வியாழன், 19 செப்டம்பர், 2013

பொது அறிவுத் தகவல்கள்!

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு, ஜெர்மனி.

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது `பெட்ரோலியம்'.

* தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.                                                                              *உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.

* உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமெரிக்காவில் உள்ள `டொராண்டோ உயிரியல் பூங்கா'.                                                                                      1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.

சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் இருந்து இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இருந்து இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
* பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்த ஒரே அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன்.

* இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் தாராப்பூரில் அமைக்கப்பட்டது.

* ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.

* மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.
* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்? - எகிப்தியர்.

* புதினாவின் தமிழ்ப் பெயர் - ஈஎச்சக்கீரை

* முத்துக்களின் தீவு என்றழைக்கப்படும் நகரம் - பக்ரைன்

* ஒரே ஒரு ரெயில் நிலையம் கொண்ட இந்திய மாநிலம் - நாகலாந்து.

* பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 21

* தமிழில் `அ' என்பது எந்த எண்ணைக் குறிக்கிறது - 8

* அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.                                                        * `சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே `குங்குமப்பூ'.

* சிங்கப்பூரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடலுக்குள் கண்ணாடி மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

* உலகிலேயே மிக நீளமான தாழ்வாரம் உள்ள இடம் ராமேஸ்வரம். 4 ஆயிரம் அடி நீளமுள்ளது.

* 1941-ம் ஆண்டு இங்கிலாந்தில் முதல்முதலாக ஜெட் விமானம் பறக்கவிடப்பட்டது.                                                                                                                  * மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.

* ஈபிள் டவரின் உயரம் 300 அடி.

* ஆமைக்கு பற்கள் கிடையாது.

* டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.

* வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.

* பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.                                                                            
* இந்தியாவின் முதல் வங்கி `தி ஹிந்துஸ்தான் பேங்க்'.

* ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் இந்தியர் மிஹிர்சென்.

* கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் கெப்ளர்.

* நோபல் பரிசை ஏற்படுத்தியவர் ஆல்பிரட் நோபல்.

* ஐசடோப்புகளை கண்டுபிடித்தவர் எப்.சாடி.
* இந்தியாவின் விடிவெள்ளி ராஜாராம் மோகன்ராய்.

* ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு ரகாசமுடையது.

* மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.

* காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்பு பட்டங்கள் பட்டுத் துணியால் செய்யப்பட்டன.

* மிகப்பெரிய விரிகுடாவான வங்காள விரிகுடாவின் நீளம் 2,250 மைல்கள்.

* ஸ்ரீவெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா ஆந்திராவில் உள்ளது.                              
* உலகில் எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஒரே நாடு - இந்தியா

* பழங்காலத்தில் சேரன் தீவு என்று அழைக்கப்பட்ட நாடு - இலங்கை

* உலகில் அதிக அருங்காட்சியங்கள் உள்ள நாடு- ஜெர்மனி

* திராட்சை மலரை தேசிய மலராக கொண்டுள்ள நாடு - சீனா

* கண் இல்லாத உயிரினம் மண்புழு.

* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை.

* மூக்கில் பல் இருக்கும் விலங்கு முதலை.

* வயிற்றில் பல் இருக்கும் உயிரினம் நண்டு.

* வயிறும். ஜீரண உறுப்பும் இல்லாத உயிர் ஈசல்.

* மைனா பறவையின் தாயகம் இந்தியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக