வெள்ளி, 20 செப்டம்பர், 2013

* மிகச்சிறிய முட்டைகளை இடும் பறவை ஹம்மிங் பறவை.

* அதிகமாக தேசம்விட்டு தேசம் செல்லும் பறவை ஆர்க்டிக்.

* பறவைகளில் மிகவும் அறிவு கூர்ந்தவை ப்லூடிட்.

* மிக அழகான இறக்கைகளை கொண்ட பறவை, சொர்க்கப் பறவை (வடஆஸ்திரேலியா).                                                                                                                    * டெல்லி, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

* கல்கத்தா, ஹுக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது.

* பிரெஸ்பூர், சட்லெஜ் நதிக்கரையில் அமைந்துள்ளது,

* கோமதி நதிக்கரையில் லக்னோ அமைந்துள்ளது.

* தபதி நதிக்கரையில் சூரத் நகர் அமைந்துள்ளது.

* கெய்ரோ நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

* ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள நகர் ஸ்ரீநகர்.

* கோதாவரி நதிக்கரையில் நாசிக் அமைந்துள்ளது.                                                    * நெதர்லாந்தில் கைதூர்ன் கிராமத்தில் போக்குவரத்துக்கு சாலைகளே கிடையாது, கால்வாய்களே உதவுகிறது.

* கையெழுத்து மூலம் ஒருவரது குணாதிசயத்தை கணிக்கும் முறைக்கு `கிராபாலஜி' என்று பெயர்.

* நிலவில் நடப்பதைவிட ஓடுவது எளிதானது.

* மனிதனின் கண்களால் 17 ஆயிரம் விதமான வண்ணங்களைப் பிரித்து அறிய முடியும்.

* இந்திய எல்லைப் பாதுகாப்பு படையிடம் போர்ப் பயிற்சி அளிக்கப்பட்ட 700 ஒட்டகங்கள் உள்ளன.

* பேரரசர் அலெக் சாண்டர், தன் படைவீரர்கள் எதிரிகளிடம் சிக்காமல் இருக்க கட்டாயம் முகச்சவரம் செய்திருக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.         * இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்கலா வெங்கையா.

* இந்திய மொழிகளில் முதன் முதலில் நூல் அச்சான மொழி `தமிழ்'. அச்சான நூல் விவிலியம்.

* இந்திய பறவைகளில் மிகவும் உயரமானது `சாரஸ் கொக்கு' (6 அடி.)

* இந்தியாவில் பேசப்படும் மொழிகள் ஏறக்குறைய 1600.

* இந்தியாவில் ஓடும் மிக நீளமான நதி கங்கை.

* நெருப்புக் கோழி `ஒட்டகப் பறவை' என்றும் அழைக்கப்படுகிறது.

* `வைட்டமின் பி`யின் வேதிப் பெயர் தயமின்.                                                             * ஈக்களுக்கு பற்கள் இல்லை.

* தேளுக்கு காதுகள் இல்லை.

* மண்புழுவுக்கு கண்கள் இல்லை.

* வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாய் இல்லை.

* நாய்க்கு வியர்ப்பது இல்லை.

* சிலந்திக்கு எலும்புகள் இல்லை.                                                                                     * ஆண்டுக்கு 3651/4 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்.

* இந்தியாவில் முதன் முதலாக எஸ்.டி.டி. அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1959.

* உலகிலேயே அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் லெனின்.

* பைசா கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.

* மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - 3

* இரண்டு தேசிய கீதங்களை கொண்ட நாடு `ஆஸ்திரேலியா'                                    
*ஆங்கில உயிரெழுத்துக்கள் ஐந்தும் இடம் பெற்ற மிகச்சிறிய வார்த்தை Education.

* சீனாவிலும் ஒரு சாய்ந்த கோபுரம் உள்ளது. அதன் பெயர் டைகர்பகோடா. உயரம் 47 மீட்டர்.

* உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் இந்தியாவில்தான் தொடங்கப்பட்டது.
* உலகிலேயே அதிக மருத்துவர்கள் உள்ள நாடு ரஷ்யா.

* ஒரு மின்சார பல்பு 750 முதல் 1000 மணி நேரம் வரை எரியும் திறன்கொண்டது.

* தண்ணீர் இல்லாவிட்டாலும் ஒட்டகத்தைவிட அதிக காலத்துக்கு தாக்குப்பிடித்து வாழும் சக்தி எலிகளுக்கு உண்டு.                                                             * நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ்.

* அமெரிக்க அதிபரின் பொதுவான கார் எண் 100.

* `சி' என்ற ரோமன் எண், 100 என்ற அரபு எண்ணைக் குறிக்கும்.

* மனித உடலில் 100 மூட்டுகள் உள்ளன.

* கூகோல் என்ற எண்ணிற்கு 100 பூச்சியங்கள்.                                                                ஒலி அறிவோம்

நாய் குரைக்கும் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்தானே குட்டீஸ். அதேபோல மற்ற சில விலங்குகள் எழுப்பும் ஒலியை எப்படி அழைக்க வேண்டும் என்று தெரியுமா?

பன்றி - உறுமுகின்றது

கன்றுக் குட்டி - கூப்பிடுகிறது

கழுதை - கத்துகிறது

குதிரை - கனைக்கிறது

சிங்கம் - கர்ஜிக்கிறது

புலி - உறுமுகின்றது

யானை - பிளிறுகிறது

ஓநாய் - ஊளையிடுகின்றது

மயில் - அகவுகின்றது                                                                                                                    
* வில்லியம் பிட் இங்கிலாந்து பிரதமரான போது அவருக்கு வயது 24.

* வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ம் ஆண்டு வெளிவந்தபோது அவரின் வயது 22.

* மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லர் `த ஸ்டோரி ஆப் மை லைப்' வெளியிட்டபோது அவரின் வயது 22.

* மார்க் ஸ்பிட்ஸ் ஒலிம்பிக்கில் 7 தங்க மெடல்களை வாங்கியபோது அவரது வயது 22.

* தத்துவத்தின் தந்தை சார்லஸ் டார்வின் பரிணாமக் கொள்கையை கண்டறிந்தபோது வயது 22.

* மார்டின் லூதர்கிங் மதச் சீர்திருத்தத்தை விதைத்தபோது அவரின் வயது 21.                                                                                        * தட்சிண கங்கோத்திரி என்றழைக்கப்படுவது கோதாவரி.

* டால்பின் மூக்கு என்றழைக்கப்படுவது விசாகப்பட்டினம்.

* இளஞ்சிவப்பு நகரம் என்றழைக்கப்படும் நகரம் ஜெய்ப்பூர்.

* குதிரேமுக் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் கர்நாடகா.

* தமிழகத்தில் கார்பைடு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் அரவங்காடு.

* தமிழகத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் காரைக்குடி.

* பரப்பளவில் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான்.

* குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் நகரம் சிவகாசி.

* கிர் காடுகள் அமைந்துள்ளது குஜராத்.

* தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நகரம் பாளையங்கோட்டை.

* ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் உள்ள சரணாலயம் காசிரங்கா.

* ஸ்ரீஹரிகோட்டா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.

* தும்பாராக்கெட் ஏவுதளம் கேரளாவில் உள்ளது.                 உலகில் மிகச்சிறிய கடல் ஆர்ட்டிக் கடல். இதன் பரப்பளவு 54,40,197 சதுர மைல்.

கடல் ஆமை ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகள் இடும்.

சீனாவின் நெடுஞ்சுவர் கி.மு. 214-ல் கட்டி முடிக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய விரிகுடா வங்காள விரிகுடா. இதன் நீளம், 2250 மைல்.

இமயமலைத் தொடரின் நீளம் 2313 கிலோமீட்டர்.                      * நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி அகோ மீட்டர்.

* இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகளைத் தாக்க லட்சக்கணக்கான வவ்வால்களைப் பயன்படுத்திய நாடு அமெரிக்கா.

* ஆசியாவின் வைரம் என்ற அழைக்கப்படும் நாடு இலங்கை.

* மனிதனைப்போல் நடக்கும் ஒரே பறவை பென்குயின்.

* அட்லாண்டிக் கடலை முதன் முதலில் விமானம் மூலம் கடந்து சாதனை புரிந்தவர் கேப்டன் லின்ட்பெர்க் (1927).

* நெதர்லாந்து நாட்டின் தேசிய விலங்கு நாய்.                       
* நாணயங்கள் தயாரிக்கும் இடத்தின் பெயர் `மின்ட்' எனப்படுகிறது.

* எலும்புக் கூடில்லாத விலங்கு `ஜெல்லி'

* யானை படையுடன் ஆல்ப்ஸ் மலையை கடந்தவர் `ஹன்னிபால்'

* நீண்ட தேசிய கீதம் கொண்ட நாடு 'கிரேக்கம்'

* உலகிலேயே அதிக எடையுள்ள உயிரினம் 'நீலத்திமிங்கலம்'

* `துருப்பிடித்த கோள்' என அழைக்கப்படுவது `செவ்வாய்'.
 * கார்கள் அதிகம் உள்ள நகரம் - நியூயார்க்.

* டாக்சி (வாடகைக் கார்கள்) அதிகம் உள்ள நகரம் - மெக்சிகோ.

* வெள்ளை பெயிண்டில் சில துளிகள் கறுப்பு பெயிண்ட் கலந்தால் மங்கலாவிடும் என்று நீங்கள் எண்ணினால் அது தவறு, மேலும் வெண்மை அதிகரிக்கும்.

* ஆஸ்திரேலியாவை ஏழு பறவையின் தாயகம் என்று அழைக்கிறார்கள்.

* தண்ணீரைவிட மனித ரத்தம் ஆறு மடங்கு அடர்த்தியானது.                                                                                             *துர்க்மேனிஸ்தான் நாட்டிலுள்ள `காராகும்' கால்வாய், உலகிலேயே மிக நீளமான பாசன கால்வாய் ஆகும். இதன் நீளம் 1,300 கிலோமீட்டர்.

*விண்வெளிப் பயணங்களில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட் களில் `குளோரெல்லா பைரெனோஸ்டோஸாவும் இடம் பெறும். இது கரியமில வாயு மற்றும் உடலின் மற்றக் கழிவுகளை நீக்கவும் மற்றும் மனிதனின் சிறுநீரைச் சிதைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

* இந்தியாவின் உயரிய இலக்கிய விருது ஞானபீடம்

* ஒரு லிட்டர் கடல் நீரில் 30 கிராம் உப்பு உள்ளது.

* உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவிலுள்ள லெனின் நூலகம்.

* இந்தியாவில் மிக உயரமான கோபுரம் டில்லியிலுள்ள குதுப்மினார்.

* மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நாடு மொனாகோ.

* தார் பாலைவனம் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

* உலகின் மிக குளிரான பிரதேசம் சைபீரியா.                                  மிக உயர்ந்த சிகரங்கள்

ஆசியா - எவரெஸ்ட் (8,848 மீட்டர்)

ஆப்பிரிக்கா - கிளிமஞ்சரோ (5,963 மீட்டர்)

வடஅமெரிக்கா - மெக்கின்லே (6,194 மீட்டர்)

தென் அமெரிக்கா - அகோன்காகுவா (6,959 மீட்டர்)

ஐரோப்பா - எல்பஸ் (5,633 மீட்டர்)

அண்டார்டிகா - வின்சன் மாசிப் (4,897 மீட்டர்)                               * இந்தியாவின் முதல் ரெயில் , 1884-ம் ஆண்டு ஆகஸ்ட்-15-ந்தேதி ஹவுராவில் இருந்து ஹூக்ளிக்கு இயக்கப்பட்டது.

* இந்தியாவை தாயகமாகக் கொண்ட தாமரை மலர் கி.மு.6-ம் நூற்றாண்டில் எகிப்தில் அறிமுகமாகி உலகெங்கும் பரவியது.

* இந்தியாவில் போர் நினைவு அருங்காட்சியகம் டெல்லியில் உள்ளது.

* அண்டார்டிகா ஐஸ் தரையின் பரப்பானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பரப்பைப்போல இரு மடங்காகும்.

* சுவிட்சர்லாந்தில் ஒலிம்பிக் பொருட்கள் அருங்காட்சியகம் உள்ளது                                                                         * கரப்பான் பூச்சிக்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட `ஓமட்ரீயம்' எனப்படும் சிறு கண்கள் காணப்படுகின்றன.

* யானை ஏறக்குறைய 30 வயதில் இனப்பெருக்க பருவத்தை எட்டுகிறது. இதன் கற்ப காலம் 22 மாதங்களாகும்.

* மனித குடலின் நீளம் - 8 மீட்டர்.

* அம்மை நோய்க்கு காரணம் - வைரஸ்.

* ஒரு மனிதன் 50 ஆண்டு வாழ்நாளில் தூங்கி கழிக்கும் நாட்கள் 6 ஆயிரம்.

* கங்காரு 13 மீட்டர் தூரம் தாண்டும் சக்தி படைத்தது.              * இந்தியாவில் 5 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

* அதிக அளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் இந்திய மாநிலம் - கர்நாடகா.

* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு இஸ்ரேல்.

* பெண்களுக்கு 1928-ம் ஆண்டு முதல் ஓட்டுரிமை வழங்கப்பட்டது.

* ஜப்பான் நாட்டு கொடியில் 2 நிறங்கள் உள்ளன.

* இந்தியாவில் தபால் தலை ஒட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1838.                                                  * தாவரங்களின் முக்கிய ஹார்மோன் `ட்ரிப்டோபேன்'. இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.

* மனிதன் தினசரி உண்ணும் உணவில் 20 மில்லிகிராம் துத்தநாகம் கிடைக்கிறது.

* ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக்.

* குறிஞ்சி மலர் ஸ்ட்ராபிலாந்திள் இனத்தைச் சேர்ந்ததாகும்.

* சந்திரனில் உள்ள மிகப்பெரிய மலை 'லீப்னிட்ஸ்'. இதன் உயரம் 35 ஆயிரம் அடி.

* `ராயல் அகாடமி ஆப் சைன்ஸ்' என்ற குழுதான் விஞ்ஞானத் துறைக்கான நோபல் பரிசை அளிக்கிறது.           
* மனிதன் சிரிப்பதைப் போலவே குரலெழுப்பும் பறவை குக்கு பெர்ரா (ஆஸ்திரேலியா).

* சுறா மீனிற்கு 2 கருப்பைகள் உள்ளன.

* பெட்ரோலில் ரப்பர் கரையும்.

* தாயின் பெயரையே தன் புனைபெயராக வைத்துக் கொண்டவர் ஓவியர் பிகாசோ.

* தாஜ்மகால் என்ற சொல்லுக்கு அரசியின் மணிமுடி என்று பெயர்.

* சீன மொழி டைப்ரைட்டரில் 1,500 எழுத்துக்கள் உள்ளன.

* ஹிட்லரை சந்தித்த தமிழ் விஞ்ஞானி அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு.

* கண்தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகிறது.

* எலிகள் பிறந்து கண்விழிக்க 14 நாட்கள் ஆகும்.

* விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு நைட்ரஜன்.

* உலகில் முதன் முதலில் சர்க்கஸ் ரோமன் நாட்டில் தோன்றியது.

* உலகில் முதலில் குடையை பயன்படுத்தியவர்கள் சீனர்கள்.

* உலகில் முதலில் வெற்றிலை பயரிட்ட நாடு மலேசியா.

* முதலில் உலக வரை படத்தை வரைந்தவர் தாலமி.
* அமெரிக்காவில் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு 2 சதவீதம்.

* இந்தியாவில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 62 சதவீதம்.

* சீனாவில் வேளாண்மை துறையின் பங்களிப்பு 73 சதவீதம்.

* இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் விவசாயிகளின் பங்கு மூன்றில் 2 பங்காகும். இந்தியா பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைக்கு இங்கு அதிக விவசாயிகள் இருப்பதுவும் ஒரு காரணமாகும்.                                                         * கீர்த்தி சக்ரா விருது ராணுவத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* ஆரியபட்டா விருது விண்வெளி அறிவியல் துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

* டாக்டர் பி.சி.ராய் விருது மருத்துவ துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.                                   * இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட முதல் பெண்மணி சிவகங்கை சீமையின் அரசியான வேலுநாச்சியார்தான்.

* இந்தியாவில் முதல் பொது தேர்தல் 1951 அக்டோபர் 21-ந்தேதி நடந்தது.

* இந்தியாவில் முதல் திரைப்படம் (ராஜா அரிச்சந்திரா) வெளியிடப்பட்ட நாள் 3.5.1913

* இந்தியாவில் முதல் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்ட ஆண்டு 1927.

* இந்தியாவின் முதல் செய்தித்தாள் 1780-ல் வெளியிடப்பட்டது. கல்கத்தாவில் இருந்து வெளிவந்த பெங்கால் கெஸ்ட் இதழ்தான் அந்த முதல் இதழாகும்.

* இந்தியாவில் முதன்முதலாக மொபைல் டெலிபோன் சேவை தொடங்கப்பட்ட நாள் 31-12-1985                                          * முதன் முதலில் மூக்கு கண்ணாடிகளை உருவாக்கியவர் `ரோஜர் பேகன்'.

* நோய்கள் கிருமிகளால்தான் உருவாகின்றன என்பதை உறுதி படுத்தியவர் லூயி பாஸ்டர்.

* அணுக்கரு சிதைவைக் கண்டறிந்தவர், ரூதர்போர்டு.

* அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர் அலக்ஸி லியோனவ்.

* ஞாபகத்திறன் உடைய `எட்சாக்' கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர், வான் நியூமன்.                                                        * சீனாவில் பொதுவுடமை புரட்சியை ஏற்படுத்தியவர் மாசேதுங்.

* பழனிமலையின் இயற்பெயர் `திருஆவினன்குடி'.

* குஜராத்தில் 4 முறை முதல் அமைச்சராக இருந்தவர் மாதவ் சிங் சோலங்கி.

* உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.

* தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுவது போடிநாயக்கனூர்.

* யானைகளுக்கான முதல் மருத்துவமனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது.                                                     * 6 ஆயிரம் மீட்டர் முதல் 12 ஆயிரம் மீட்டர் உயரத்தில் காணப்படும் மேகங்கள் சைரஸ் எனப்படுகிறது.

* 2 ஆயிரத்து 100 மீட்டர் முதல் 6 ஆயிரம் மீட்டர் வரையான சராசரி உயரங்களில் காணப்படும் மேகங்களின் பெயர் அல்டோஸ்.

* 2 ஆயிரத்து 100 மீட்டர் வரையான தாழ்வான மேகங்கள் ஸ்டேரடஸ்.

* பார்வை தெரியக்கூடிய மூடுபனி மிஸ்ட் எனப்படும்.

* ஒரு கிலோமீட்டரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பார்வை தெரியக்கூடிய தூசுகளால் ஏற்படக்கூடிய புகை மூட்டம் ஹேஸ்.

* மூடுபனி என்பது மிகத்தாழ்வான ஸ்டேரடஸ் மேகமாகும்.                                                                                                       ஒட்டகச்சிவிங்கி தலையை திருப்பாமலே பின்புறம் வருபவர்களை பார்க்கும் திறன் உடையது. அதன் கண்கள் அந்த அளவு சுழலும்.

மிருகங்களிலேயே ரத்த ஓட்ட வேகம் அதிகமுள்ள பிராணி ஒட்டகச்சிவிங்கி.

சிங்கத்தைக்கூட காலால் உதைத்தே துரத்திவிடும்.

ஒட்டகச்சிவிங்கியால் ஒலியெழுப்ப முடியாது.

ஒட்டகச்சிவிங்கி தினமும் அரைமணி நேரத்துக்கு குறைவாகவே தூங்குகின்றன.                                                               
1960-ம் ஆண்டில் பறவையினங்கள் அழிந்துபோகாமல் தடுப்பதற்காக டோக்கியோ நகரில் பறவை பாதுகாப்புக்கான சர்வதேச கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு பறவையை தனது தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படிதான் `மயில்' இந்தியாவின் தேசியப்பறவை ஆயிற்று.
* உலகில் முதன் முதலில் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்த நாடு ஜப்பான்.

* முதல் ஹைட்ரஜன் பலூனை தயாரித்தவர் சார்லஸ்.

* தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் ஜான்வாக்கர்.                           * இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஈடன் கார்டன் (கொல்கத்தா).
* குதுப்மினார் கட்டிடத்தின் உயரம் 240 அடிகள்.

* மாவீரன் பகத்சிங் மரணத்தின் விளிம்பில் கடைசியாய் சொன்ன வார்த்தைகள், இன்குலாப் ஜிந்தாபாத்.

* ஐ.நா.சபை வெள்ளி விழாவில் இசைக்கச்சேரி நடத்திய கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார்.

* இந்தியாவின் தேசிய பானம் தேநீர்.

* முதன் முதலில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் மணக்குடவர்.                                                                                                 * அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ் போன்ற காளான்களை நாம் உணவாக உட்கொள்ளலாம்.

* அமானிடா மஸ்காரியா, அமானிடா பல்லோய்ட்ஸ் போன்ற காளான்கள் நச்சுத்தன்மை அதிகம் கொண்டவை. இவற்றை உண்ண இயலாது.

* கிளாவிஸ்செப்ஸ் பர்பர்யா என்பது `பகற்கனவு பூஞ்சை' என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்கு பிரமை உணர்வை ஏற்படுத்தும்.                                                                              உலகிலேயே நதியின் நடுவே அமைந்துள்ள தீவு மஜ்லி (பிரம்மபுத்திரா நதி).

அஸ்கார்பிக் அமிலம் எனப்படுவது வைட்டமின்-சி

இந்தியாவிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் செயற்கை கோள் ஜி-சாட்.

சுரப்பிகளில் பிரதானமானது பிட்ïட்டரி சுரப்பி.

அமேசான் நதி தென் அமெரிக்காவில் பாய்கிறது.

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு டென்மார்க்.                          பிரபலமான புல்வெளிகளும், அவை இருக்கும் நாடுகளும் வருமாறு...

காம்பாஸ் புல்வெளிகள் - பிரேசில்

லானாஸ் புல்வெளிகள் - கினியா

சவானா புல்வெளிகள் -ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா

ஸ்டெப்பி புல்வெளிகள் - யுரேசியா

பிரெய்ரி புல்வெளிகள் - வட அமெரிக்கா

பாம்பாஸ் புல்வெளிகள் - அர்ஜென்டைனா

டவுன்ஸ் புல்வெளிகள் - ஆஸ்திரேலியா                                          மனிதன் வளர்த்த முதல் செல்லப் பிராணி கோழிகள்.

இந்தியாவின் மிகப் பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் நிகோபார் தீவுகளாகும்.

தேசிய பால் வளர்ச்சிக் கழகம் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் உள்ளது.

உலக செஞ்சிலுவை தினம் மே 8-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

உடலின் வெப்பநிலையை சமப்படுத்தி வைத்திருக்க உதவுவது தோல்.

கடல் நீரில் அதிகமாக உள்ளது சோடியம் குளோரைடு.             எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயப்படுவார்கள். பய வியாதிக்கு போபியா என்று பெயர்.

தண்ணீரைப் பார்த்து பயப்படுவதை ஹைட்ரோ போபியா என்றும், மீன்களைப் பார்த்து பயப்படுவதற்கு இச்தையோ போபியா என்றும் பெயர்.

இருட்டைப் பார்த்து பயப்படுவதற்கு ஸ்கோட்டோ போபியா என்றும், விமானங்களைப் பார்த்து பயப்படுவதற்கு ஏரோ போபியா என்றும் பெயர்.                                                                           * ஒரு சாதாரண தேன் கூட்டில் சுமார் 50 ஆயிரம் தேனீக்கள் வசிக்கும்.

* திமிங்கல மூளையின் எடை சுமார் 7 கிலோ.

* உலகில் சுமார் 75 ஆயிரம் வகை ஈக்களும், 2 ஆயிரம் வகை கொசுக்களும் உள்ளன.

* மிருகங்களில் சிம்பன்சி எனப்படும் மனிதக் குரங்குகளே மிகவும் அறிவுள்ளவை.

* முதலையால் கண்களை திறந்து வைத்துக்கொண்டு தூங்க முடியும்                                                                                                * ரோம் நகரம் டிபெர் நதிக்கரையில் அமைந்துள்ளது.

* மழைக்கோட்டை கண்டுபிடித்தவர் சார்லஸ் மக்கின் டேர்ஷி.

* பிளாஸ்டிக் தயாரிப்பில் ஜெர்மன் நாடு முதலிடம் வகிக்கிறது.

* இந்தியாவின் பழங்கால மருத்துவ நிபுணர்கள் சரகர், சுஸ்ருதர்.

* உலக வரைபடத்தை வரைந்தவர் ராடோஸ்தனிஸ்.

* ஐ .நா. ச பை யின் குழந்தை என்றழைக்கப்படும் நாடு இந்தோனேஷியா.                                                                                          * காந்தி முதன் முதலில் துவக்கிய நாளிதழின் பெயர் இண்டியன் ஒப்பீனியன்.

* பாரதியார், பாரதி என்ற பட்டத்தை பெற்றபோது அவரது வயது 11.

* இந்தியாவின் முதல் கணித நூலின் பெயர் கணிதசங்கிரஹா.

* உலகில் மரண தண்டனையை ரத்து செய்த முதல் நாடு ஆஸ்திரியா.

* ஜனவரி முதல் தேதி சுதந்திர தினம் கொண்டாடும் நாடு சூடான்.                                                                                                              * உலகிலேயே முதன் முதலில் துணியில் செய்தித்தாள் வெளியிட்ட நாடு ஸ்பெயின்.

* இசைக் கருவிகளின் ராணி எனப்படுவது வயலின்.

* கூடுகட்டி வாழும் ஒரே மீன் இனம் ஸ்டிக்ஸ் பேக்.                  * பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

* பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது.

* மணிக்கு 1,670 கிலோமீட்டர் வேகத்தில் பூமி தன் அச்சில் சுழன்று கொண்டு இருக்கிறது.

* காற்று மண்டலம் என்பது பூமிக்கு மைல் 990 கிலோமீட்டர் உயரம் வரை உள்ளது.

* பூமி சுழல்வதால்தான் காற்று வீசுகிறது.                                     வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துகிறோம். உலகில் முதன்முதலில் இப்படி பதிவு எண் கொடுத்து சாலையில் வாகனங்களை ஓடவிட்டவர்கள் பிரான்ஸ் நாட்டினர்தான். நான்கு சக்கர வாகனங்களுக்குத்தான் முதலில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டன. 1893 ம் ஆண்டில் இப்பழக்கம் வழக்கத்துக்கு வந்தது. பிரான்ஸ் நாட்டினர்தான் கதவு எண் பழக்கத்தையும் கொண்டு வந்தார்கள்.                                                                                                      
சில தாவரங்களின் அறிவியல் பெயர்கள்

நெல் - ஒரிசா சட்டைவா
வெங்காயம் - அல்லியம் சிபா
வாழை - மூஸா பாரடிஸியாகா
அவரை - டோலிகஸ்லாப்லாப்
உளுந்து - போஸியோலுஸ்முருங்கோ
கத்தரி - ஸொலானம் மொருஜீனா
நாய்க்குடை (காளான்) - அகாரிகஸ்
கைவிரல்களில் சுட்டு விரலுக்கு உணர்வுகள் அதிகம்.

முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி உருகுவே நாட்டில் நடந்தது.

அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய பத்திரிகையின் பெயர் நியூ இந்தியா.

மின்னியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுபவர் நிக்கோலா டெஸ்லா.

குள்ளநரி, நாய் இனத்தை சேர்ந்தது.

டைனமோவைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே.             இந்தியாவின் முதல் வைசிராய் கானிங் பிரபு.

அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா.

அங்கோலா நாட்டு நாணயத்தின் பெயர் குவான்சா.

பூமியின் விட்டம் 12 ஆயிரத்து 754 கிலோமீட்டர்கள்.

இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவின் முதல் தலைவர் விக்ரம் சாராபாய்.                                                                                          * வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் வல்லுநரால் 1781-ல் யுரேனஸ் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

* யுரேனசுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருப்பதைப் போல 19 மடங்கு.         • மிகப் பெரிய பறவைகள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஈமு பறவையை ஆஸ்திரேலியாவில் மாடு மேய்க்கப் பழக்குகின்றனர்.

• இமயமலைப் பகுதிகளில் காணப்படும் கல்தூரா என்ற பறவை மிக இனிமையான குரலையுடையது. மலைப் பகுதி மக்களுக்கு இப்பறவையின் குரலைக் கேட்பது ஓர் இனிமையான அனுபவம். ஆரம்பத்தில் முதன்முதலாய் விசிலடிக்கத் துவங்கும் ஒரு சின்னப் பையனைப் போல ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மிக அருமையாக விசிலடிக்கும்.

• பூநாரை என்ற பறவை இனத்தில் ஆண் பறவையும் குஞ்சுகளுக்குப் பால் ஊட்டுகிறது. இப்பாலில் புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் அதிகமாக இருப்பதால் புழு பூச்சிகள், மீன்களைச் சாப்பிடாமலேயே குஞ்சுகள் நல்ல ஆரோக்கியத்தோடு வளர்கின்றன.

• அதிக இறகுகள் உள்ள பறவை அன்னப் பறவையாகும். பொதுவாக அன்னப் பறவைகளுக்கு 25,216 இறகுகள் உண்டு.
* இந்தியா வசம் உள்ள அக்னி ஏவுகணை 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று எதிரியின் இலக்கை தாக்கக் கூடியது.

* இந்திய கடற்படை வசம் உள்ள நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கி கப்பலின் பெயர் ஐ.என்.எஸ்.அரிகன்ட், அட்மிரல் கோர் ஸ்கோப்

* பசிபிக் கடலில் கண்டறிந்த அரிய வகை திமிங்கலத்தின் பெயர் ஸ்பேடு டூத்டு பீக்டு வேல்.

* ஆராய்ச்சியாளர்களால் தக்காளி பழத்தின் ஜீன் அமைப்பு முற்றிலுமாக வரிசைப் படுத்தப்பட்டுவிட்டது.

* இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் உயிரினம் கிரேட் இன்டியன் பஸ்டர்டு எனும் பறவையினம்.

* இந்தியாவின் முதன்மையான மிகப்பெரிய அணுக்கரு ஆற்றல் ஆராய்ச்சி மையம் மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும்.

* பரப்பளவின் அடிப்படையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவின் பெரிய மாநிலம் ‘மத்தியப்பிரதேசம் ஆகும்.

* இந்திய அரசின் மிக உயர்ந்த சிவிலியன் விருது ‘பாரத ரத்னா’ என்ற விருதாகும்.

* வெப்பம் உமிழாமல் வெளிச்சம் தரும் உயிரினம் ‘மின்மினிப்பூச்சி’ ஆகும்.

* புரதத்தை செரிமானம் செய்ய உதவும் பொருள் ‘பெப்ஸின்’ என்பதாகும்.

* இந்திய தேசிய மகாகவி என்றழைக்கப்படுபவர் ‘ரவீந்திரநாத் தாகூர்’.

* இந்தியாவில் முதல் சென்சஸ் 1911-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

* நீரூக்கு அடியில் இருக்கும் மணலை அளக்க ஹைட்ரோஃபோன் என்ற கருவி பயன்படுகிறது.

* அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் ஆவார்.                                
அமெரிக்காவின் ஜனாதிபதி இருக்கும் வெள்ளை மாளிகையில் உள்ள மொத்த அறைகள் 132. கதவுகள் 412. ஜன்னல்கள் 147. ஒரு நாளைக்கு வெள்ளை மாளிகைக்கு வந்து செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை சராசரியாக ஆறாயிரம்.

பீகார் மாநிலத்திலுள்ள சம்பரான் மாவட்டத்தில் 18-4-1917 அன்று காந்தியடிகளால் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. அதுவே முதல் சத்தியாக்கிரகம் எனப்படுகிறது.

உலகில் முதன்முதலில் பேருந்து போக்குவரத்து வசதி 18-10-1895-ல் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரே சமயத்தில் கேட்கப்படும் நூறு கேள்விகளுக்குச் சரியான பதில் கூறுபவர்கள் "சதாவதானி' என்று அழைக்கப்படுவர். இக்கலையில் தமிழகத்தில் முதன் முறையாகத் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செய்குத்தம்பி பாவலர் ஆவார்.

எத்தியோப்பிய காலண்டரில் ஆண்டுக்கு 13 மாதங்கள் உள்ளன. 30 நாள்கள் கொண்ட 12 மாதங்களும் 5 நாள்கள் கொண்ட 13-வது மாதமும் வழக்கத்தில் உள்ளன.

இந்தியாவில் முதன் முதலில் வரிகொடா இயக்கம் நடத்தியவர் திப்பு சுல்தான். நடத்திய ஆண்டு 1824.
இலியட், ஒடிஸ்ஸி ஆகிய உலகப் புகழ்பெற்ற இதிகாசங்களைப் படைத்த கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹோமர் முற்றிலும் கண்பார்வை இழந்த கவிஞர்.

இஸ்ரேல் நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கும்படி 1952-ம் ஆண்டு அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

பூமியின் மிக ஈரமான பகுதி கொலம்பியாவிலுல்ள லோரோ ஆகும். இங்கு ஆண்டொன்றுக்கு சுமார் 523.6 அங்குல மழை பொழிகிறது.

உலகில் அதிக அளவு இரத்தம் கொண்ட உயிரினம் திமிங்கிலம். அதன் உடலில் எட்டாயிரம் லிட்டர் வரை இரத்தம் இருக்குமாம்!                                                                  • இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்

• உலக அளவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - பிஸ்மார்க் (ஜெர்மனி)       
• முதலில் மனித இனம் தோன்றிய இடம் ஆசியா

• முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் தாலமி

• முதலில் சர்க்கஸ் தோன்றிய நாடு ரோமாபுரி

• முதலில் குடையைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்

• முதலில் ரேடார் உருவாக்கியவர்கள் ஜெர்மானியர்

• முதலில் தோன்றிய இலக்கியம் இராமாயணம்

* நம் வீடுகளில் காணப்படும் ஈக்களின் ஆயுள்காலம் இரண்டே வாரங்கள்தான்.

* மனித இனத்துக்கு வீட்டு ஈக்களால் மட்டும் முப்பது விதமான நோய்கள் வருகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

* தேங்காய் அதிகம் விளைவது பிலிப்பைன்ஸ் நாட்டில்தான்.

* நைலான் துணியில் பண நோட்டுகளை அச்சடிக்கும் நாடு ஜெர்மனி.
தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலையடிகள்

தமிழ் மாணவர் - வீரமாமுனிவர்

தமிழ்த் தென்றல் - திரு.வி.க.

தமிழ் மாமுனி - திருவள்ளுவர்.

தமிழில் முதன் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் -ஆனந்தரங்கம் பிள்ளை.                    * நேரு பிறந்தபோது அவரது தந்தையின் வயது 28.

* இந்திராகாந்தி பிறந்தபோது நேருவின் வயது 28.

* நேருவின் மனைவி கமலா இறந்தது பிப்ரவரி 28.

* நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.

* நேரு தன் மனைவி கமலா இறந்த பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 28.                                               வில்லியம் ஹார்வி

உலகிலேயே சிறந்த மருத்துவர்களில் ஒருவர் வில்லியம் ஹார்வி. இங்கிலாந்தில் பிறந்த இவர் 1602-ல் லண்டனில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இவருக்கு முன்பு மனித உடலில் ரத்தம் கடல் அலையைப் போல முன்னும் பின்னும் பாய்ந்து வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் இவர்தான் ரத்தம் குழாய்கள் மூலம் வெவ்வேறு உறுப்புகளுக்கும் செல்கிறது, அதுவும் இதயத்திலிருந்து செல்கிறது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார்.                                        • பிடரியுடன் உள்ள ஆண் சிங்கத்தை வீரமுள்ளது என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும், 90 சதவீதம் விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது பெண் சிங்கம்தான்.

• துறவை விட இல்லறமே சிறந்தது எனக் கூறுவது சீக்கிய மதமாகும்.

• வயது முதிர்ந்த பெற்றோர்களை உடன் வைத்துப் பேணுவோர்க்கு சிங்கப்பூரில் வருமான வரிச் சலுகைகள் உண்டு.

• மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல்.

• வாழை மரத்துக்கு ஜப்பானிய மொழியில் "பாஷோ' என்று பெயர்.

• ஜப்பானில் தரமான பாரம்பரிய கிமோனோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

• பூவரசம்பூவை தேசிய சின்னமாக வைத்திருக்கும் நாடுகள் ஹங்கேரி, ருமேனியா.                                                                     • 18 செ.மீ. நீளமுள்ள பென்சில் 55 கிலோமீட்டர் கோடு கிழிக்கும். 45 ஆயிரம் சொற்களை எழுதக்கூடியது. 17 தடவை கூர்மையாக்கலாம்.

• கத்தரிக்கோலைக் கண்டு பிடித்தவர் மோனாலிசா ஓவியத்தை வரைந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி.

• சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை கழுகு.

• உப்பை பரப்பி அதன் மீது ஒருவர் ஆடையின்றி படுத்தால் உயிர் போய்விடும்.

• ஒருவர் மருந்து சாப்பிட்டுவிட்டு புளிய மரத்தடியில் படுத்தால் மருந்து வேலை செய்யாது.

• துத்தி இலையில் உப்பில்லை. பிழிந்தால் சாறு வராது. மற்றெல்லா கீரைகளில் உப்பு உண்டு. கசக்கினால் சாறுவரும்.                           
• அமெரிக்காவில் வால் இல்லாத சில கோழி இனங்கள் நீல நிற முட்டைகளை இடும்.

• நியூகினியாவில் உள்ள காசோவரி எனப்படும் வான்கோழி இனப் பறவைகள் பசுமை நிற முட்டைகளை இடும்.

• அன்னப் பறவை பசுமை கலந்த வெண்ணிறத்தில் முட்டையிடும்.

• ஜப்பானிலுள்ள குயில்களின் முட்டைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

• ஆப்ரிக்காவிலுள்ள ஜிங் இனக் கோழிகளின் முட்டைகள் சிவந்த மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும்.

• பிணந்தின்னிக் கழுகுகளின் முட்டை சிவப்பு கலந்த பழுப்பு நிறம்.

• புள்ளிகள் மற்றும் கோடுகள் கொண்ட முட்டைகளை பவழக்கால் நாரைகள் இடும்.

• வரகு கோழிகளின் முட்டைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

• கருடனின் முட்டை சாம்பல் நிறம்.

• கடல் அர்ச்சின் என்ற பறவை ஆரஞ்சு நிற முட்டைகளை இடும்.

• செந்தலைக் கிளிகளின் முட்டைகள் வெண்ணிறத்தில் கோள வடிவில் இருக்கும்.
• ஒரு நொடியில் 40-இல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒருமுறை இமைப்பதற்கு கண்கள் எடுத்துக் கொள்கின்றன.

• சராசரி ஆயுளுள்ள மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் முறை தனது கண்களை இமைக்கிறான்.

• கண்ணீருக்கு பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளைக் கொல்லும் கிருமிநாசினிக் குணம் உண்டு.

• ஒரு மனிதனின் கண்ணீர் சுரப்பிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் அவனது கண்கள் வறண்டு போய் இறுதியில் அவன் குருடாகி விடுவான்.

• கண்தானம் செய்யும்போது சிலர் நினைப்பது போல கண்களையே அகற்றி எடுக்க மாட்டார்கள். மாறாக "கார்னியா' எனப்படும் பார்வைப் படலத்தைத்தான் பிரித்தெடுத்துக் கொள்வார்கள். அதுவும் ஒருவர் இறந்த சில மணி நேரங்களுக்குள் இதைச் செய்ய வேண்டும்.                                                                       • உலகின் மிகப் பழமையான தலைநகரம் டமாஸ்கஸ். சிரியா நாட்டின் தலைநகரமாக 4,500 ஆண்டுகளாக இருந்து வருகின்றது.

• மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் முதன்மையானது டோக்கியோ. அடுத்தது மெக்ஸிகோ நகரம்.

• இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் மும்பை.

• பரப்பளவில் மிகப் பெரிய நகரம் குயீன்ஸ்லாந்திலுள்ள மவுண்ட் இஸô. இதன் பரப்பளவு 41,978 சதுர கி.மீ.

• 3,684 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தலைநகரம் லாசா. திபெத்தின் தலைநகரம் இது.

• கடல் மட்டத்திலிருந்து 16,732 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம் வென்சுவான். 1955-ஆம் ஆண்டு திபெத்தில் இந்தகரம் உருவாக்கப்பட்டது.

• உலகில் செலவு அதிகமாகும் நகரம் டோக்கியோ.

• சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம் - பெய்ஜிங் (சீனா).

• டாக்ஸிகள் அதிகம் உள்ள நகரம் மெக்ஸிகோ.

• கார்கள் அதிகம் உள்ள நகரம் நியூயார்க் (அமெரிக்கா).                                                                    1. மூளையை விடப் பெரிதான கண்களைக் கொண்ட பறவை - நெருப்புக் கோழி

2. நாக்கால் காதை சுத்தம் செய்யும் விலங்கு - ஒட்டகச்சிவிங்கி

3. நான்கு மூக்குகளை உடைய உயிரினம் - நத்தை

4. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை - ஆந்தை

5. வயிற்றில் நான்கு பகுதிகளைக் கொண்ட விலங்கு - மாடு

6. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் - டால்பின்

7. நுரையீரல் இல்லாத உயிரினம் - எறும்பு

8. பின்பக்கமாகவும் பறக்கக்கூடிய பறவை - ஹம்மிங் பறவை

9. துருவக் கரடிகள் எந்தக் கையை அதிகம் பயன்படுத்தும்? - இடது கை.

10. பற்கள் இல்லாத பாலூட்டி இனம் - எறும்புதின்னி

11. நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள்? - எட்டு

12. மூன்று இதயங்களைக் கொண்ட கடல்வாழ் உயிரினம் - ஆக்டோபஸ்

13. உலகில் மிகவும் விஷத்தன்மையுடைய மீன் - ஸ்டோன் ஃபிஷ் (ஆஸ்திரேலியா)

14. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள கடல்வாழ் உயிரினம் - இறால் மீன்

15. உலகின் மிகப் பெரிய பாலூட்டி இனம் - நீலத் திமிங்கிலம்.                                                        * விஜயநகரப் பேரரசின் சிறந்த மன்னர் - கிருஷ்ண தேவராயர்.

* தீரன் சின்னமலையின் இயற்பெயர் - தீர்த்தகிரி.

* இந்தியாவின் தோட்ட நகரம் - லக்னோ.

* தார் பாலைவனம் இருக்கும் மாநிலம் - ராஜஸ்தான்.

* ஜெர்மனியின் தேசிய விலங்கு - கழுதை.         * மதுரையிலுள்ள ஆயிரங்கால் மண்டபம் 1569-ம் ஆண்டு கட்டப்பட்டது.

* வெளிநாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்கும் வைக்கும் வழக்கம் 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* இந்தியாவில் இரட்டை பிளாட்பாரத்துடன் கட்டப்பட்ட முதல் ரயில் நிலையம் ‘கான்பூர் ரயில் நிலையம் ஆகும்.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் கமலாஜித் சாந்து என்பவர் ஆவார்.

* “ரயில் போக்குவரத்தின் தந்தை” என்றழைக்கப்படுபவர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பவர் ஆவார்.

* டெல்லி சுல்தானியத்தின் முதல் அடிமை வம்ச அரசர் ஐபெக் என்பவர் ஆவார்.

* உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ‘டெல்ஸ்டார்’ என்பதாகும்.

* தேசிய மொழியாக இந்தி மொழி 1949-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

* நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ‘ஆர்க்கிமிடிஸ்’ என்பவர் ஆவார்.

* முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.                                             நம் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.

நம் உடலில் உள்ள இரண்டு நுரையீரல்களில் வலது நுரையீரல்தான் பெரியது.

நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ரத்தத்திசு வெள்ளையணுக்கள்.

மனித கண்களில் பார்வையை உணரும் 7 மில்லியன் கூம்பு செல்கள் உள்ளன.

மனிதனின் உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சராசரியாக 50 ஆயிரம் மைல்களுக்கு அதிகமாகும்.

உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

டெல்லி நகர மேயராகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி அருணா ஆசப் அலி

விடுதலைக்குப் பின் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம்

நமது தேசிய கீதத்தை இசைக்க ஆகும் நேரம் 52 நொடிகள்.

உலகின் முதல் கலைக் களஞ்சியம் சீன மொழியில் உருவானது                                           
• ஒருகாலத்தில் மாதுளம் பழத்தில் ஓட்டை போட்டு, லவங்கத்தை வைத்து பாத்ரூமில் நறுமணத்திற்காக வைத்திருந்தனர். இதுதான் முதல் டாய்லெட் பிரஷ்னர்.

• அமெரிக்காவின் பல மாகாணங்களில், பெண்கள் தங்கள் உள்ளாடைகளை வெளியே உலர்த்தத் தடை உள்ளது.

• சவுதி அரேபியால் உள்ளாடைகளை வாங்கச் செல்லும்போது, கணவன் உள்பட ஆண்கள் யாருக்கும் உடன் செல்ல அனுமதியில்லை.

• ஒருவர் தன் வாழ்நாளில் சராசரியாக 3 வருடத்தை பாத்ரூமில் கழிக்கிறார் என்கிறது ஆய்வு.

• பாத்ரூமில் பெண்கள், ஆண்களைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.

• ரஷ்யா, 1957-ஆம் ஆண்டு "ஸ்புட்னிக்' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

• பிரான்ஸ் "அஸ்டெரிக்ஸ்' என்ற விண்கலத்தை 1965-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• ஜப்பான் "ஓசாமி' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• சீனா "எஸ்கேடபிள்யூ' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் ஏவியது.

• இங்கிலாந்து "பிராஸ்ப்ரோ' என்ற விண்கலத்தை 1971-ஆம் ஆண்டு ஏவியது.

• இந்தியா "ரோகிணி' என்ற விண்கலத்தை 1980-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

• முதல் அமெரிக்க செயற்கை விண்கலத்தின் பெயர் "எக்ஸ்ப்ளோரர்' ஆகும்.
• இந்தியாவின் தேசிய பறவையாக மயில் 1963-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டது.

• உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ரிப்பன் பிரபு.

• இந்தியாவில் ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு அரசுடைமை ஆக்கப்பட்டது.

• NEWSPAPER என்பதன் விரிவாக்கம் NORTH, EAST, WEST, SOUTH, PAST AND PRESENT, EVENTS, REPORT என்பதாகும்.

• செவ்வாய் கிரகத்திலிருந்து வானத்தைப் பார்த்தால் நீல நிறத்தில் தெரியாது; ஆரஞ்சு நிறத்தில்தான் தெரியும்.

• ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மி.லி. ரத்தம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக