வெள்ளி, 11 அக்டோபர், 2013

படித்ததில் பிடித்தது..தவறை ஒத்துக்கொண்ட காந்தி


Mahatma-Gandhiஒரு தடவை சென்னை திருவல்லிக்கேணி  க்கு வந்திருந்தாராம் காந்தி . பொதுக்கூட்டத்தில் பேசிய  அவரது பேச்சு முழுக்க ஆங்கிலத்தில்  இருந்திருக்கிறது . அதைக் கேள்விப்பட்ட பாரதி , காந்திஜிக்கு உடனே ஒரு கடிதம் எழுதினார் .
உங்களூடைய மேடைப்பேச்சு உங்கள்  தாய்மொழியான குஜராத்தியில்  அமைந்திருக்கலாம் . இல்லையென்றால்  இந்தியாவின் ஏதாவது ஒரு மோழியில்  அமைந்திருக்கலாம் . ஆனால் அதையெல்லாம்  விட்டுட்டு நாம் யாரை இந்த நாட்டைவிட்டுத்  துரத்த  வேண்டுமென்று விரும்புகிறோமோ அவர்களுட ( ஆங்கில ) மொழியிலேயே பேசினீர்களே ! என்று கடிதத்தில் வருத்தப்பட்டிருக்கிறார் .
இதைப் படித்த காந்தி சொன்னார் . ” என்  தவறை நான் ஒத்துக்கொள்கிறேன் . ஆனால்  உங்களுடைய கடிதமும் ஆங்கிலத்தில் தானே இருக்கிறது .”. பாரதியும் விட்டுவிடவில்லை , ‘ தமிழ்  மொழி மிகவும் இனிமையான மொழி . அந்த  மொழியை என் தேசத்தந்தயைத்  திட்டுவதற்கு ஒரு போதும் பயன்படுத்தமாட்டேன் ” என்றாராம் !
- தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு…bharathi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக