூல் விவிலியம்.

* இந்திய பறவைகளில் மிகவும் உயரமானது `சாரஸ் கொக்கு' (6 அடி.)

* இந்தியாவில் பேசப்படும் மொழிகள் ஏறக்குறைய 1600.

* இந்தியாவில் ஓடும் மிக நீளமான நதி கங்கை.

* நெருப்புக் கோழி `ஒட்டகப் பறவை' என்றும் அழைக்கப்படுகிறது.

* `வைட்டமின் பி`யின் வேதிப் பெயர் தயமின்.                                                             * ஈக்களுக்கு பற்கள் இல்லை.

* தேளுக்கு காதுகள் இல்லை.

* மண்புழுவுக்கு கண்கள் இல்லை.

* வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாய் இல்லை.

* நாய்க்கு வியர்ப்பது இல்லை.

* சிலந்திக்கு எலும்புகள் இல்லை.                                                                                     * ஆண்டுக்கு 3651/4 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.

* இந்தியாவில் முதன் முதலாக எஸ்.டி.டி. அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1959.

* உலகிலேயே அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் லெனின்.

* பைசா கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

* மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - 3

* இரண்டு தேசிய கீதங்களை கொண்ட நாடு `ஆஸ்திரேலியா'                                    
*ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்தும் இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை Education.

* சீனாவிலும் ஒரு சாய்ந்த கோபுரம் உள்ளது. அதன் பெயர் டைகர்பகோடா. உயரம் 47 மீட்டர்.

* உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் இந்தியாவில்தான் தொடங்கப்பட்டது.
* உலகிலேயே அதிக மருத்துவர்கள் உள்ள நாடு ரஷ்யா.

* ஒரு மின்சார பல்பு 750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும் திறன்கொண்டது.

* தண்ணீர் இல்லாவிட்டாலும் ஒட்டகத்தைவிட அதிக காலத்துக்கு தாக்குப்பிடித்து வாழும் சக்தி எலிகளுக்கு உண்டு.                                                             * நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ்.

* அமெரிக்க அதிபரின் பொதுவான கார் எண் 100.

* `சி' என்ற ரோமன் எண், 100 என்ற அரபு எண்ணைக் குறிக்கும்.

* மனித உடலில் 100 மூட்டுகள் உள்ளன.

* கூகோல் என்ற எண்ணிற்கு 100 பூச்சியங்கள்.                                                                ஒலி அறிவோம்

நாய் குரைக்கும் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே குட்டீஸ். அதேபோல மற்ற சில விலங்குகள் எழுப்பும் ஒலியை எப்படி அழைக்க வேண்டும் என்று தெரியுமா?

பன்றி - உறுமுகின்றது

கன்றுக் குட்டி - கூப்பிடுகிறது

கழுதை - கத்துகிறது

குதிரை - கனைக்கிறது

சிங்கம் - கர்ஜிக்கிறது

புலி - உறுமுகின்றது

யானை - பிளிறுகிறது

ஓநாய் - ஊளையிடுகின்றது

மயில் - அகவுகின்றது                                                                                                                    
* வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது அவருக்கு வயது 24.

* வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ம் ஆண்டு வெளிவந்தபோது அவரின் வயது 22.

* மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர் `த ஸ்டோரி ஆப் மை லைப்' வெளியிட்டபோது அவரின் வயது 22.

* மார்க் ஸ்பிட்ஸ் ஒலிம்பிக்கில் 7 தங்க மெடல்களை வாங்கியபோது அவரது வயது 22.

* தத்துவத்தின் தந்தை சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை கண்டறிந்தபோது வயது 22.

* மார்டின் லூதர்கிங் மதச் சீர்திருத்தத்தை விதைத்தபோது அவரின் வயது 21.                                                                                        * தட்சிண கங்கோத்திரி என்றழைக்கப்படுவது கோதாவரி.

* டால்பின் மூக்கு என்றழைக்கப்படுவது விசாகப்பட்டினம்.

* இளஞ்சிவப்பு நகரம் என்றழைக்கப்படும் நகரம் ஜெய்ப்பூர்.

* குதிரேமுக் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் கர்நாடகா.

* தமிழகத்தில் கார்பைடு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் அரவங்காடு.

* தமிழகத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் காரைக்குடி.

* பரப்பளவில் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான்.

* குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் நகரம் சிவகாசி.

* கிர் காடுகள் அமைந்துள்ளது குஜராத்.

* தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நகரம் பாளையங்கோட்டை.

* ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் உள்ள சரணாலயம் காசிரங்கா.

* ஸ்ரீஹரிகோட்டா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.

* தும்பாராக்கெட் ஏவுதளம் கேரளாவில் உள்ளது.                 உலகில் மிகச்சிறிய கடல் ஆர்ட்டிக் கடல். இதன் பரப்பளவு 54,40,197 சதுர மைல்.

கடல் ஆமை ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகள் இடும்.

சீனாவின் நெடுஞ்சுவர் கி.மு. 214-ல் கட்டி முடிக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய விரிகுடா வங்காள விரிகுடா. இதன் நீளம், 2250 மைல்.

இமயமலைத் தொடரின் நீளம் 2313 கிலோமீட்டர்.                      * நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி அகோ மீட்டர்.

* இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளைத் தாக்க லட்சக்கணக்கான வவ்வால்களைப் பயன்படுத்திய நாடு அமெரிக்கா.

* ஆசியாவின் வைரம் என்ற அழைக்கப்படும் நாடு இலங்கை.

* மனிதனைப்போல் நடக்கும் ஒரே பறவை பென்குயின்.

* அட்லாண்டிக் கடலை முதன் முதலில் விமானம் மூலம் கடந்து சாதனை புரிந்தவர் கேப்டன் லின்ட்பெர்க் (1927).

* நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு நாய்.                       
* நாணயங்கள் தயாரிக்கும் இடத்தின் பெயர் `மின்ட்' எனப்படுகிறது.

* எலும்புக் கூடில்லாத விலங்கு `ஜெல்லி'

* யானை படையுடன் ஆல்ப்ஸ் மலையை கடந்தவர் `ஹன்னிபால்'

* நீண்ட தேசிய கீதம் கொண்ட நாடு 'கிரேக்கம்'

* உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம் 'நீலத்திமிங்கலம்'

* `துருப்பிடித்த கோள்' என அழைக்கப்படுவது `செவ்வாய்'.
 * கார்கள் அதிகம் உள்ள நகரம் - நியூயார்க்.

* டாக்சி (வாடகைக் கார்கள்) அதிகம் உள்ள நகரம் - மெக்சிகோ.

* வெள்ளை பெயிண்டில் சில துளிகள் கறுப்பு பெயிண்ட் கலந்தால் மங்கலாவிடும் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு, மேலும் வெண்மை அதிகரிக்கும்.

* ஆஸ்திரேலியாவை ஏழு பறவையின் தாயகம் என்று அழைக்கிறார்கள்.

* தண்ணீரைவிட மனித ரத்தம் ஆறு மடங்கு அடர்த்தியானது.                                                                                             *துர்க்மேனிஸ்தான் நாட்டிலுள்ள `காராகும்' கால்வாய், உலகிலேயே மிக நீளமான பாசன கால்வாய் ஆகும். இதன் நீளம் 1,300 கிலோமீட்டர்.

*விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட் களில் `குளோரெல்லா பைரெனோஸ்டோஸாவும் இடம் பெறும். இது கரியமில வாயு மற்றும் உடலின் மற்றக் கழிவுகளை நீக்கவும் மற்றும் மனிதனின் சிறுநீரைச் சிதைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

* இந்தியாவின் உயரிய இலக்கிய விருது ஞானபீடம்

* ஒரு லிட்டர் கடல் நீரில் 30 கிராம் உப்பு உள்ளது.

* உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம்.

* இந்தியாவில் மிக உயரமான கோபுரம் டில்லியிலுள்ள குதுப்மினார்.

* மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு மொனாகோ.

* தார் பாலைவனம் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

* உலகின் மிக குளிரான பிரதேசம் சைபீரியா.                                  மிக உயர்ந்த சிகரங்கள்

ஆசியா - எவரெஸ்ட் (8,848 மீட்டர்)

ஆப்பிரிக்கா - கிளிமஞ்சரோ (5,963 மீட்டர்)

வடஅமெரிக்கா - மெக்கின்லே (6,194 மீட்டர்)

தென் அமெரிக்கா - அகோன்காகுவா (6,959 மீட்டர்)

ஐரோப்பா - எல்பஸ் (5,633 மீட்டர்)

அண்டார்டிகா - வின்சன் மாசிப் (4,897 மீட்டர்)                               * இந்தியாவின் முதல் ரெயில் , 1884-ம் ஆண்டு ஆகஸ்ட்-15-ந்தேதி ஹவுராவில் இருந்து ஹூக்ளிக்கு இயக்கப்பட்டது.

* இந்தியாவை தாயகமாகக் கொண்ட தாமரை மலர் கி.மு.6-ம் நூற்றாண்டில் எகிப்தில் அறிமுகமாகி உலகெங்கும் பரவியது.

* இந்தியாவில் போர் நினைவு அருங்காட்சியகம் டெல்லியில் உள்ளது.

* அண்டார்டிகா ஐஸ் தரையின் பரப்பானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பரப்பைப்போல இரு மடங்காகும்.

* சுவிட்சர்லாந்தில் ஒலிம்பிக் பொருட்கள் அருங்காட்சியகம் உள்ளது                                                                         * கரப்பான் பூச்சிக்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட `ஓமட்ரீயம்' எனப்படும் சிறு கண்கள் காணப்படுகின்றன.

* யானை ஏறக்குறைய 30 வயதில் இனப்பெருக்க பருவத்தை எட்டுகிறது. இதன் கற்ப காலம் 22 மாதங்களாகும்.

* மனித குடலின் நீளம் - 8 மீட்டர்.

* அம்மை நோய்க்கு காரணம் - வைரஸ்.

* ஒரு மனிதன் 50 ஆண்டு வாழ்நாளில் தூங்கி கழிக்கும் நாட்கள் 6 ஆயிரம்.

* கங்காரு 13 மீட்டர் தூரம் தாண்டும் சக்தி படைத்தது.              * இந்தியாவில் 5 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

* அதிக அளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் இந்திய மாநிலம் - கர்நாடகா.

* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு இஸ்ரேல்.

* பெண்களுக்கு 1928-ம் ஆண்டு முதல் ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

* ஜப்பான் நாட்டு கொடியில் 2 நிறங்கள் உள்ளன.

* இந்தியாவில் தபால் தலை ஒட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1838.                                                  * தாவரங்களின் முக்கிய ஹார்மோன் `ட்ரிப்டோபேன்'. இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.

* மனிதன் தினசரி உண்ணும் உணவில் 20 மில்லிகிராம் துத்தநாகம் கிடைக்கிறது.

* ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக்.

* குறிஞ்சி மலர் ஸ்ட்ராபிலாந்திள் இனத்தைச் சேர்ந்ததாகும்.

* சந்திரனில் உள்ள மிகப்பெரிய மலை 'லீப்னிட்ஸ்'. இதன் உயரம் 35 ஆயிரம் அடி.

* `ராயல் அகாடமி ஆப் சைன்ஸ்' என்ற குழுதான் விஞ்ஞானத் துறைக்கான நோபல் பரிசை அளிக்கிறது.           
* மனிதன் சிரிப்பதைப் போலவே குரலெழுப்பும் பறவை குக்கு பெர்ரா (ஆஸ்திரேலியா).

* சுறா மீனிற்கு 2 கருப்பைகள் உள்ளன.

* பெட்ரோலில் ரப்பர் கரையும்.

* தாயின் பெயரையே தன் புனைபெயராக வைத்துக் கொண்டவர் ஓவியர் பிகாசோ.

* தாஜ்மகால் என்ற சொல்லுக்கு அரசியின் மணிமுடி என்று பெயர்.

* சீன மொழி டைப்ரைட்டரில் 1,500 எழுத்துக்கள் உள்ளன.

* ஹிட்லரை சந்தித்த தமிழ் விஞ்ஞானி அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு.

* கண்தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகிறது.

* எலிகள் பிறந்து கண்விழிக்க 14 நாட்கள் ஆகும்.

* விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு நைட்ரஜன்.

* உலகில் முதன் முதலில் சர்க்கஸ் ரோமன் நாட்டில் தோன்றியது.

* உலகில் முதலில் குடையை பயன்படுத்தியவர்கள் சீனர்கள்.

* உலகில் முதலில் வெற்றிலை பயரிட்ட நாடு மலேசியா.

* முதலில் உலக வரை படத்தை வரைந்தவர் தாலமி.
* அமெரிக்காவில் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு 2 சதவீதம்.

* இந்தியாவில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 62 சதவீதம்.

* சீனாவில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 73 சதவீதம்.

* இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் விவசாயிகளின் பங்கு மூன்றில் 2 பங்காகும். இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைக்கு இங்கு அதிக விவசாயிகள் இருப்பதுவும் ஒரு காரணமாகும்.                                                         * கீர்த்தி சக்ரா விருது ராணுவத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* ஆரியபட்டா விருது விண்வெளி அறிவியல் துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* டாக்டர் பி.சி.ராய் விருது மருத்துவ துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.                                   * இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட முதல் பெண்மணி சிவகங்கை சீமையின் அரசியான வேலுநாச்சியார்தான்.

* இந்தியாவில் முதல் பொது தேர்தல் 1951 அக்டோபர் 21-ந்தேதி நடந்தது.

* இந்தியாவில் முதல் திரைப்படம் (ராஜா அரிச்சந்திரா) வெளியிடப்பட்ட நாள் 3.5.1913

* இந்தியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு 1927.

* இந்தியாவின் முதல் செய்தித்தாள் 1780-ல் வெளியிடப்பட்டது. கல்கத்தாவில் இருந்து வெளிவந்த பெங்கால் கெஸ்ட் இதழ்தான் அந்த முதல் இதழாகும்.

* இந்தியாவில் முதன்முதலாக மொபைல் டெலிபோன் சேவை தொடங்கப்பட்ட நாள் 31-12-1985                                          * முதன் முதலில் மூக்கு கண்ணாடிகளை உருவாக்கியவர் `ரோஜர் பேகன்'.

* நோய்கள் கிருமிகளால்தான் உருவாகின்றன என்பதை உறுதி படுத்தியவர் லூயி பாஸ்டர்.

* அணுக்கரு சிதைவைக் கண்டறிந்தவர், ரூதர்போர்டு.

* அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர் அலக்ஸி லியோனவ்.

* ஞாபகத்திறன் உடைய `எட்சாக்' கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர், வான் நியூமன்.                                                        * சீனாவில் பொதுவுடமை புரட்சியை ஏற்படுத்தியவர் மாசேதுங்.

* பழனிமலையின் இயற்பெயர் `திருஆவினன்குடி'.

* குஜராத்தில் 4 முறை முதல் அமைச்சராக இருந்தவர் மாதவ் சிங் சோலங்கி.

* உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.

* தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுவது போடிநாயக்கனூர்.

* யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது.                                                     * 6 ஆயிரம் மீட்டர் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் காணப்படும் மேகங்கள் சைரஸ் எனப்படுகிறது.

* 2 ஆயிரத்து 100 மீட்டர் முதல் 6 ஆயிரம் மீட்டர் வரையான சராசரி உயரங்களில் காணப்படும் மேகங்களின் பெயர் அல்டோஸ்.

* 2 ஆயிரத்து 100 மீட்டர் வரையான தாழ்வான மேகங்கள் ஸ்டேரடஸ்.

* பார்வை தெரியக்கூடிய மூடுபனி மிஸ்ட் எனப்படும்.

* ஒரு கிலோமீட்டரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பார்வை தெரியக்கூடிய தூசுகளால் ஏற்படக்கூடிய புகை மூட்டம் ஹேஸ்.

* மூடுபனி என்பது மிகத்தாழ்வான ஸ்டேரடஸ் மேகமாகும்.                                                                                                       ஒட்டகச்சிவிங்கி தலையை திருப்பாமலே பின்புறம் வருபவர்களை பார்க்கும் திறன் உடையது. அதன் கண்கள் அந்த அளவு சுழலும்.

மிருகங்களிலேயே ரத்த ஓட்ட வேகம் அதிகமுள்ள பிராணி ஒட்டகச்சிவிங்கி.

சிங்கத்தைக்கூட காலால் உதைத்தே துரத்திவிடும்.

ஒட்டகச்சிவிங்கியால் ஒலியெழுப்ப முடியாது.

ஒட்டகச்சிவிங்கி தினமும் அரைமணி நேரத்துக்கு குறைவாகவே தூங்குகின்றன.                                                               
1960-ம் ஆண்டில் பறவையினங்கள் அழிந்துபோகாமல் தடுப்பதற்காக டோக்கியோ நகரில் பறவை பாதுகாப்புக்கான சர்வதேச கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு பறவையை தனது தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படிதான் `மயில்' இந்தியாவின் தேசியப்பறவை ஆயிற்று.
* உலகில் முதன் முதலில் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு ஜப்பான்.

* முதல் ஹைட்ரஜன் பலூனை தயாரித்தவர் சார்லஸ்.

* தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் ஜான்வாக்கர்.                           * இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஈடன் கார்டன் (கொல்கத்தா).
* குதுப்மினார் கட்டிடத்தின் உயரம் 240 அடிகள்.

* மாவீரன் பகத்சிங் மரணத்தின் விளிம்பில் கடைசியாய் சொன்ன வார்த்தைகள், இன்குலாப் ஜிந்தாபாத்.

* ஐ.நா.சபை வெள்ளி விழாவில் இசைக்கச்சேரி நடத்திய கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார்.

* இந்தியாவின் தேசிய பானம் தேநீர்.

* முதன் முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் மணக்குடவர்.                                                                                                 * அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ் போன்ற காளான்களை நாம் உணவாக உட்கொள்ளலாம்.

* அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ் போன்ற காளான்கள் நச்சுத்தன்மை அதிகம் கொண்டவை. இவற்றை உண்ண இயலாது.

* கிளாவிஸ்செப்ஸ் பர்பர்யா என்பது `பகற்கனவு பூஞ்சை' என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்கு பிரமை உணர்வை ஏற்படுத்தும்.                                                                              உலகிலேயே நதியின் நடுவே அமைந்துள்ள தீவு மஜ்லி (பிரம்மபுத்திரா நதி).

அஸ்கார்பிக் அமிலம் எனப்படுவது வைட்டமின்-சி

இந்தியாவிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கோள் ஜி-சாட்.

சுரப்பிகளில் பிரதானமானது பிட்ïட்டரி சுரப்பி.

அமேசான் நதி தென் அமெரிக்காவில் பாய்கிறது.

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு டென்மார்க்.                          பிரபலமான புல்வெளிகளும், அவை இருக்கும் நாடுகளும் வருமாறு...

காம்பாஸ் புல்வெளிகள் - பிரேசில்

லானாஸ் புல்வெளிகள் - கினியா

சவானா புல்வெளிகள் -ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா

ஸ்டெப்பி புல்வெளிகள் - யுரேசியா

பிரெய்ரி புல்வெளிகள் - வட அமெரிக்கா

பாம்பாஸ் புல்வெளிகள் - அர்ஜென்டைனா

டவுன்ஸ் புல்வெளிகள் - ஆஸ்திரேலியா                                          மனிதன் வளர்த்த முதல் செல்லப் பிராணி கோழிகள்.

இந்தியாவின் மிகப் பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் நிகோபார் தீவுகளாகும்.

தேசிய பால் வளர்ச்சிக் கழகம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ளது.

உலக செஞ்சிலுவை தினம் மே 8-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

உடலின் வெப்பநிலையை சமப்படுத்தி வைத்திருக்க உதவுவது தோல்.

கடல் நீரில் அதிகமாக உள்ளது சோடியம் குளோரைடு.             எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயப்படுவார்கள். பய வியாதிக்கு போபியா என்று பெயர்.

தண்ணீரைப் பார்த்து பயப்படுவதை ஹைட்ரோ போபியா என்றும், மீன்களைப் பார்த்து பயப்படுவதற்கு இச்தையோ போபியா என்றும் பெயர்.

இருட்டைப் பார்த்து பயப்படுவதற்கு ஸ்கோட்டோ போபியா என்றும், விமானங்களைப் பார்த்து பயப்படுவதற்கு ஏரோ போபியா என்றும் பெயர்.                                                                           * ஒரு சாதாரண தேன் கூட்டில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள் வசிக்கும்.

* திமிங்கல மூளையின் எடை சுமார் 7 கிலோ.

* உலகில் சுமார் 75 ஆயிரம் வகை ஈக்களும், 2 ஆயிரம் வகை கொசுக்களும் உள்ளன.

* மிருகங்களில் சிம்பன்சி எனப்படும் மனிதக் குரங்குகளே மிகவும் அறிவுள்ளவை.

* முதலையால் கண்களை திறந்து வைத்துக்கொண்டு தூங்க முடியும்                                                                                                * ரோம் நகரம் டிபெர் நதிக்கரையில் அமைந்துள்ளது.

* மழைக்கோட்டை கண்டுபிடித்தவர் சார்லஸ் மக்கின் டேர்ஷி.

* பிளாஸ்டிக் தயாரிப்பில் ஜெர்மன் நாடு முதலிடம் வகிக்கிறது.

* இந்தியாவின் பழங்கால மருத்துவ நிபுணர்கள் சரகர், சுஸ்ருதர்.

* உலக வரைபடத்தை வரைந்தவர் ராடோஸ்தனிஸ்.

* ஐ .நா. ச பை யின் குழந்தை என்றழைக்கப்படும் நாடு இந்தோனேஷியா.                                                                                          * காந்தி முதன் முதலில் துவக்கிய நாளிதழின் பெயர் இண்டியன் ஒப்பீனியன்.

* பாரதியார், பாரதி என்ற பட்டத்தை பெற்றபோது அவரது வயது 11.

* இந்தியாவின் முதல் கணித நூலின் பெயர் கணிதசங்கிரஹா.

* உலகில் மரண தண்டனையை ரத்து செய்த முதல் நாடு ஆஸ்திரியா.

* ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு சூடான்.                                                                                                              * உலகிலேயே முதன் முதலில் துணியில் செய்தித்தாள் வெளியிட்ட நாடு ஸ்பெயின்.

* இசைக் கருவிகளின் ராணி எனப்படுவது வயலின்.

* கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம் ஸ்டிக்ஸ் பேக்.                  * பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

* பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது.

* மணிக்கு 1,670 கிலோமீட்டர் வேகத்தில் பூமி தன் அச்சில் சுழன்று கொண்டு இருக்கிறது.

* காற்று மண்டலம் என்பது பூமிக்கு மைல் 990 கிலோமீட்டர் உயரம் வரை உள்ளது.

* பூமி சுழல்வதால்தான் காற்று வீசுகிறது.                                     வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துகிறோம். உலகில் முதன்முதலில் இப்படி பதிவு எண் கொடுத்து சாலையில் வாகனங்களை ஓடவிட்டவர்கள் பிரான்ஸ் நாட்டினர்தான். நான்கு சக்கர வாகனங்களுக்குத்தான் முதலில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டன. 1893 ம் ஆண்டில் இப்பழக்கம் வழக்கத்துக்கு வந்தது. பிரான்ஸ் நாட்டினர்தான் கதவு எண் பழக்கத்தையும் கொண்டு வந்தார்கள்.                                                                                                      
சில தாவரங்களின் அறிவியல் பெயர்கள்

நெல் - ஒரிசா சட்டைவா
வெங்காயம் - அல்லியம் சிபா
வாழை - மூஸா பாரடிஸியாகா
அவரை - டோலிகஸ்லாப்லாப்
உளுந்து - போஸியோலுஸ்முருங்கோ
கத்தரி - ஸொலானம் மொருஜீனா
நாய்க்குடை (காளான்) - அகாரிகஸ்
கைவிரல்களில் சுட்டு விரலுக்கு உணர்வுகள் அதிகம்.

முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி உருகுவே நாட்டில் நடந்தது.

அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய பத்திரிகையின் பெயர் நியூ இந்தியா.

மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் நிக்கோலா டெஸ்லா.

குள்ளநரி, நாய் இனத்தை சேர்ந்தது.

டைனமோவைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே.             இந்தியாவின் முதல் வைசிராய் கானிங் பிரபு.

அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா.

அங்கோலா நாட்டு நாணயத்தின் பெயர் குவான்சா.

பூமியின் விட்டம் 12 ஆயிரத்து 754 கிலோமீட்டர்கள்.

இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவின் முதல் தலைவர் விக்ரம் சாராபாய்.                                                                                          * வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் வல்லுநரால் 1781-ல் யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

* யுரேனசுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருப்பதைப் போல 19 மடங்கு.         • மிகப் பெரிய பறவைகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஈமு பறவையை ஆஸ்திரேலியாவில் மாடு மேய்க்கப் பழக்குகின்றனர்.

• இமயமலைப் பகுதிகளில் காணப்படும் கல்தூரா என்ற பறவை மிக இனிமையான குரலையுடையது. மலைப் பகுதி மக்களுக்கு இப்பறவையின் குரலைக் கேட்பது ஓர் இனிமையான அனுபவம். ஆரம்பத்தில் முதன்முதலாய் விசிலடிக்கத் துவங்கும் ஒரு சின்னப் பையனைப் போல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மிக அருமையாக விசிலடிக்கும்.

• பூநாரை என்ற பறவை இனத்தில் ஆண் பறவையும் குஞ்சுகளுக்குப் பால் ஊட்டுகிறது. இப்பாலில் புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் அதிகமாக இருப்பதால் புழு பூச்சிகள், மீன்களைச் சாப்பிடாமலேயே குஞ்சுகள் நல்ல ஆரோக்கியத்தோடு வளர்கின்றன.

• அதிக இறகுகள் உள்ள பறவை அன்னப் பறவையாகும். பொதுவாக அன்னப் பறவைகளுக்கு 25,216 இறகுகள் உண்டு.
* இந்தியா வசம் உள்ள அக்னி ஏவுகணை 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று எதிரியின் இலக்கை தாக்கக் கூடியது.

* இந்திய கடற்படை வசம் உள்ள நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கி கப்பலின் பெயர் ஐ.என்.எஸ்.அரிகன்ட், அட்மிரல் கோர் ஸ்கோப்

* பசிபிக் கடலில் கண்டறிந்த அரிய வகை திமிங்கலத்தின் பெயர் ஸ்பேடு டூத்டு பீக்டு வேல்.

* ஆராய்ச்சியாளர்களால் தக்காளி பழத்தின் ஜீன் அமைப்பு முற்றிலுமாக வரிசைப் படுத்தப்பட்டுவிட்டது.

* இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் உயிரினம் கிரேட் இன்டியன் பஸ்டர்டு எனும் பறவையினம்.

* இந்தியாவின் முதன்மையான மிகப்பெரிய அணுக்கரு ஆற்றல் ஆராய்ச்சி மையம் மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும்.

* பரப்பளவின் அடிப்படையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவின் பெரிய மாநிலம் ‘மத்தியப்பிரதேசம் ஆகும்.

* இந்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருது ‘பாரத ரத்னா’ என்ற விருதாகும்.

* வெப்பம் உமிழாமல் வெளிச்சம் தரும் உயிரினம் ‘மின்மினிப்பூச்சி’ ஆகும்.

* புரதத்தை செரிமானம் செய்ய உதவும் பொருள் ‘பெப்ஸின்’ என்பதாகும்.

* இந்திய தேசிய மகாகவி என்றழைக்கப்படுபவர் ‘ரவீந்திரநாத் தாகூர்’.

* இந்தியாவில் முதல் சென்சஸ் 1911-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

* நீரூக்கு அடியில் இருக்கும் மணலை அளக்க ஹைட்ரோஃபோன் என்ற கருவி பயன்படுகிறது.

* அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் ஆவார்.                                
அமெரிக்காவின் ஜனாதிபதி இருக்கும் வெள்ளை மாளிகையில் உள்ள மொத்த அறைகள் 132. கதவுகள் 412. ஜன்னல்கள் 147. ஒரு நாளைக்கு வெள்ளை மாளிகைக்கு வந்து செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக ஆறாயிரம்.

பீகார் மாநிலத்திலுள்ள சம்பரான் மாவட்டத்தில் 18-4-1917 அன்று காந்தியடிகளால் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. அதுவே முதல் சத்தியாக்கிரகம் எனப்படுகிறது.

உலகில் முதன்முதலில் பேருந்து போக்குவரத்து வசதி 18-10-1895-ல் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே சமயத்தில் கேட்கப்படும் நூறு கேள்விகளுக்குச் சரியான பதில் கூறுபவர்கள் "சதாவதானி' என்று அழைக்கப்படுவர். இக்கலையில் தமிழகத்தில் முதன் முறையாகத் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செய்குத்தம்பி பாவலர் ஆவார்.

எத்தியோப்பிய காலண்டரில் ஆண்டுக்கு 13 மாதங்கள் உள்ளன. 30 நாள்கள் கொண்ட 12 மாதங்களும் 5 நாள்கள் கொண்ட 13-வது மாதமும் வழக்கத்தில் உள்ளன.

இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியவர் திப்பு சுல்தான். நடத்திய ஆண்டு 1824.
இலியட், ஒடிஸ்ஸி ஆகிய உலகப் புகழ்பெற்ற இதிகாசங்களைப் படைத்த கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹோமர் முற்றிலும் கண்பார்வை இழந்த கவிஞர்.

இஸ்ரேல் நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கும்படி 1952-ம் ஆண்டு அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

பூமியின் மிக ஈரமான பகுதி கொலம்பியாவிலுல்ள லோரோ ஆகும். இங்கு ஆண்டொன்றுக்கு சுமார் 523.6 அங்குல மழை பொழிகிறது.

உலகில் அதிக அளவு இரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கிலம். அதன் உடலில் எட்டாயிரம் லிட்டர் வரை இரத்தம் இருக்குமாம்!                                                                  • இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்

• உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - பிஸ்மார்க் (ஜெர்மனி)       
• முதலில் மனித இனம் தோன்றிய இடம் ஆசியா

• முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் தாலமி

• முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு ரோமாபுரி

• முதலில் குடையைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்

• முதலில் ரேடார் உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்

• முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயணம்

* நம் வீடுகளில் காணப்படும் ஈக்களின் ஆயுள்காலம் இரண்டே வாரங்கள்தான்.

* மனித இனத்துக்கு வீட்டு ஈக்களால் மட்டும் முப்பது விதமான நோய்கள் வருகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

* தேங்காய் அதிகம் விளைவது பிலிப்பைன்ஸ் நாட்டில்தான்.

* நைலான் துணியில் பண நோட்டுகளை அச்சடிக்கும் நாடு ஜெர்மனி.
தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலையடிகள்

தமிழ் மாணவர் - வீரமாமுனிவர்

தமிழ்த் தென்றல் - திரு.வி.க.

தமிழ் மாமுனி - திருவள்ளுவர்.

தமிழில் முதன் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் -ஆனந்தரங்கம் பிள்ளை.                    * நேரு பிறந்தபோது அவரது தந்தையின் வயது 28.

* இந்திராகாந்தி பிறந்தபோது நேருவின் வயது 28.

* நேருவின் மனைவி கமலா இறந்தது பிப்ரவரி 28.

* நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.

* நேரு தன் மனைவி கமலா இறந்த பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 28.                                               வில்லியம் ஹார்வி

உலகிலேயே சிறந்த மருத்துவர்களில் ஒருவர் வில்லியம் ஹார்வி. இங்கிலாந்தில் பிறந்த இவர் 1602-ல் லண்டனில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இவருக்கு முன்பு மனித உடலில் ரத்தம் கடல் அலையைப் போல முன்னும் பின்னும் பாய்ந்து வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் இவர்தான் ரத்தம் குழாய்கள் மூலம் வெவ்வேறு உறுப்புகளுக்கும் செல்கிறது, அதுவும் இதயத்திலிருந்து செல்கிறது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார்.                                        • பிடரியுடன் உள்ள ஆண் சிங்கத்தை வீரமுள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், 90 சதவீதம் விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது பெண் சிங்கம்தான்.

• துறவை விட இல்லறமே சிறந்தது எனக் கூறுவது சீக்கிய மதமாகும்.

• வயது முதிர்ந்த பெற்றோர்களை உடன் வைத்துப் பேணுவோர்க்கு சிங்கப்பூரில் வருமான வரிச் சலுகைகள் உண்டு.

• மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்.

• வாழை மரத்துக்கு ஜப்பானிய மொழியில் "பாஷோ' என்று பெயர்.

• ஜப்பானில் தரமான பாரம்பரிய கிமோனோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

• பூவரசம்பூவை தேசிய சின்னமாக வைத்திருக்கும் நாடுகள் ஹங்கேரி, ருமேனியா.                                                                     • 18 செ.மீ. நீளமுள்ள பென்சில் 55 கிலோமீட்டர் கோடு கிழிக்கும். 45 ஆயிரம் சொற்களை எழுதக்கூடியது. 17 தடவை கூர்மையாக்கலாம்.

• கத்தரிக்கோலைக் கண்டு பிடித்தவர் மோனாலிசா ஓவியத்தை வரைந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி.

• சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை கழுகு.

• உப்பை பரப்பி அதன் மீது ஒருவர் ஆடையின்றி படுத்தால் உயிர் போய்விடும்.

• ஒருவர் மருந்து சாப்பிட்டுவிட்டு புளிய மரத்தடியில் படுத்தால் மருந்து வேலை செய்யாது.

• துத்தி இலையில் உப்பில்லை. பிழிந்தால் சாறு வராது. மற்றெல்லா கீரைகளில் உப்பு உண்டு. கசக்கினால் சாறுவரும்.                           
• அமெரிக்காவில் வால் இல்லாத சில கோழி இனங்கள் நீல நிற முட்டைகளை இடும்.

• நியூகினியாவில் உள்ள காசோவரி எனப்படும் வான்கோழி இனப் பறவைகள் பசுமை நிற முட்டைகளை இடும்.

• அன்னப் பறவை பசுமை கலந்த வெண்ணிறத்தில் முட்டையிடும்.

• ஜப்பானிலுள்ள குயில்களின் முட்டைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

• ஆப்ரிக்காவிலுள்ள ஜிங் இனக் கோழிகளின் முட்டைகள் சிவந்த மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும்.

• பிணந்தின்னிக் கழுகுகளின் முட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறம்.

• புள்ளிகள் மற்றும் கோடுகள் கொண்ட முட்டைகளை பவழக்கால் நாரைகள் இடும்.

• வரகு கோழிகளின் முட்டைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

• கருடனின் முட்டை சாம்பல் நிறம்.

• கடல் அர்ச்சின் என்ற பறவை ஆரஞ்சு நிற முட்டைகளை இடும்.

• செந்தலைக் கிளிகளின் முட்டைகள் வெண்ணிறத்தில் கோள வடிவில் இருக்கும்.
• ஒரு நொடியில் 40-இல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒருமுறை இமைப்பதற்கு கண்கள் எடுத்துக் கொள்கின்றன.

• சராசரி ஆயுளுள்ள மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் முறை தனது கண்களை இமைக்கிறான்.

• கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினிக் குணம் உண்டு.

• ஒரு மனிதனின் கண்ணீர் சுரப்பிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் அவனது கண்கள் வறண்டு போய் இறுதியில் அவன் குருடாகி விடுவான்.

• கண்தானம் செய்யும்போது சிலர் நினைப்பது போல கண்களையே அகற்றி எடுக்க மாட்டார்கள். மாறாக "கார்னியா' எனப்படும் பார்வைப் படலத்தைத்தான் பிரித்தெடுத்துக் கொள்வார்கள். அதுவும் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.                                                                       • உலகின் மிகப் பழமையான தலைநகரம் டமாஸ்கஸ். சிரியா நாட்டின் தலைநகரமாக 4,500 ஆண்டுகளாக இருந்து வருகின்றது.

• மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் முதன்மையானது டோக்கியோ. அடுத்தது மெக்ஸிகோ நகரம்.

• இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் மும்பை.

• பரப்பளவில் மிகப் பெரிய நகரம் குயீன்ஸ்லாந்திலுள்ள மவுண்ட் இஸô. இதன் பரப்பளவு 41,978 சதுர கி.மீ.

• 3,684 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தலைநகரம் லாசா. திபெத்தின் தலைநகரம் இது.

• கடல் மட்டத்திலிருந்து 16,732 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம் வென்சுவான். 1955-ஆம் ஆண்டு திபெத்தில் இந்தகரம் உருவாக்கப்பட்டது.

• உலகில் செலவு அதிகமாகும் நகரம் டோக்கியோ.

• சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம் - பெய்ஜிங் (சீனா).

• டாக்ஸிகள் அதிகம் உள்ள நகரம் மெக்ஸிகோ.

• கார்கள் அதிகம் உள்ள நகரம் நியூயார்க் (அமெரிக்கா).                                                                    1. மூளையை விடப் பெரிதான கண்களைக் கொண்ட பறவை - நெருப்புக் கோழி

2. நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு - ஒட்டகச்சிவிங்கி

3. நான்கு மூக்குகளை உடைய உயிரினம் - நத்தை

4. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை - ஆந்தை

5. வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட விலங்கு - மாடு

6. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் - டால்பின்

7. நுரையீரல் இல்லாத உயிரினம் - எறும்பு

8. பின்பக்கமாகவும் பறக்கக்கூடிய பறவை - ஹம்மிங் பறவை

9. துருவக் கரடிகள் எந்தக் கையை அதிகம் பயன்படுத்தும்? - இடது கை.

10. பற்கள் இல்லாத பாலூட்டி இனம் - எறும்புதின்னி

11. நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள்? - எட்டு

12. மூன்று இதயங்களைக் கொண்ட கடல்வாழ் உயிரினம் - ஆக்டோபஸ்

13. உலகில் மிகவும் விஷத்தன்மையுடைய மீன் - ஸ்டோன் ஃபிஷ் (ஆஸ்திரேலியா)

14. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள கடல்வாழ் உயிரினம் - இறால் மீன்

15. உலகின் மிகப் பெரிய பாலூட்டி இனம் - நீலத் திமிங்கிலம்.                                                        * விஜயநகரப் பேரரசின் சிறந்த மன்னர் - கிருஷ்ண தேவராயர்.

* தீரன் சின்னமலையின் இயற்பெயர் - தீர்த்தகிரி.

* இந்தியாவின் தோட்ட நகரம் - லக்னோ.

* தார் பாலைவனம் இருக்கும் மாநிலம் - ராஜஸ்தான்.

* ஜெர்மனியின் தேசிய விலங்கு - கழுதை.         * மதுரையிலுள்ள ஆயிரங்கால் மண்டபம் 1569-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* வெளிநாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்கும் வைக்கும் வழக்கம் 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* இந்தியாவில் இரட்டை பிளாட்பாரத்துடன் கட்டப்பட்ட முதல் ரயில் நிலையம் ‘கான்பூர் ரயில் நிலையம் ஆகும்.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் கமலாஜித் சாந்து என்பவர் ஆவார்.

* “ரயில் போக்குவரத்தின் தந்தை” என்றழைக்கப்படுபவர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பவர் ஆவார்.

* டெல்லி சுல்தானியத்தின் முதல் அடிமை வம்ச அரசர் ஐபெக் என்பவர் ஆவார்.

* உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ‘டெல்ஸ்டார்’ என்பதாகும்.

* தேசிய மொழியாக இந்தி மொழி 1949-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

* நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ‘ஆர்க்கிமிடிஸ்’ என்பவர் ஆவார்.

* முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.                                             நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.

நம் உடலில் உள்ள இரண்டு நுரையீரல்களில் வலது நுரையீரல்தான் பெரியது.

நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ரத்தத்திசு வெள்ளையணுக்கள்.

மனித கண்களில் பார்வையை உணரும் 7 மில்லியன் கூம்பு செல்கள் உள்ளன.

மனிதனின் உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சராசரியாக 50 ஆயிரம் மைல்களுக்கு அதிகமாகும்.

உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

டெல்லி நகர மேயராகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி அருணா ஆசப் அலி

விடுதலைக்குப் பின் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம்

நமது தேசிய கீதத்தை இசைக்க ஆகும் நேரம் 52 நொடிகள்.

உலகின் முதல் கலைக் களஞ்சியம் சீன மொழியில் உருவானது                                           
• ஒருகாலத்தில் மாதுளம் பழத்தில் ஓட்டை போட்டு, லவங்கத்தை வைத்து பாத்ரூமில் நறுமணத்திற்காக வைத்திருந்தனர். இதுதான் முதல் டாய்லெட் பிரஷ்னர்.

• அமெரிக்காவின் பல மாகாணங்களில், பெண்கள் தங்கள் உள்ளாடைகளை வெளியே உலர்த்தத் தடை உள்ளது.

• சவுதி அரேபியால் உள்ளாடைகளை வாங்கச் செல்லும்போது, கணவன் உள்பட ஆண்கள் யாருக்கும் உடன் செல்ல அனுமதியில்லை.

• ஒருவர் தன் வாழ்நாளில் சராசரியாக 3 வருடத்தை பாத்ரூமில் கழிக்கிறார் என்கிறது ஆய்வு.

• பாத்ரூமில் பெண்கள், ஆண்களைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.

• ரஷ்யா, 1957-ஆம் ஆண்டு "ஸ்புட்னிக்' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

• பிரான்ஸ் "அஸ்டெரிக்ஸ்' என்ற விண்கலத்தை 1965-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• ஜப்பான் "ஓசாமி' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• சீனா "எஸ்கேடபிள்யூ' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் ஏவியது.

• இங்கிலாந்து "பிராஸ்ப்ரோ' என்ற விண்கலத்தை 1971-ஆம் ஆண்டு ஏவியது.

• இந்தியா "ரோகிணி' என்ற விண்கலத்தை 1980-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• முதல் அமெரிக்க செயற்கை விண்கலத்தின் பெயர் "எக்ஸ்ப்ளோரர்' ஆகும்.
• இந்தியாவின் தேசிய பறவையாக மயில் 1963-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.

• உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ரிப்பன் பிரபு.

• இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு அரசுடைமை ஆக்கப்பட்டது.

• NEWSPAPER என்பதன் விரிவாக்கம் NORTH, EAST, WEST, SOUTH, PAST AND PRESENT, EVENTS, REPORT என்பதாகும்.

• செவ்வாய் கிரகத்திலிருந்து வானத்தைப் பார்த்தால் நீல நிறத்தில் தெரியாது; ஆரஞ்சு நிறத்தில்தான் தெரியும்.

• ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மி.லி. ரத்தம் ஆகும்.

வியாழன், 19 செப்டம்பர், 2013

பொது அறிவுத் தகவல்கள்!

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.

* தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.                                                                              *உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.

* உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'.                                                                                      1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.

சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
* பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.

* இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.

* ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.

* மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.
* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? - எகிப்தியர்.

* புதினாவின் தமிழ்ப் பெயர் - ஈஎச்சக்கீரை

* முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் - பக்ரைன்

* ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம் - நாகலாந்து.

* பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 21

* தமிழில் `அ' என்பது எந்த எண்ணைக் குறிக்கிறது - 8

* அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.                                                        * `சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ'.

* சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

* உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.                                                                                                                  * மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.

* ஈபிள் டவரின் உயரம் 300 அடி.

* ஆமைக்கு பற்கள் கிடையாது.

* டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.

* வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.

* பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.                                                                            
* இந்தியாவின் முதல் வங்கி `தி ஹிந்துஸ்தான் பேங்க்'.

* ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் இந்தியர் மிஹிர்சென்.

* கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.

* நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.

* ஐசடோப்புகளை கண்டுபிடித்தவர் எப்.சாடி.
* இந்தியாவின் விடிவெள்ளி ராஜாராம் மோகன்ராய்.

* ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு ரகாசமுடையது.

* மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.

* காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்டன.

* மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் நீளம் 2,250 மைல்கள்.

* ஸ்ரீவெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா ஆந்திராவில் உள்ளது.                              
* உலகில் எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஒரே நாடு - இந்தியா

* பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு - இலங்கை

* உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு- ஜெர்மனி

* திராட்சை மலரை தேசிய மலராக கொண்டுள்ள நாடு - சீனா

* கண் இல்லாத உயிரினம் மண்புழு.

* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை.

* மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை.

* வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.

* வயிறும். ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல்.

* மைனா பறவையின் தாயகம் இந்தியா.

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்/தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிசம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதைவடையத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார் !! .பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!

இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

புதன், 18 செப்டம்பர், 2013

தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்

* ஆஸ்கார் விருது மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

* யானையின் துதிக்கையில் எலும்பு கிடையாது.

* நெருப்பு கோழி மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது.

* அதிகக் கேட்கும் சக்தி கொண்ட பறவை இனம் கிளி.

* மண்புழுக்களுக்கு கண், காது, தாடை, பல் போன்ற அமைப்புகள் கிடையாது.* ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

* கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.

* பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.

* மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.

* குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

* புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.

* ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.

* நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

* ஒரே சமயத்தில் அதிக முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

* மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.

* வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

* வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.

* நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.      குதிரையின் சராசரி ஆயுள்காலம், 60 ஆண்டுகள்.

நூர்ஜஹானின் இயற்பெயர், மெஹருன்னிசா.

சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம், அபிமன்யு.

அமைதியின் தூதுவர் என்று அழைக்கப்பட்டவர், ஜவஹர்லால் நேரு.

உயிர் காக்கும் உலோகம் என்று அழைக்கப்படுவது, ரேடியம்.

நோபல் பரிசை நிறுவியவர், ஆல்பிரட் நோபல்.

சனிக்கிரகத்துக்கு வளையம் உண்டு என்பதைக் கண்டறிந்தவர், கலிலியோ.

விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள், அக்டோபர் 8.

ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர், வில்லியம் ஹார்வி.

இந்திராகாந்தி முதன்முதலில் இந்தியப் பிரதமரான ஆண்டு, 1966.

டெல்லியின் பழைய பெயர், இந்திர பிரஸ்தம்.                                                                

  • வானத்தில் இருந்து பார்க்கும்போது வானவில் முழு வட்டமாகத் தெரியும்.
  • நவீன ஓவியக்கலையின் தந்தை'என்று அழைக்கப்படுபவர், பிகாசோ.
  • மோனாலிசா ஓவியத்தில் உள்ள பெண்ணுக்கு கண் புருவங்கள் கிடையாது.
  • கழுதைப்புலி, நாய் இனத்தைச் சேர்ந்தது.
  • ஈசலின் வாழ்வு ஒருநாள் மட்டுமே.                                                                            * ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம் உள்ள இடம் - கர்நாடகா

    * குருதேவ் என்று அழைக்கப்படுபவர் - ரவீந்திரநாத் தாகூர்

    * இந்தியாவின் முதுபெரும் மனிதர் - தாதாபாய் நவுரோஜி

    * இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் வந்த சீனப்பயணி - பாஹியான்

    * அக்னி, பிருத்வி ஏவுகணைகளை வடிவமைத்தவர் - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

    * இந்தியாவில் உள்ள இளஞ்சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர்

    * புயலடிக்கும் நகரம் என்று அழைக்கப்படுவது - சிகாகோ
    * டி.என்.ஏ.வை ஒட்ட வைக்க பயன்படும் நொதி - லிகேஸ் நொதி
    * முதன் முதலில் வைரசைக் கண்டறிந்தவர் - பெய்ஜரிங்க்.                  * அலாவுதீன் கில்ஜியின் அரசவைப் புலவர் - அமீர் குஸ்ரு

    * பஞ்சாபில் நடக்கும் ஒருவகை நடனம் - பாங்கரா

    * இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கி - எஸ்பிஐ

    * ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பில் பயன்படும் தத்துவம் - அணுக்கரு இணைவு

    * திட்டமிட்டு வனங்களை ஏற்படுத்துவதன் பெயர் - சில்விகல்ட்சர்

    * தடுப்பூசி முறையை முதலில் செய்து காட்டியவர் - எட்வர்ட் ஜென்னர்
    * அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் - இடாநகர்

    * தமிழகத்தில் தியாகராஜ ஆராதனை திருவிழா நடைபெறும் இடம் - திருவையாறு

    * உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை - வாடிகன் அரண்மனை

    * மூடிய விதைத்தாவரங்கள் என்று அழைக்கப்படுபவை எவை? - ஆன்ஜியோஸ்பெர்ம்கள்

    * நியூக்ளியசைக் கண்டறிந்தவர் - ராபர்ட் பிரவுன்

    * புரதச்சத்து குறைவால் உண்டாகும் நோய்கள் - க்வார்ஷியார்கர், மராஸ்மஸ்
    * இன்சாட் செயற்கைக்கோள் வளிமண்டலத்தை தொலைவில் இருந்து உணர்வதற்கும், தானியங்கி தகவல் சேகரிப்பிற்குமாக பூமிக்கு இணையாக நிலையாக அமையும் வகையில் ஆளில்லா தகவல் சேகரிப்பு மேடை 1982-ல் தொடங்கப்பட்டது.

    * புயலின் தீவிரத்தை துல்லியமாக கணக்கிடும் டாப்ளர் காலநிலை ரேடார்கள் புயல்களைக் கண்டறியும் கட்டமைப்பில் இணைக்கப்பட்டன. முதல் டாப்ளர் வகை ரேடார் சென்னையில் 2002-ல் செயல்படுத்தப்பட்டது.

    * அமெரிக்க செயற்கைக்கோளில் இருந்து புகைப்படங்களை இந்திய வானிலைத்துறை 1964-ம் ஆண்டு முதல் பெறத் தொடங்கியது.

    * வானிலையில் தகவல் குறிப்புகள் மற்றும் இன்சாட் நிழற்படங்கள் உலகளாவிய டிஜிட்டல் முறையிலான ஒளிபரப்புதல் மூலம் பெறப்படும் முறை 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.                             பெட்ரோலியத்தை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது கிடைக்கும் பொருட்கள்:

    20 டிகிரி சென்டிகிரேடு - வாயுக்கள்
    30- 130 டிகிரி சென்டிகிரேடு - பெட்ரோல்
    120- 180 டிகிரி சென்டிகிரேடு - நாப்தா
    180- 260 டிகிரி சென்டிகிரேடு - மண்ணெண்ணை
    260- 340 டிகிரி சென்டிகிரேடு - டீசல்
    340- 500 டிகிரி சென்டிகிரேடு - உயவு எண்ணை
    500 டிகிரிக்கு மேல் - பாரபின் மெழுகு, வாசலின்                                       சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? ரேய்ட்டர்.

    சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
    ஹேக்கல்.

    கங்காரூ அதிகம் உள்ள நாடு?
    ஆஸ்திரேலியா.

    கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
    முதலை.

    ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
    ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.

    மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி.

    வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
    கி பி 1890.

    உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
    ஜூன் 5.

    இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
    சூரியகாந்தி எண்ணெய்.

    தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?
    ஆக்ஸிஜன்.                                                                                                                       
    * 2010-ல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற இடம் - புதுடெல்லி

    * உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் - பீஜிங் சர்வதேச விமான நிலையம், சீனா

    * `மதராஸ்' என்ற பெயர் `சென்னை' என்று மாறிய ஆண்டு - 1996

    * ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையைக் கண்டறிந்தவர் - ஜோசப் லிஸ்டர், 1960

    * துகேலா நீர்வீழ்ச்சி எங்குள்ளது? - தென் ஆப்பரிக்கா

    * நூபியன் பாலைவனம் உள்ள நாடு - சூடான்                                                      * இடியோசையின் டெசிபல் அளவு - 110 டெசிபல்

    * தொல் தாவரவியலைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாலியோ பாட்டனி

    * பாஸ்ட் நார்கள் என அழைக்கப்படுபவை - புளோயம் நார்கள்

    * சிவஞானபோதத்தை எழுதியவர் - மெய்கண்டார்

    * பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க பயன்படும் கருவி - லாக்டோ மீட்டர்

    * ஒற்றைச் சர்க்கரைக்கு எடுத்துக்காட்டு - குளுக்கோஸ்

    * வான்கடே விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - மும்பை

    * 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள இடம்- தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகர்.                                                          * இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை எங்கு, எப்போது நடத்தியது?- ராஜஸ்தான் பாலைவனம், 1974

    * காலை நேரத்திற்கு உரிய ராகம் எது? - மேகராகம்

    * கஜுராஹோ நாட்டிய திருவிழா நடைபெறும் மாநிலம் - மத்தியப்பிரதேசம்

    * 10-வது ஐந்தாண்டு திட்ட காலம் எது? - 2002 முதல் 2007 வரை.

    * பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலின் பெயர் என்ன? - செரிக்கல்சர்.

    * கடாபி விளையாட்டு மைதானம் எங்கு அமைந்துள்ளது? - லாகூர் (பாகிஸ்தான்).                                                                                                                        * இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு, மும்பையில் டபிள்யு.சி.பானர்ஜியின் தலைமையில் நடந்தது.

    * முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர் சென்னையைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய அய்யர்.

    * திலகரால் நடத்தப்பட்ட பத்திரிகைகள், மராத்தா மற்றும் கேசரி.

    * சுதேசி நீராவிக்கப்பல்' என்ற நிறுவனத்தை தூத்துக்குடியில் தொடங்கியவர், வ.உ. சிதம்பரம்பிள்ளை.

    * ஆஷ்துரை, வாஞ்சிநாதனால் 1911-ல் மணியாச்சி ரெயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    * தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக குருகுலத்தை நடத்தியவர், வ.வே.சு. அய்யர்.

    * ஜாலியன் வாலாபாக் படுகொலை 13.4.1919-ல் நடந்தது.                         * எலிக்கொல்லியாக பயன்படும் தாவரம்- அர்ஜினியா இன்டிகா

    * தெளிவாகத் தெரியும் காட்சியின் மீச்சிறு தொலைவு- 25 சென்டி மீட்டர்

    * வானவியலைப் பற்றி படிக்கும் பிரிவு - அஸ்ட்ரானமி

    * கவீர் பாலைவனம் உள்ள நாடு - ஈரான்

    * ஐ.நா.சபையின் தலைமையகம் உள்ள இடம் - நியூயார்க்

    *மகாத்மா காந்தியின் உருவப்படம் உள்ள தபால் தலை வெளியான நாள் - 15.8.1948                                                                                                                                       * விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி- டேகா மீட்டர்

    * உலகப் புகழ் பெற்ற திலாடியோ தேசிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் - பரத்பூர்

    * ஆசியாவிலேயே மிகப்பெரிய கோட்டை - சித்தவுட் கோட்டை

    * `சிவப்பு நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் - ஜெய்ப்பூர்

    * அபு மலையின் நினைவுச்சின்னம் - அச்சல்கார் கோட்டை

    * காஷ்மீர் வரலாற்றைக் குறிக்கும் நூல் - ராஜதரங்கினி                          கண்மை பூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள்தான் ஏற்படுத்தினர். சூரிய ஒளியில் கண் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தோன்றியதுதான் கண் மை பூசும் வழக்கம்!

    தேநீரைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்தான் என்றாலும் முதன் முதலில் அன்றாட வழக்கிற்குக் கொண்டு வந்து பயன்படுத்திய பெருமை இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும்தான்!

    பறக்கும் பலூனைக் கொண்டு முதன் முதலில் வான்படையை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டைத்தான் சேரும்.

    உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழக அருங்காட்சியகம் என்ற பெருமையை ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் பெறுகிறது. 1683-ம் ஆண்டு இந்த மியூசியம் தொடங்கப்பட்டது.

    இரும்பு மற்றும் எலும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட குண்டூசிகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் சுமேரியர்கள்.

    கலங்கரை விளக்கம் முதன் முதலில் கி.மு. 500-ல் எகிப்தியர்களால் அமைக்கப்பட்டது.

    முதன் முதலில் பச்சை சிவப்பு விளக்குகளைக் கொண்டு டிராஃபிக் சிக்னல் 1868-ம் ஆண்டு லண்டனில் ஏற்படுத்தப்பட்டது.

    இந்தியாவின் முதல் தொலைபேசித் தொடர்பகம் 1851-ம் ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது.

    டாங்கு என்றழைக்கப்படும் போர் ஊர்தி முதன் முதலில் இங்கிலாந்தில் 1916-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

    முகச்சவரம் செய்து கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.

    கிளி ஜோசியம் முதன் முதலில் தோன்றியது பர்மாவில்தான்.

    விவசாயம் முதன் முதலில் தொடங்கியது தாய்லாந்து நாட்டில்தான்!  தமிழகத்தில் 1943-ல்தான் ஜவ்வரிசி இறக்குமதியானது! ஜாவா தீவுகளில் இருந்து வந்ததால், ஜாவா அரிசி என்று வழங்கப்பட்டது. பின்னர் இது ஜவ்வரிசியாக சுருங்கிவிட்டது!

    விமான விபத்து எப்படி நடந்தது என்று கண்டுபிடிக்கும் பெட்டிதான் கருப்புப் பெட்டி. இதைக் கண்டுபிடித்தவர் டேவிட் வாரன். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.

    இதயம் 60 விநாடிக்கு 72 முறை துடிக்கும். அப்படியென்றால் 15 விநாடிகளுக்கு 18 முறை துடிக்க வேண்டும். எனவேதான் நமது மணிக்கட்டின் (நாடி) நரம்புத் துடிப்பை வைத்து இதயத் துடிப்பை மருத்துவர்கள் அளந்து பார்க்கிறார்கள்.

    ஐ.நா. சபை சின்னத்தில் பூமி உருண்டையுடன் உள்ள இலை ஆலிவ் இலை.                                                                                                                                          இந்தியாவில் முதன்முதலாக அஸ்ஸாமில் 1867-ம் ஆண்டில்தான் நிலத்துக்கு அடியில் எண்ணெய்க் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.

    இந்தியாவில் முதன்முதலில் 1946-ம் ஆண்டில் சென்னையில் இந்தியாவின் திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டது.

    இந்தியாவில் முதன்முதலில் காபிரைட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் நூல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரபிரசாத் எழுதிய "சுயசரித்திரம்' என்னும் நூல்.

    இந்தியாவில் முதன்முதலில் 1962-ம் ஆண்டில் தும்பாவில் இந்திய முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.

    இந்தியாவில் மிக அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் ஜோதிபாசு (மேற்கு வங்காளம்).

    இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இருக்கும் இடம் காரக்பூர் (மேற்கு வங்காளம்).                                                                                      விண்வெளியில் முதன்முதலில் சாதனை படைத்த சாகச வீரர்களைப் பற்றிய விவரங்கள் வருமாறு:

    * உலகின் முதல் விண்வெளி வீரர், யூரிகாகரின். முதன்முதலில் பூமியை வலம் வந்த விண்வெளி வீரரும் இவர்தான். (12.4.1961)

    *முதல் விண்வெளி வீராங்கனை ரஷ்யாவைச் சேர்ந்த வாலன்டினா தெரஷ்கோவா (16.6.1963)

    *அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர், ஆலன் ஷெப்பர்ட் (5.5.1961)

    *இந்தியாவின் முதல் விண்வெளி வீரர், ராகேஷ் சர்மா (3.4.1984)

    * இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை, கல்பனா சாவ்லா (19.11.2003)

    *சீனாவின் முதல் விண்வெளி வீரர், யாங்லிவெய் (15.10.2003)              * தீக்குச்சி முனையில் உள்ள வேதிப்பொருட்கள் - ஆன்டிமனி சல்பைடு, பொட்டாசியம் குளோரைட், கந்தகம்.

    * உயர் வெப்பநிலையை அளக்க உதவும் கருவி - பைரோ மீட்டர்

    * இந்தியாவில் ரஞ்சித் விளையாட்டு மைதானம் எங்குள்ளது? - கொல்கத்தா

    * உலகிலேயே உயரமான பீடபூமி எது? - பாமீர், திபெத்

    * காந்தி நிறுவிய ஆசிரமத்தின் பெயர் - சபர்மதி

    * கனவுக்கோபுர நகரம் எது? - ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து.                             * முதன் முதலில் போரில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியவர் - திப்புசுல்தான்

    * நம் உடலைச் சுற்றி வர ஒரு துளி ரத்தத்திற்கு சுமார் ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை ஆகிறது.

    * சதுர வடிவில் ரூபாய் நோட்டை வெளியிடும் நாடு, தாய்லாந்து.

    * கழுகு, மனிதனை விட 8 மடங்கு கூர்மையான பார்வைத்திறன் கொண்டது.

    * நைல் நதியின் நீளம், 6 ஆயிரத்து 650 கிலோமீட்டர்.

    * இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தும் முறைக்கு `எம்பாம்' என்று பெயர்.                                                                                                                                       13 நாடுகளின் எல்லையைக் கொண்ட ஒரே நாடு, சீனா.

    * உலக நாடுகளின் தேசிய கொடிகளில் அதிகம் இடம்பெற்ற ஒரே நிறம் - சிவப்பு

    * `கடல் குதிரை' என்று சொல்லப்படும் மீன் இனத்தில் ஆண் மீன்களே கர்ப்பமாகின்றன.

    * லிங் இன மீன் இடும் முட்டையின் எண்ணிக்கை 16 கோடி.

    * நாய் மனிதர்களைப் போலவே கனவு காண்கிறது.

    * ஜப்பானில், ஏப்ரல் முதல் நாளை பொம்மைகள் தினமாகக் கொண்டாடுகின்றனர்.

    * இந்தியாவின் முதல் பைவ் ஸ்டார் ஓட்டல் மும்பை தாஜ்.

    * போலார் கரடிகள் இடது கை பழக்கம் உள்ளவை.

    * நோபல், மகசேசே, பாரத ரத்னா என்ற மூன்று உயர்ந்த விருதுகளைப் பெற்றவர், அன்னை தெரசா.                                                                                              
    * தயான்சந்த் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? - ஹாக்கி

    * வளிமண்டலத்தில் உள்ள இரண்டாவது அடுக்கின் பெயர் - ஸ்ட்ரட்டோஸ்பியர்

    * நுண்கிருமிகளைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாக்டீரியாலஜி

    * இத்தாலியில் உள்ள எரிமலையின் பெயர் - வெசூவியஸ்

    * பாட்னா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? - கங்கை

    * மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் - போர்ட் லூயிஸ்
    * நத்தைகள் மூன்று ஆண்டுகள் கூட விடாமல் தூங்கும்.

    *கடல் இறால் லாப்ஸ்டர்க்கு கண்களை இழக்கும் நிலை ஏற்பட்டால், உடனே அதற்கு மறுகண் முளைத்து விடும்.

    *பெண் கொசுக்கள்தான் மனிதனைக் கடித்து அவன் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

    *ஸ்ட்ராபெர்ரி ஒரு பழம் அல்ல. அது அந்தச் செடிப்பூவின் பருத்த தண்டுதான்.

    *கோலா கரடிகளின் ஆகாரம் மூங்கில் தழைகள்.

    *பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட, இரண்டு மடங்கு நீளம்.

    *கருப்பு திமிங்கலங்கள் பிறக்கும்போது வெள்ளையாக இருக்கும்.             * அமெரிக்காவில் கடிகாரக் கடைகளில் விற்பனைக்கு இருக்கும் கடிகாரங்களில் நேரம் 10-10 என்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். ஏன் இப்படி? அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் கொல்லப்பட்ட நேரத்தை நினைவுகூறும் வண்ணம் அவ்வாறு வைக்கப்பட்டிருக்கும்.

    * ஒட்டகச் சிவிங்கியின் பின் கால்கள் தான் அதனுடைய தற்காப்பு ஆகும். இது ஆபத்து காலத்தில், இந்தக் கால் மூலம் ஓர் உதைவிட்டால், அந்த உதை ஒரு சிங்கத்தைக்கூடக் கொல்லும் வலிமையுடையதாகும்.

    * சீல் எனும் கடல் வாழ் உயிரினம் கருவுற்றிருக்கும்போது எளிதில் சாப்பிடாது. தன் உடற்சத்தையே கரைத்துத் தன் வயிற்றினுள் இருக்கும் குட்டிக்குச் செலுத்தும்.

    * பெட்ரோல் என்பது பெட்ரோலியம் என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு கல் எண்ணெய் என்ற பொருள்.

    * நார்வே நாட்டில் வீடுகளின் கூரைகளில் புற்களைப் பயிரிடுகின்றனர்.

    * உடலில் உள்ள பல நோய்களையும் தண்ணீர் அருந்துவதன் மூலம் குணப்படுத்தமுடியும் என்று ஜப்பான் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

    * உலகின் மிகப் பழமையான சுரங்கப் பாதை துருக்கியில் உள்ளது. இங்கு சாமோஸ் என்ற இடத்தில் சுண்ணாம்புக் கல் மலை ஒன்று உள்ளது. இம்மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைதான் உலகின் மிகப் பழமையான சுரங்கப்பாதை. இது 1000 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது.

    * 1879-ல் இந்தியத் தபால் அட்டையின் விலை 1 பைசா.

    * லெபனான் நாட்டில் எப்போதும் கிறிஸ்துவர்களிடமிருந்து ஜனாதிபதியும், முஸ்லிம்களிடமிருந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    * மற்ற நாள்களில் நடப்பதை விட பெüர்ணமியன்று 50 சதவீதம் கொலைகளும் 100 சதவீதம் தீய சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

    * கோவாவின் தலைநகர் பஞ்சிம். அங்குள்ள இரண்டு சாலைகளின் பெயர்கள்: ஜூன் 18-ம் தேதி சாலை, ஜனவரி 31-ம் தேதி சாலை.

    * சிம்பன்ஸி குரங்குகளுக்கும் மனிதனுக்கும் ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆய்வின்படி 98.4 சதவீதம் ஒரே உணர்வுகள் தான் இருக்கிறது. மற்றபடி நாம் என்னென்ன செய்கிறோமோ, அத்தனையும் அவை செய்யும். பேசமட்டும் தெரியாது.                                                                                                        * நேபாளத்தில் பெரும்பாலும் இரவில்தான் மழை பெய்யும்.

    * சோமாலியா நாட்டு சிங்கங்களுக்கு பிடரி மயிர் கிடையாது.

    * நாகப்பாம்பின் நச்சு மயிலைப் பாதிக்காது.

    * கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது.

    * கப்பல் கிழக்கில் சென்றால் அதன் எடை குறையும்.

    * கோலப் மைதானத்தில் 18 துளைகள் உள்ளன.

    * உலகில் அதிகமானவர்களைப் பாதிக்கும் வியாதி என்ன தெரியுமா? பல்வலி!                                                                                                                                
    நிலத்திலும், நீரிலும் மைல் என்ற அளவு பயன்படுகிறது. நிலத்தின் மைலுக்கும், கடலின் மைலுக்குமுள்ள வித்தியாசம் தெரியுமா?

    நிலத்தில் ஒரு மைல் - 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6080 அடி.

    * சுண்டெலியின் ஆயுட் காலம் 3 வருடங்கள்

    * கரையான் அரிக்காத மரம் தேக்கு

    * பாம்பிற்கு ஒரு நுரையீரல் மட்டுமே உண்டு.

    * தக்காளியின் தாயகம் அமெரிக்கா.

    * நமது உடலின் பெரிய சுரப்பி கல்லீரல்.
    * இங்கிலாந்து ஈரான் நாடுகளின் தேசிய சின்னம், ரோஜாமலர்.

    * நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டதாகும்.

    * நில நடுக்கத்தின் கடுமையை துல்லியமாக அறிந்து கொள்ள `ரிக்டர் ஸ்கேல்' என்ற கருவி பயன்படுகிறது.

    * இந்திய ரூபாய் நோட்டுகள் `நாசிக்' நகரத்தில் அச்சடிக்கப்படுகிறது.

    * உலகிலேயே மிகப் பழமையான பல்கலைக்கழகம் `மொராக்கோ' நாட்டில் உள்ளது.

    * சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முதல் தமிழ் புத்தகம் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய `தமிழ்இன்பம்'.                                                                                                   
    * மண்புழுவுக்கு கண்கள் கிடையாது.

    * இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் நடிகர் ஷாருக்கான நடித்த `தில் வாலே துல்ஹனியா லே ஜாயங்கே''

    * தமிழ் பத்திரிகையில் கார்ட் டூன் படங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் - பாரதியார்

    * 1930-ம் ஆண்டு முதல் உலக கால்பந்து ஆட்டம் ஆடப்படுகிறது. அனைத்து உலக கால்பந்தாட்டத்திலும் பிரேசில் அணி பங்கேற்றுள்ளது.

    * இந்தியாவில் இரு தலைநகரங்கள் கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர்.

    * ஆக்டோபஸின் ஆயுட் காலம் 3 ஆண்டுகள்.
    * உலோகங்களில் அதிக எடை கொண்டது அலுமினியம்தான். ஒரு கனசென்டி மீட்டருக்கு 22.6 கிராம் எடை உடையது.

    * பிரபல துப்பறியும் நூல் ஆசிரியரான அகதா கிறிஸ்டி எழுதியுள்ள 87 நாவல்களும் 103 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகி உள்ளது.

    * ராஜநாகத்தின் விஷம் மிகக் கொடியதாகும். அதன் ஒரு கிராம் விஷம் 150 பேரை கொல்ல போதுமானது.

    * உலகின் மிகப்பெரிய கண்ணாடி சன்னல் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருப்பதுதான். அதன் நீளம் 300 அடி. உயரம் 23 அடி.

    * இந்தியாவில் இருந்து கொண்டே ஆங்கில இலக்கியம் எழுதி பிரபலமானவர் ஆர்.கே.நாராயணன்.                                                                        
    * வியர்வையில் கந்தகச் சத்து இருப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுத்துப் போய்விடுகின்றன.

    * கரையான் அரிக்காததும், காளான் உண்டாகாததும், இரும்புத்துரு ஏறாததும் தேக்குமரம் மட்டுமே.

    * சீட்டுக்கட்டில் உள்ள 4 ராஜாக்கள் டேவிட், சார்லி மாக்னி, அலெச்சாண்டர், ஜுலியஸ் சீசர்.

    * சீட்டுக்கட்டில் உள்ள 4 ராணிகள் கிளியோபாட்ரா, எஸ்தர், ஷிபா, போடிஸியா.

    * ஈ, ஒரு நிமிடத்தில் 2 ஆயிரம் தடவை இறக்கை அடித்துப் பறக்கிறது.

    * பாலைவனத்தில் வளரும் எல்லா செடிகளுக்கும் முட்கள் இருக்கும்.
    நாணயங்கள்

    ஆஸ்திரியா - ஷில்லிங்
    அல்பேனியா - லெக்
    அல்ஜீரியா - தினார்
    கனடா - டாலர்
    சிலி - பிசோ
    லாவோஸ் - கிப்
    மாலத்தீவு - ருபியா
    மொராக்கோ - டிர்காம்
    ஈரான் - ரியால்
    நார்வே - கிரோன்                                                                                                       கணிதத்தில் பூஜ்ஜியத்தை சேர்த்தவர் - ஆர்யபட்டர்.

    ஆசியாவிலேயே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை அமைந்துள்ள இடம் - வண்டலூர்.

    நானோமீட்டர் என்ற அளவைக் கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் இன்ஸ்டினா
    * உலகிலேயே குரங்குகளுக்குப் பள்ளிக்கூடம் உள்ள நாடு - தாய்லாந்து.

    * நெருப்புக் கோழிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள்.

    * முட்டாள் தினம் கொண்டாடும் ஏப்ரல் முதல்நாளில் ஜப்பானியர்கள் பொம்மைகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.

    * எந்த வயதில் பல் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் பல் முளைக்கும் உயிரினம் சுறா மீன்கள்.

    * தமிழ்நாட்டின் அரசு வரிவிலக்குப் பெற்ற முதல் திரைப்படம் கப்பலோட்டிய தமிழன்.

    * நோபல், மகசேசே, பாரதரத்னா ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் பெற்றவர் அன்னை தெரசா.
    * தவளைகள் கண்கள் மூலம் சத்தத்தை கேட்கின்றன.

    * மாறு குரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.

    * ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உள்ள நாடு சுவிட்சர்லாந்து.

    * இரவைவிட பகலில்தான் மேகங்கள் வேகமாக நகருகின்றன.                 * மோனலிசா ஓவியம் இடதுகையால் வரையப்பட்டது.

    * குழந்தைப் பாடல்களை இயற்றிய முதல் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

    * சிவப்பு ரோஜா நகரம் எனப்படுவது ஜெய்ப்பூர்.

    * சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் பிறந்த மாநிலம் லூ.                               * மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் - 2ம் நாள் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    * உலகிலேயே அதிக மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற சிரபூஞ்சி (மேகலாயா) நகரம் சோக்ரா என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

    * மனித கருவை ஆய்வுக்கு அனுமதித்துள்ள உலகின் முதல் நாடு இங்கிலாந்து.                                                                                                               * குதிரையின் கண் எதிரெதிர் திசையில் அசையும்.

    * மனநோய் மருத்துவ முன்னோடி சிக்மெண்ட் பிராய்டு.

    * ஐம்பது வயதுக்கு மேல் சுவை உணரும் ஆற்றல் குறையும்.

    * எலிகள் இசையை விரும்புகின்றன.

    * உலகின் பெரிய பூச்சி கோலியாத் வண்டுதான்.

    * அடிபட்ட கழுகு உயிர்போகும் வரை போராடும்.

    * கார்ப்ஸ் மீனின் ஆயுள் ஐம்பது வருடம்.

    * வெள்ளாடு பசுவைவிட அதிக பால் தரும்.

    * ராக ஆலாபனை இந்திய இசைக்கு மட்டுமே உண்டு.

    * உலகின் மிகப்பெரிய எரிமலை கொடபாக்சி.                                                    * பச்சோந்தியின் நாக்கு உடலின் நீளத்தைப்போல் இரு மடங்கு இருக்கும்.

    * விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு நாய். அதன் பெயர் லைகா.

    * தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே விலங்கு மனிதன்தான்.

    * யானையின் வெட்டுப் பற்களே அதன் தந்தங்கள்.

    * நெருப்புக்கோழியின் முட்டை 22 கோழி முட்டைகளுக்குச் சமம்.

    * நீலத் திமிங்கலத்தின் இதயம் ஒரு மனிதன் உயரத்திற்கு இருக்கும்      * இந்தியாவில் ஆங்கிலேயக் கல்வியைத் தொடங்கியவர் வில்லியம் பென்டிங் பிரபு.

    * ஆயுள் தண்டனை என்பது 14 வருடங்கள்.

    * உலகில் தாய் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டினர்.

    * நாம் பிறந்த பின் நம் உடலில் வளராமல் இருக்கும் உறுப்பு கண்ணின் கருவிழி.

    * அமெரிக்க இந்துக் கோவில்களில் பாதாம் பருப்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது.                                                                                                         * டிஸ்னி வேர்ல்டு அமைந்துள்ள ஜப்பான் நகரம் டோக்கியோ.

    * ராஜராஜன் விருதை உருவாக்கிய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

    * அமெரிக்காவின் சொர்க்கத் தீவு என அழைக்கப்படுவது ஹவாய் தீவு.

    * இருபதாம் நூற்றாண்டில் துணிச்சல் நிரம்பிய முதல் மனிதராகக் கருதப்பட்டவர் காந்திஜி.

    * கூரியர் சர்வீஸ் முதன் முதலில் தோன்றிய நாடு இங்கிலாந்து.

    * ரஷ்யமேதை காரல்மார்க்சின் கல்லறை லண்டனில் உள்ளது.

    * பின்கோடு முறைக்கு அமெரிக்காவில் `ஜிப்' என்று பெயர்.                  
    உலகில் மிகப்பெரிய 5 பாலைவனங்களும் அதன் பரப்பளவும்...

    * சகாரா பாலைவனம் (வடஆப்பிரிக்கா) - 90,64,650 ச.கி.மீ

    * அரேபியன் பாலைவனம் (மத்திய கிழக்கு ஆசியா) - 25,89,900 ச.கி.மீ

    * கோபி (சீனா) - 12,94,950 ச.கி.மீ

    * படகோனியன் (அர்ஜென்டினா) - 6,73,374 ச.கி.மீ

    * கிரேட் விக்டோரியா (ஆஸ்திரேலியா) - 6,47,475 ச.கி.மீ.
    * பாஸ்பரசை கண்டுபிடித்தவர் - பிராண்ட் (1669)

    * ரேடியத்தை கண்டுபிடித்தவர் - கிïரி (1898)

    * பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் - டேவி (1807)

    * ரேயானை கண்டுபிடித்தவர் - கார்டனேட்

    *மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - கிர்க்பாடிரிக் மாக்மிலென் (1839-40)

    *மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் - டெய்ம்லர் (1885)                 * `எஸ்கிமோ' என்ற சொல்லுக்கு உணவைப் பச்சையாகத் தின்பவர்கள் என்று பொருள்.

    * `செப்டம்பர் 27' உலகச் சுற்றுலா நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    * டெல்லி, ஆக்ரா, ஜெய்பூர் இந்த மூன்று ஊரையும் சேர்த்து `தங்க முக்கோணம்' என்கிறார்கள்.