சனி, 5 அக்டோபர், 2013

பொது அறிவு

இந்திய தேசிய இயக்கம் - 1

1. பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

அ. லார்ட் சின்கா
ஆ. எஸ்.என். தாகூர்
இ. டபிள்யூ.சி. பானர்ஜி
ஈ. தாதாபாய் நவுரோஜி

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர்

அ. மன்றோ
ஆ. மேஜர் ஜெனரல் பீட்டர்
இ. வில்லியம் பென்டிங்
ஈ. கென்னடி

3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்

அ. தாந்தியா தோபே
ஆ. நானா சாகிப்
இ. கன்வர் சிங்
ஈ. பகதூர் ஷா

4. கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1918
ஆ. 1920
இ. 1922
ஈ. 1924

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்

அ. இர்வின் பிரபு
ஆ. ரீடிங் பிரபு
இ. லின்லித்கோ பிரபு
ஈ. வில்லிங்டன் பிரபு

6. பின்வருவனவற்றில் எது முதலில் வெளி வந்தது?

அ. தி மெட்ராஸ் மெயில்
ஆ. தி இந்தியன் சோஷியல் பார்மர்
இ. தி பெங்கால் கெசட்
ஈ. தி டைம்ஸ் ஆப் இந்தியா

7. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?

அ. வல்லபாய் படேல்
ஆ. ராஜேந்திர பிரசாத்
இ. சி.ஆர். தாஸ்
ஈ. நரேந்திர தேப்

8. அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?

அ. பர்தோலி சத்யாகிரகம்
ஆ. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இ. ஒத்துழையாமை இயக்கம்
ஈ. கிலாபத் இயக்கம்

9. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?

அ. ஓரிசா
ஆ. குஜராத்
இ. மேற்கு வங்கம்
ஈ. ஆந்திரப் பிரதேசம்

10. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?

அ. 1948
ஆ. 1398
இ. 1498
ஈ. 1500


விடை: 1. ஈ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. இ 7. இ 8. ஆ 9. ஆ 10. இ

11. டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?

அ. இங்கிலாந்து
ஆ. நெதர்லாந்து
இ. டென்மார்க்
ஈ. பிரான்ஸ்

12. பின்வருவனவற்றில் அன்னி பெசண்ட் அம்மையார் பற்றிய எந்தத் தகவல் சரியானது?

அ. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
ஆ. ஹோம் ரூல் இயக்கத்தை 1916ல் தொடங்கினார்
இ. சிறந்த கல்வியாளர், சிறந்த தேசியவாதி
ஈ. இவை அனைத்தும் சரி

13. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?

அ. ஜவஹர்லால் நேரு
ஆ. சர்தார் வல்லபாய் படேல்
இ. சுபாஷ் சந்திர போஸ்
ஈ. பால கங்காதர திலகர்

14. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?

அ. மவுண்ட்பேட்டன் பிரபு
ஆ. கானிங் பிரபு
இ. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
ஈ. டல்கவுசி பிரபு

15. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?

அ. 3
ஆ. 2
இ. 4
ஈ. 1

16. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?

அ. ஒத்துழையாமை இயக்கத்தை பரப்பியதற்காக
ஆ. தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
இ. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கியதற்காக
ஈ. இவை எதுவும் இல்லை

17. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?

அ. 1805
ஆ. 1905
இ. 1811
ஈ. 1911

18. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?

அ. மீரட்
ஆ. பேரக்பூர்
இ. கான்பூர்
ஈ. பெர்ஹாம்பூர்

19. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்

அ. அல்மெய்டா
ஆ. அல்புகர்கு
இ. வாஸ்கோடகாமா
ஈ. வான்டிமென்

20. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு

அ. 1620
ஆ. 1621
இ. 1622
ஈ. 1623


விடை: 11. இ 12. ஈ 13. இ 14. ஆ 15. ஈ 16. ஆ 17. ஆ 18. அ 19. ஆ 20. ஈ
இந்திய தேசிய இயக்கம் - 3

21. மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்

அ. மீரட்
ஆ. கான்பூர்
இ. அயோத்தி
ஈ. பேரக்பூர்

22. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?

அ. மலேசியா
ஆ. ரங்கூன்
இ. அந்தமான்
ஈ. இந்தோனேஷியா

23. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்

அ. தில்லி
ஆ. அலகாபாத்
இ. வங்காளம்
ஈ. போபால்

24. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

அ. 1861
ஆ. 1863
இ. 1864
ஈ. 1865

25. சி.பி. கில்பர்ட் என்பவர்

அ. ஒரு சட்ட உறுப்பினர்
ஆ. ஒரு வைசிராய்
இ. இந்திய செயலாளர்
ஈ. நீதிபதி

26. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு

அ. 1912
ஆ. 1914
இ. 1916
ஈ. 1918

27. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்

அ. கவுன்ட்-டி-லாலி
ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர் அயர் கூட்
ஈ. புஸ்லி

28. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்

அ. லாலா லஜபதி ராய்
ஆ. தாதாபாய் நவ்ரோஜி
இ. சூரியாசென்
ஈ. எவருமில்லை

29. சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு

அ. 1887
ஆ. 1895
இ. 1898
ஈ. மேற்கண்ட அனைத்தும்

30. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது

அ. 1921 ஏப்ரல்
ஆ. 1921 நவம்பர்
இ. 1922 மார்ச்
ஈ. 1922 அக்டோபர்


விடை: 21. ஈ 22. ஆ 23. ஆ 24. அ 25. அ 26. இ 27. இ 28. அ 29. ஈ 30. ஆ
இந்திய தேசிய இயக்கம் - 4

31. 1612ல் ஆங்கிலேயர் எங்கு தங்களது முதல் தொழிற்சாலையை நிறுவினர்?

அ. கோவா
ஆ. சூரத்
இ. கோழிக்கோடு
ஈ. சென்னை

32. இந்தியாவில் தபால் தலைகளை அறிமுகப்படுத்தியது யார்?

அ. மின்டோ
ஆ. டல்ஹவுசி
இ. கானிங்
ஈ. ரிப்பன்

33. அன்னி பெசண்ட் அம்மையார் எதோடு தொடர்புடையவர்?

அ. பிரம்ம சமாஜம்
ஆ. ஆரிய சமாஜம்
இ. ராமகிருஷ்ண இயக்கம்
ஈ. தியாசபிகல் இயக்கம்

34. சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியது யார்?

அ. சி.ஆர். ரெட்டி
ஆ. ஈ.வெ.ரா. பெரியார்
இ. கே. காமராஜ்
ஈ. செல்வராஜ் முதலியார்

35. இந்தியாவின் முதல் தேசியக் கவி என அழைக்கப்படுபவர் யார்?

அ. ஹென்றி விவியன் டிரெசியோ
ஆ. ரவீந்திரநாத் தாகூர்
இ. பங்கிம் சந்திர சாட்டர்ஜி
ஈ. சுப்பிரமணிய பாரதி

36. பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது?

அ. 1899
ஆ. 1900
இ. 1901
ஈ. 1905

37. தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல் வந்தார்?

அ. 1902
ஆ. 1904
இ. 1909
ஈ. 1915

38. ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது?

அ. 1917
ஆ. 1918
இ. 1919
ஈ. 1920

39. ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?

அ. 1932
ஆ. 1933
இ. 1925
ஈ. 1936

40. இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட ஒரே வைஸ்ராய் யார்?

அ. ஹர்டிங்கே
ஆ. நார்த்புரூக்
இ. மயோ
ஈ. மின்டோ


விடை: 31. ஆ 32. ஆ 33. ஈ 34. ஆ 35. அ 36. ஈ 37. ஈ 38. இ 39. இ 40. இ

41. இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. துருக்கியர்
ஆ. டச்சுக்காரர்
இ. ஆங்கிலேயர்
ஈ. போர்ச்சுக்கீசியர்

42. இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?

அ. சர்ச்சில்
ஆ. அட்லி
இ. பிர்கன்ஹெட்
ஈ. ராம்சே மெக்டொனால்ட்

43. பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முஸ்லிம் லீக் எப்போது கோரியது?

அ. 1939
ஆ. 1940
இ. 1942
ஈ. 1944

44. வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?

அ. ஐதராபாத்
ஆ. திருவாங்கூர்
இ. சென்னை
ஈ. பெங்களூரூ

45. மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?

அ. பெல்காம்
ஆ. கயா
இ. ஹரிபுரா
ஈ. திரிபுரா

46. சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்கு தலைமையேற்றவர்

அ. ஹர்ஷத் மகால்பேகம்
ஆ. நானாசாகிப்
இ. ராணி லட்சுமிபாய்
ஈ. கன்வர் சிங்

47. டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது

அ. துணைப்படை திட்டம்
ஆ. வாரிசு இழப்பு கொள்கை
இ. நிரந்தர நில வருவாய் திட்டம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்

48. பொருத்துக:

I. பகதூர் ஷா - 1. பேஷ்வா
II. தாந்தியா தோபே - 2. ராணுவத்தளபதி
III. நானாசாகிப் - 3. ஜான்சி
IV. லட்சுமிபாய் - 4. டெல்லி பேரரசர்

அ. I-4 II-2 III-1 IV-3
ஆ. I-4 II-1 III-2 IV-3
இ. I-2 II-1 III-4 IV-3
ஈ. I-1 II-2 III-3 IV-4

49. 1857 புரட்சியில் பங்கேற்காதவர்கள்

1. சீக்கியர்கள்
2. மராத்தியர்கள்
3. ஆப்கானியர்
4. கூர்க்காக்கள்

அ. அனைவரும்
ஆ. 1, 2 மற்றும் 3
இ. 1, 3 மற்றும் 4
ஈ. 1, 2 மற்றும் 4

50. பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு

அ. 1927
ஆ. 1928
இ. 1929
ஈ. 1930


விடை: 41. ஈ 42. ஆ 43. ஆ 44. அ 45. அ 46. இ 47. ஆ 48. அ 49. இ 50. இ

51. தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு

அ. இந்தியா
ஆ. அயர்லாந்து
இ. அமெரிக்கா
ஈ. இங்கிலாந்து

52. இராஸ்த் கோப்தார் என்பது

அ. சீர்திருத்த இயக்கம்
ஆ. பத்திரிகை
இ. சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
ஈ. நகரம்

53. இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்

அ. கானிங் பிரபு
ஆ லிட்டன் பிரபு
இ. கர்சன் பிரபு
ஈ. ரிப்பன் பிரபு

54. ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு

அ. 1880
ஆ. 1881
இ. 1882
ஈ. 1883

55. இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு

அ. ஆங்கிலேய பத்திரிகையாளர்
ஆ. ஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர்
இ. சீர்திருத்தவாதி
ஈ. ஆங்கில வைசிராய்

56. கீழ்க்கண்ட எது டச்சுக்காரர்களின் வாணிபத் தலம்?

1. பழவேற்காடு
2. மசூலிப்பட்டினம்
3. சின்சுரா

அ. அனைத்தும் சரியானவை
ஆ. 1 மற்றும் 2 சரியானவை
இ. 1 மற்றும் 3 சரியானவை
ஈ. 2 மற்றும் 3 சரியானவை

57. ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?

அ. சர் வில்லியம் ஹாக்கின்ஸ்
ஆ. சர் தாமஸ் ரோ
இ. சர் பிரான்ஸிஸ் டே
ஈ. வில்லியம் ஹாமில்டன்

58. 1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்

அ. டியூப்ளே
ஆ. டூமாஸ்
இ. பிரான்சிஸ் கரோன்
ஈ. பிரான்சிஸ் மார்டின்

59. கீழ்க்கண்ட எது கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது?

1. ஏனாம்
2. மாஹி
3. பாலாச்சூர்

அ. 1 மற்றும் 3
ஆ. 2 மற்றும் 3
இ. 1 மற்றும் 2
ஈ. அனைத்தும்

60. 1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?

அ. சர் அயர் கூட்
ஆ. வாட்சன்
இ. ஸ்மித்
ஈ. மேஜர் மன்றோ


விடை: 51. இ 52. ஆ 53. ஆ 54. ஆ 55. ஆ 56. அ 57. ஆ 58. ஈ 59. அ 60. இ

61. 1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?

அ. கன்வர் சிங்
ஆ. பேகம் ஹஜ்ரத் மகால்
இ. பக்த் ஹான்
ஈ. பகதூர் ஷா ஜாபர்

62. நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?

அ. பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்
ஆ. அஸிமுல்லா
இ. நாராயணராவ்
ஈ. ஹர்ஷித் கான்

63. கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி தலைமை ஆளுநர்?

அ. பென்டிங் பிரபு
ஆ. கானிங் பிரபு
இ. டல்கௌசி பிரபு
ஈ. ஹேஸ்டிங் பிரபு

64. இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித் துறையை உருவாக்கியவர்?

அ. வில்லியம் பெண்டிங் பிரபு
ஆ. ரிப்பன் பிரபு
இ. டல்கௌசி பிரபு
ஈ. மெக்காலே பிரபு

65. ஜெனரல் ஸ்வார்டு பங்கேற்ற போர்?

அ. இரண்டாம் மைசூர் போர்
ஆ. மூன்றாம் மைசூர் போர்
இ. நான்காம் மைசூர் போர்
ஈ. முதல் மராத்திய போர்

66. இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு?

அ. 1829
ஆ. 1833
இ. 1835
ஈ. 1839

67. மீரட் பகுதியில் கலகத்தில் ஈடுபட்ட புரட்சிக்காரர்கள் அங்கிருந்து புறப்பட்டு கீழ்க்கண்ட எந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்?

அ. தில்லி
ஆ. கான்பூர்
இ. பிகார்
ஈ. ராய்ப்பூர்

68. காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட போது இந்தியாவின் வைசிராய்

அ. லிட்டன் பிரபு
ஆ. கர்சன் பிரபு
இ. ரிப்பன் பிரபு
ஈ. டஃப்ரின் பிரபு

69. முதல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்

அ. 72
ஆ. 74
இ. 76
ஈ. 78


விடை: 61. ஈ 62. அ 63. ஆ 64. இ 65. இ 66. இ 67. அ 68. ஈ 69. ஈ
அரசியலமைப்பு - 1

1. பின்வருவனவற்றில் எது ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் அல்ல?

அ. ஜப்பான்
ஆ. சீனா
இ. ரஷ்யா
ஈ. பிரிட்டன்

2. பின்வருவனவற்றில் எது ஐ.நா.வின் அமைப்பு அல்ல?

அ. பன்னாட்டு நீதிமன்றம்
ஆ. டிரஸ்டிஷிப் கவுன்சில்
இ. எகனாமிக் அண்ட் சோசியல் கவுன்சில்
ஈ. ஹவுஸ் ஆப் காமன்ஸ்

3. எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ் தேசிய அவசர கால சட்டத்தை குடியரசுத் தலைவர் பிறப்பிக்கலாம்?

அ. 352வது பிரிவு
ஆ. 356வது பிரிவு
இ. 360வது பிரிவு
ஈ. 361வது பிரிவு

4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை வாழ்வதற்கான உரிமை என்பது

அ. அரசியல் உரிமை
ஆ. பொருளாதார உரிமை
இ. அடிப்படை உரிமை
ஈ. மத உரிமை

5. பின் வருவனவற்றில் எது மாநில அரசுகளால் மட்டுமே விதிக்கப்படக்கூடியது?

அ. கேளிக்கை வரி
ஆ. சொத்து வரி
இ. வருமான வரி
ஈ. கார்ப்பரேட் வரி

6. லோக்சபாவின் சபாநாயகரின் சம்பளத்தை நிர்ணயிப்பது யார்?

அ. ஜனாதிபதி
ஆ. சம்பள கமிஷன்
இ. கேபினட்
ஈ. பார்லிமெண்ட்

7. அரசியல்வாதியல்லாத இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?

அ. டாக்டர் ஜாகீர் உசேன்
ஆ. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
இ. டாக்டர் ராதாகிருஷ்ணன்
ஈ. டாக்டர் ராஜேந்திரபிரசாத்

8. ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?

அ. 3
ஆ. 4
இ. 5
ஈ. 6

9. பின்வரும் யூனியன் பிரதேசங்களில் ராஜ்ய சபாவில் பிரதிநிதிகள் இருப்பது இதற்கு மட்டும் தான்

அ. அந்தமான் நிகோபார் தீவுகள்
ஆ. டாமன் டையு
இ. புதுச்சேரி
ஈ. இவை எதுவுமில்லை

10. ராஜ்யசபா எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்படுகிறது?

அ. 6
ஆ. 5
இ. 2
ஈ. கலைக்கமுடியாது


விடை: 1. அ 2. ஈ 3. அ 4. இ 5. அ 6. ஈ 7. இ 8. ஈ 9. இ 10. ஈ
அரசியலமைப்பு - 2

11. அடிப்படை உரிமைகள் என்பது எந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன?

அ. பிரிட்டன்
ஆ. பிரான்ஸ்
இ. அமெரிக்கா
ஈ. சீனா

12. எந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நமது பாராளுமன்ற முறை வடிவமைக்கப்பட்டுள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. பிரான்ஸ்
இ. அமெரிக்கா
ஈ. சீனா

13. அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக் குழுவுக்கு தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நியமிக்கப்பட்ட போது அவர் எந்த அமைச்சராக இருந்தார்?

அ. உள்துறை
ஆ. வெளியுறவுத் துறை
இ. சட்டம்
ஈ. பாதுகாப்பு

14. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது சட்டத்திற்கு புறம்பானது?

அ. 22வது பிரிவு
ஆ. 24வது பிரிவு
இ. 21வது பிரிவு
ஈ. 27வது பிரிவு

15. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் நலிவடைந்தோருக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறது?

அ. 41வது பிரிவு
ஆ. 46வது பிரிவு
இ. 40வது பிரிவு
ஈ. 50வது பிரிவு

16. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் எத்தனை தடவை ஜனாதிபதியாக முடியும்?

அ. 2
ஆ. 1
இ. 3
ஈ. வரையறை இல்லை

17. நிதி மசோதாவை எங்கு தாக்கல் செய்யலாம்?

அ. லோக் சபா
ஆ. ராஜ்ய சபா
இ. இரண்டிலும்
ஈ. இவை எதிலும் இல்லை

18. ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு பின்வருவனவற்றில் எது தேவைப்படும் தகுதி?

அ. குறைந்தது 35வது நிரம்பியவராக இருக்க வேண்டும்
ஆ. லோக் சபா எம்.பி. பதவிக்கு போட்டியிடும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்
இ. இந்தியராக இருக்க வேண்டும்
ஈ. இவை அனைத்துமே

19. லோக் சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்த ஆண்டு வரை மாற்ற முடியாது?

அ. 2008
ஆ. 2009
இ. 2010
ஈ. 2026

20. இந்திய குடியுரிமையை வரையறுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது ஆகிய உரிமைகள் யாரிடம் உள்ளது?

அ. மத்திய அமைச்சரவை
ஆ. பாராளுமன்றம்
இ. உச்ச நீதிமன்றம்
ஈ. சட்ட கமிஷன்


விடை: 11. இ 12. அ 13. இ 14. ஆ 15. ஆ 16. ஈ 17. அ 18. ஈ 19. ஈ 20. ஆ
அரசியலமைப்பு - 3

21. ராஜ்யசபாவில் எத்தனை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படலாம்?

அ. 2
ஆ. 10
இ. 12
ஈ. 4

22. நீதிமன்றங்களால் தரப்படும் அதிக பட்ச தண்டனையை குறைப்பது, மன்னிப்பு அளிப்பது போன்ற உரிமைகள் அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்குத் தரப்பட்டுள்ளன?

அ. 70
ஆ. 71
இ. 72
ஈ. 69

23. உயர்நீதிமன்ற நீதிபதி எந்த வயது வரை பதவியில் இருக்கலாம்?

அ. 60
ஆ. 62
இ. 65
ஈ. நிர்ணயிக்கப்படவில்லை

24. நமது நாட்டின் உயர் பதவியிலிருப்பவர்களின் சம்பளங்களைப் பற்றிப் பேசுவது அரசியலமைப்பின் எந்த பாகம்?

அ. முதல்
ஆ. 2
இ. 8
ஈ. 10

25. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை பாகங்கள் உள்ளன?

அ. 10
ஆ. 8
இ. 12
ஈ. இவை எதுவும் இல்லை

26. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ. 14
ஆ. 15
இ. 18
ஈ. 22

27. மொழிகளை அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பாகம் அங்கீகரிக்கிறது?

அ. 7
ஆ. 8
இ. 9
ஈ. 10

28. பஞ்சாயத்து ராஜ் முறையை எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அங்கீகரித்தது?

அ. 72
ஆ. 70
இ. 73
ஈ. 74

29. ஓட்டளிக்கும் வயது எந்த ஆண்டு 21லிருந்து 18ஆகக் குறைக்கப்பட்டது?

அ. 1993
ஆ. 1983
இ. 1989
ஈ. 1979

30. அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அரசியலமைப்பின் எந்தத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது?

அ. 10
ஆ. 12
இ. 15
ஈ. முதல்


விடை: 21. இ 22. இ 23. ஆ 24. ஆ 25. இ 26. ஈ 27. ஆ 28. இ 29. இ 30. ஈ

31. மத்திய அரசின் ஊழியர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக் காலம் என்ன?

அ. 5 ஆண்டுகள்
ஆ. 10 ஆண்டுகள்
இ. 4 ஆண்டுகள்
ஈ. 6 ஆண்டுகள்

32. லோக் சபாவில் அதிக பட்சமாக எத்தனை உறுப்பினர்கள் இருக்க முடியும்?

அ. 250
ஆ. 245
இ. 525
ஈ. 545

33. நமது தேசியக் கொடி எப்போதிருந்து நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது?

அ. ஜூலை 22, 1947
ஆ. ஆகஸ்ட் 14, 1947
இ. ஆகஸ்ட் 15, 1947
ஈ. ஜனவரி 26, 1948

34. பஞ்சாப் மாநிலம் மொழிவாரியாக எந்த ஆண்டு ஹரியானா மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேசமாக சீரமைக்கப்பட்டது?

அ. 1966
ஆ. 1969
இ. 1971
ஈ. 1947

35. இந்தியை நமது அதிகாரபூர்வமான மொழியாக எந்த அரசியலமைப்புப் பிரிவு உறுதி செய்கிறது?

அ. 343வது பிரிவு
ஆ. 344வது பிரிவு
இ. இரண்டுமே
ஈ. இரண்டும் அல்ல

36. கட்சி மாறல் தடைச் சட்டம் எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தால் தடை செய்யப்படுகிறது?

அ. 51வது திருத்தம்
ஆ. 52வது திருத்தம்
இ. 53வது திருத்தம்
ஈ. இவை எதுவுமல்ல

37. அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பிரிவு திருத்தம் பற்றி கூறுகிறது?

அ. 365
ஆ. 356
இ. 368
ஈ. இவை எதுவுமில்லை

38. யூனியன் லிஸ்ட் எனப்படும் மத்திய அரசின் துறைகளில் எத்தனை பட்டியலிடப்பட்டுள்ளன?

அ. 100
ஆ. 107
இ. 97
ஈ. இவை எதுவும் இல்லை

39. அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட

அ. அந்த மசோதா இரு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
ஆ. தனித்தனியாக இரு அவைகளிலும் மெஜாரிட்டி உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்
இ. இந்த இரண்டும் சரியல்ல
ஈ. இந்த இரண்டும் சரி

40. ஐ.நா. எப்போது முறையாக நடைமுறைக்கு வந்தது?

அ. பிப்ரவரி 1945
ஆ. ஜூன் 1945
இ. ஆகஸ்ட் 1945
ஈ. அக்டோபர் 1945


விடை: 31. ஈ 32. ஈ 33. அ 34. அ 35. இ 36. ஆ 37. இ 38. இ 39. ஈ 40. ஈ

41. ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் உள்ள 5 நாடுகளில் எந்த நாட்டிற்கு வீட்டோ அதிகாரம் உள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. அமெரிக்கா
இ. ரஷ்யா
ஈ. இவை அனைத்திற்குமே


விடை: 41. ஈ

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை
ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை
இ. பாரிசு உடன்படிக்கை
ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர்
ஆ. யார்கண்டு
இ. பெஷாவர்
ஈ. எதுவுமில்லை

3. பொருத்துக:

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

அ. I-3 II-4 III-1 IV-2
ஆ. I-4 II-3 III-1 IV-2
இ. I-3 II-4 III-2 IV-1
ஈ. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை
ஆ. தொண்டி
இ. சித்தன்னவாசல்
ஈ. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர்
ஆ. ஜெயசேனர்
இ. தர்மபாலர்
ஈ. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம்
ஆ. பாரசீகம்
இ. இந்தியா
ஈ. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங்
ஆ. காரன் வாலிஸ்
இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்
ஈ. டல்கௌசி

8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன்
ஆ. இளஞ்சேரலாதன்
இ. அச்சுத களப்பாளன்
ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி
ஆ. மார்க்கோ போலோ
இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்
ஈ. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன்
ஆ. விஷ்ணுகோபன்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. எவருமில்லை


விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ




அ. ஸ்ரீ சதகர்னி
ஆ. கௌதமிபுத்திர சதகர்னி
இ. வஷிஷ்டபுத்திர புலுமயி
ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

அ. புனே
ஆ. கார்வார்
இ. புரந்தர்
ஈ. ராய்கார்

13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

அ. அஜாதசத்ரு
ஆ. பிந்துசாரர்
இ. காரவேலர்
ஈ. மயூரசரோனர்

14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

அ. சமுத்திரகுப்தர்
ஆ. அசோகர்
இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
ஈ. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

அ. கஜினி முகமது
ஆ. குத்புதீன் ஐபெக்
இ. கோரி முகமது
ஈ. அலாவுதீன் கில்ஜி

16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

அ. நேபாளம்
ஆ. திபெத்
இ. இந்தியா
ஈ. பர்மா

17. டெல்லியின் பழங்காலப் பெயர்

அ. தேவகிரி
ஆ. தட்ச சீலம்
இ. இந்திர பிரஸ்தம்
ஈ. சித்துபரம்

18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

அ. ஜெயசந்திரன்
ஆ. ஜெயசேனர்
இ. ஹரிசேனர்
ஈ. எவருமில்லை

19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

அ. குமார குப்தர்
ஆ. ஸ்கந்த குப்தர்
இ. ஹர்ஷர்
ஈ. யுவான் சுவாங்

20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

அ. பல்லவர் ஓவியம்
ஆ. வீணை
இ. பல்லவர் கால நாடகம்
ஈ. மாமல்லபுரம் சிற்பம்


விடை: 11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ



அ. கோரி முகமது
ஆ. கஜினி முகமது
இ. பிரிதிவிராசன்
ஈ. மகேந்திர பல்லவன்

22. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்

அ. குத்புதீன் அய்பெக்
ஆ. முகமதுபின் துக்ளக்
இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி
ஈ. ஜெயசந்திரன்

23. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

அ. புத்த மதம்
ஆ. சமண மதம்
இ. இந்து மதம்
ஈ. பார்சி

24. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

அ. இல்ட்டுட் மிஷ்
ஆ. அலிமர்த்தன்
இ. ஆராம்ஷா
ஈ. எவருமில்லை

25. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

அ. சாந்த் பீவி
ஆ. நூர்ஜஹான்
இ. மும்தாஜ் மகால்
ஈ. ரசியா பேகம்

26. மகாவீரர் இறந்த போது அவரது வயது

அ. 42
ஆ. 57
இ. 62
ஈ. 72

27 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

அ. மதம்
ஆ. யோகா
இ. தத்துவம்
ஈ. சட்டம்

28. நந்த வம்சத்தை தொடங்கியவர்

அ. மகாபத்ம நந்தர்
ஆ. தன நந்தர்
இ. ஜாத நந்தன்
ஈ. ரிசாதனன்

29. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

அ. சந்திர குப்த மவுரியர்
ஆ. அசோகர்
இ. கனிஷ்கர்
ஈ. ஹர்ஷர்

30. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

அ. ஜீலம்
ஆ. கோதாவரி
இ. நர்மதை
ஈ. தபதி


விடை: 21. இ 22. இ 23. அ 24. ஆ 25. ஈ 26. ஈ 27. இ 28. அ 29. இ 30. இ



31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்

அ. அய்ஹோலி
ஆ. ஹம்பி
இ. காஞ்சி
ஈ. வாதாபி

32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?

அ. பிம்பிசாரர்
ஆ. சந்திரகுப்த மவுரியர்
இ. அசோகர்
ஈ. புஷ்யமித்ர சுங்கர்

33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன்
ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான்
இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப்
ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங்

34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

அ. வாஷிங்டன்
ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின்
இ. தாமஸ் ஜெபர்சன்
ஈ. கால்வின் கூலிட்ஜ்

35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

அ. ஒரியா
ஆ. சமஸ்கிருதம்
இ. உருது
ஈ. பாலி

36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

அ. ராமானுஜர்
ஆ. ஆதிசங்கரர்
இ. சங்கராச்சாரியார்
ஈ. சுவாமி விவேகானந்தர்

37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

அ. 2
ஆ. 3
இ. 5
ஈ. 19

38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

அ. இமயமலை
ஆ. அரபிக் கடல்
இ. இந்தியப் பெருங்கடல்
ஈ. இவை எதுவும் இல்லை

39. ரத்னாவளியை இயற்றியவர்

அ. கனிஷ்கர்
ஆ. வால்மீகி
இ. ஹர்ஷர்
ஈ. ஹரிஹரபுக்கர்

40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி
ஆ. சதியால் கொல்லப்பட்டவர்
இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார்
ஈ. இவை அனைத்தும் சரி


விடை: 31. அ 32. ஆ 33. ஆ 34. இ 35. ஈ 36. அ 37. இ 38. ஆ 39. இ 40. ஈ

41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு
ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு
இ. பண்டைய இந்தியாவின் எடை முறை
ஈ. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது
ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது
இ. நமது வேதங்களைப் பற்றியது
ஈ. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம்
ஆ. பிராக்கிருதம்
இ. தெலுங்கு
ஈ. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர்
ஆ. கீர்த்திவர்மன்
இ. யசோதவர்மன்
ஈ. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க
ஆ. விலங்குகளை வளர்க்க
இ. சக்கரங்களை செய்ய
ஈ. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம்
ஆ. அறியாமை அகற்றுதல்
இ. நோம்பு
ஈ. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து
ஆ. சாரநாத்
இ. கோசலம்
ஈ. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர்
ஆ. பாணர்
இ. ஹரிசேனர்
ஈ. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல்
ஆ. புத்த இலக்கியம்
இ. மருத்துவ நூல்
ஈ. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம்
ஆ. பெஷாவர்
இ. கனிஷ்கபுரம்
ஈ. கோட்டான்


விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல்
ஆ. நடுகல்
இ. வீரக்கல்
ஈ. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம்
ஆ. சுமேரிய நாகரீகம்
இ. சிந்து சமவெளி நாகரீகம்
ஈ. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன்
ஆ. குத்புதீன்
இ. ஜலாலுதீன்
ஈ. நசுருதீன்

54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர்
ஆ. அவுரங்கசீப்
இ. அக்பர்
ஈ. ஷாஜகான்

55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி
அ. 1, 2, 3, 4
ஆ. 2, 1, 3, 4
இ. 1, 2, 4, 3
ஈ. 2, 1, 4, 3

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம்
ஆ. புத்த மதம்
இ. இந்து மதம்
ஈ. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர்
ஆ. கணித மேதை
இ. தத்துவஞானி
ஈ. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319
ஆ. 1327
இ. 1339
ஈ. 1345

59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை
ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை
இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள்
ஈ. இவை எதுவும் இல்லை

60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர்
ஆ. ஜஹாங்கீர்
இ. அவுரங்கசீப்
ஈ. அலாவுதீன் கில்ஜி


விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ


அ. பிலிப்பைன்ஸ்
ஆ. தாய்லாந்து
இ. கம்போடியா
ஈ. வியட்னாம்

62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி?

அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது
ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது
இ. ஜாதி முறையை கண்டித்தது
ஈ. அவை அனைத்துமே சரி

63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர்

அ. தைமூர்
ஆ. செங்கிஸ்கான்
இ. பெரோஷ் துக்ளக்
ஈ. அனைவரும்

64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு

அ. 1173
ஆ. 1174
இ. 1175
ஈ. 1176

65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?

அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்
ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில்
இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம்
ஈ. இவை அனைத்துமே சரி

66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று?

அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார்
ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார்
இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது
ஈ. இவை அனைத்தும் சரி

67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?

அ. அசோகர்
ஆ. சிவாஜி
இ. கனிஷ்கர்
ஈ. சந்திரகுப்தர்

68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்?

அ. ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ. மகாவீரர்
இ. கௌதம புத்தர்
ஈ. விவேகானந்தர்

69. சஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது?

அ. நிலவரி
ஆ. அரசின் வருமான வரி
இ. வானியல்
ஈ. மருத்துவம்

70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன?

அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை
ஆ. கிராம சுயாட்சி
இ. சிறப்பான உள்ளாட்சி முறை
ஈ. இவை அனைத்துமே


விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ


வரலாறு - 8

71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்?

அ. துன்பம்
ஆ. துன்பத்திற்கான காரணம்
இ. துன்பத்தை களைவது
ஈ. இவை அனைத்தையும்

72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?

அ. கி.மு. 310
ஆ. கி.மு. 342
இ. கி.மு. 362
ஈ. கி.மு. 326

73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது?

அ. ஹர்ஷர்
ஆ. பாபர்
இ. அக்பர்
ஈ. ஹுமாயூன்

74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

அ. 10
ஆ. 2
இ. 5
ஈ. 15

75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர்

அ. ஹர்ஷர்
ஆ. தர்மபாலன்
இ. தேவபாலன்
ஈ. எவருமில்லை

76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்?

அ. பாண்டியர்கள்
ஆ. கேரளாபுத்திரர்கள்
இ. சத்யபுத்திரர்கள்
ஈ. இவர்கள் அனைவரையும்

77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?

அ. பாஸ்கரவர்மன்
ஆ. பாஸ்கராச்சாரியர்
இ. பத்ரபாகு
ஈ. பில்கானா

78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது?

அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது
ஆ. சடங்குகளை மறுத்தது
இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது
ஈ. இவை அனைத்துமே

79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன?

அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம்
ஆ. லெனின் சிறை வைப்பு
இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது
ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது

80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது?

அ. வஜ்ஜி
ஆ. வத்சா
இ. சுராசேனா
ஈ. அவந்தி


விடை: 71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ

81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது?

அ. சென்னப்பட்டினம்
ஆ. காஞ்சிபுரம்
இ. மதுரை
ஈ. மகாபலிபுரம்

82. களப்பிரர்களின் காலம் எது?

அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு
ஆ. 3 - 6ம் நூற்றாண்டு
இ. 5 - 8ம் நூற்றாண்டு
ஈ. இவை எதுவுமில்லை

83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்?

அ. அஜாத சத்ரு
ஆ. பிம்பிசாரர்
இ. நந்திவர்த்தனர்
ஈ. அசோகர்

84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது?

அ. பல்லவர்கள்
ஆ. சோழர்கள்
இ. குப்தர்கள்
ஈ. முகலாயர்கள்

85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன?

அ. 14
ஆ. 13
இ. 15
ஈ. 12

86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்?

அ. துருக்கியர்
ஆ. அரேபியர்
இ. பதானியர்
ஈ. ஆப்கானியர்

87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு

அ. 1326
ஆ. 1349
இ. 1372
ஈ. 1398

88. 'அல்பரூனி' யாருடன் இந்தியா வந்தார்

அ. முகமது கஜினி
ஆ. முகமது கோரி
இ. முகமது பின் காசிம்
ஈ. தைமூர்

89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை

அ. கன்னோசி - பிரதிகாரர்கள்
ஆ. ஆஜ்மீர் - சவுக்கான்கள்
இ. சந்தேளர்கள் - பந்தல்கண்ட்
ஈ. பாளர்கள் - டெல்லி

90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர்

அ. முதலாம் ராஜராஜன்
ஆ. முதலாம் குலோத்துங்கன்
இ. முதலாம் ராஜேந்திரன்
ஈ. இரண்டாம் ராஜராஜன்


விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ

91. மயில் சிம்மாசனம் எந்த அரசருக்காக உருவாக்கப்பட்டது?

அ. ஹுமாயூன்
ஆ. ஷாஜகான்
இ. அக்பர்
ஈ. நாதிர் ஷா

92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்?

அ. ரவீந்திர நாத் தாகூர்
ஆ. ராஜாராம் மோகன் ராய்
இ. சுவாமி தயானந்தர்
ஈ. கேசாப் சந்திர சென்

93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?

அ. குரு அர்ஜுன் தேவ்
ஆ. குரு ஹர்கோவிந்த்
இ. குரு ஹர்கிஷன்
ஈ. குர் தேஜ் பகதூர்

94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. ஷெர்ஷா சூரி
இ. பாபர்
ஈ. அக்பர்

95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்?

அ. அபுல் பாசல்
ஆ. பைசி
இ. அப்பாஸ் கான் ஷெர்வானி
ஈ. பீர்பால்

96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன?

அ. 11 வயது
ஆ. 14 வயது
இ. 12 வயது
ஈ. 17 வயது

97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்?

அ. ஷேக் பக்ரித்
ஆ. நிஜாமுதீன் அவுலியா
இ. சலிம் சிஸ்டி
ஈ. ஷேக் பக்டியார் காக்கி

98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

அ. கிருஷ்ணா
ஆ. காவேரி
இ. துங்கபத்ரா
ஈ. கோதாவரி

99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. இரண்டாம் ஹரிஹரர்
ஆ. விஜய ராயர்
இ. இரண்டாம் புக்கர்
ஈ. ஹரிஹரர், புக்கர்

100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்?

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. முபாரக் ஷா கில்ஜி
இ. குஸ்ரு ஷா
ஈ. முகமது பின் துக்ளக்


விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ

111. ரிக் வேத காலத்தில் காணப்படும் காயத்ரி மந்திரம் யாரைக் குறிக்கிறது?

அ. இந்திரன்
ஆ. சாவித்ரி
இ. வருணன்
ஈ. அக்னி

112. சுக்தம் என்பது எதைக் குறிக்கிறது?

அ. வேதகாலத்து அரசரை
ஆ. ஒரு பிராமணரை
இ. வேதத்தில் உள்ள மந்திரங்களை
ஈ. உபநிடம் ஒன்றின் பெயரை

113. சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?

அ. சந்தோக்ய உபநிடம்
ஆ. முண்டக உபநிடம்
இ. மைத் உபநிடம்
ஈ. கதக உபநிடம்

114. காந்தாரக் கலை புத்த மதத்தின் எந்தப் பிரிவோடு தொடர்புடையது?

அ. ஹீனயானம்
ஆ. மகாயானம்
இ. வஜ்ராயனம்
ஈ. ஜென் புத்த பிரிவு

115. பதஞ்சலி முனிவரின் ஆலோசனையின்படி எந்த சுங்க மன்னன் அஸ்வமேத யாகம் நடத்தினான்?

அ. புஷ்யமித்திரர்
ஆ. அக்னிமித்திரர்
இ. சுஜ்யேஷ்தர்
ஈ. சுமித்திரர்

116. யாருடைய காலத்தில் அஜந்தா ஓவியங்கள் வரையத் தொடங்கப்பட்டன?

அ. சுங்கர்
ஆ. சாதவாகனர்
இ. கன்வர்
ஈ. குஷாணர்

117. சிந்து சமவெளி நாகரீகத்தின் முக்கியமான அம்சம் என்ன?

அ. பிரம்மாண்டமான கோயில்கள்
ஆ. சிறந்த நகர்ப்புற திட்டமிடல்
இ. கலை மற்றும் கட்டிடக் கலை
ஈ. பெரிய ஸ்தூபிகள்

118. ஹரப்பாவின் எந்தப் பகுதியோடு நெல் பயிரிடுதல் தொடர்புடையது?

அ. களிபங்கன்
ஆ. லோதல்
இ. கோட் டிஜி
ஈ. ரோபார்

119. பின்வரும் வெளிநாட்டு தூதர்களில் யார் இந்தியாவிற்கு வரவில்லை?

அ. ஹுவான் சுவாங்
ஆ. அதனேஷியஸ் நிகிடின்
இ. எட்வர்ட் பார்போசா
ஈ. எட்வர்ட் டிரேக்

120. இந்திய தொல்லியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ. அலெக்சாண்டர் கன்னிங்காம்
ஆ. கர்சன் பிரபு
இ. மார்டைமர் வீலர்
ஈ. ஜான் மார்ஷல்


விடை: 111. ஆ 112. இ 113. ஆ 114. ஆ 115. அ 116. ஆ 117. ஆ 118. ஆ 119. ஈ 120. அ

121. பின்வருவனவற்றில் எது மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?

அ. அரிசி
ஆ. சோளம்
இ. பார்லி, கோதுமை
ஈ. மில்லட்

122. சமஸ்கிருத மொழி வார்த்தையான இந்து எதைக் குறிக்கிறது?

அ. மொழி
ஆ. ஆறு
இ. மதம்
ஈ. ஜாதி

123. கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

அ. இரும்பு
ஆ. செம்பு
இ. வெண்கலம்
ஈ. தகரம்

124. அசோகரின் கல்வெட்டுக்கள் 1837ல் யாரால் விளக்கப்பட்டன?

அ. ஜேம்ஸ் பிரின்செப்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. வின்சென்ட் ஸ்மித்
ஈ. மேக்ஸ் மியூலர்

125. ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சி எவ்வாறும் அழைக்கப்படுகிறது?

அ. அக்டோபர் புரட்சி
ஆ. நவம்பர் புரட்சி
இ. டிசம்பர் புரட்சி
ஈ. ஜனவரி புரட்சி

126. சிந்து சமவெளி நாகரீகம் எங்கு பரவியிருந்தது?

அ. பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான், குஜராத்
ஆ. பஞ்சாப், சிந்து, வங்காளம், பீகார்
இ. பஞ்சாப், சிந்து, ஜம்மு காஷ்மீர், ஒரிசா
ஈ. சிந்து, கங்கை கரையோரப் பகுதிகள்

127. பின் வேத காலம் என்பது

அ. ரிக் வேத காலம்
ஆ. இதிகாச காலம்
இ. உலோக காலம்
ஈ. மேற்கண்ட அனைத்தும்

128. ரிக் வேதத்தில் சாதிகளைப் பற்றிய குறிப்பு உள்ள பாடல்

அ. கிரகஸ்தம்
ஆ. புருஷசூக்தம்
இ. கோஷோலிங்கம்
ஈ. மனிஷ்தம்

129. சிந்து சமவெளி நகரான மொஹஞ்சதாரோவைக் கண்டுபிடித்தவர்

அ. சர் ஜான் மார்ஷல்
ஆ. ஆர்.டி. பானர்ஜி
இ. தயாராம் ஷானி
ஈ. சர்மார்டிமர் வீலர்

130. பின் வேத காலத்தில்

அ. பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்
ஆ. பலதார மணம் நடைமுறையில் இருந்தது
இ. குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தன
ஈ. பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது


விடை: 121. ஆ 122. ஆ 123. ஆ 124. அ 125. அ 126. அ 127. ஆ 128. ஆ 129. ஆ 130. ஆ

131. கீழ்க்கண்டவற்றை சரியாக வரிசைப்படுத்துக.

1. கிரகஸ்தம்
2. வனப்பிரஸ்தம்
3. சன்னியாசம்
4. பிரமச்சரியம்

அ. 4, 1, 2, 3
ஆ. 1, 2, 4, 3
இ. 1, 4, 2, 3
ஈ. 4, 2, 3, 1

132. இரும்பு காலத்தில் செய்யப்பட்ட கருவிகள்

அ. கத்தி
ஆ. கலப்பை
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

133. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. மொஹஞ்சதாரோ - பஞ்சாப்
ஆ. காலிபங்கன் - ராஜஸ்தான்
இ. லோத்தல் - குஜராத்
ஈ. எதுவுமில்லை

134. பின் வருவனவற்றில் எது சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?

அ. குதிரை
ஆ. எருமை
இ. செம்மறி ஆடுகள்
ஈ. பன்றி

135. சிந்து சமவெளி நாகரீகத்தில் மக்களை ஆட்சி செய்தது யார்?

அ. குருக்கள்
ஆ. வியாபாரிகள்
இ. பேரரசர்
ஈ. மக்களுடைய பிரதிநிதிகள்

136. சிந்து சமவெளி நாகரீக மக்கள் வணங்கிய கடவுள் யாருடைய சாயலில் இருந்ததாக கூறப்படுகிறது?

அ. விஷ்ணு
ஆ. வருணர்
இ. பசுபதி
ஈ. பிரம்மா

137. சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரம் எது?

அ. பானாவளி
ஆ. லோதல்
இ. ரோபார்
ஈ. ஹரப்பா

138. சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது?

அ. கோதுமை
ஆ. அரிசி
இ. பார்லி
ஈ. சோளம்

139. சிந்து சமவெளி மக்கள் எதை புனிதமாக வணங்கினார்கள்?

அ. மயில்
ஆ. கருடன்
இ. பசு
ஈ. திமில்காளை

140. சிந்து சமவெளி மக்கள் எதிலிருந்து பெறப்பட்ட ஆடையை அணிந்தனர்?

அ. பட்டு
ஆ. விலங்கு தோல்
இ. பருத்தி
ஈ. பருத்தி மற்றும் கம்பளி


விடை: 131. அ 132. இ 133. அ 134. அ 135. ஆ 136. இ 137. ஆ 138. அ 139. ஈ 140. ஈ

141. ஹரப்பா மக்கள் கீழ்க்கண்ட எந்த நாட்டினரோடு வாணிபத் தொடர்பு வைத்திருக்கவில்லை?

அ. ஈரான்
ஆ. மெசபடோமியா
இ. ரோம்
ஈ. ஆப்கானிஸ்தான்

142. சிந்து சமவெளி நாகரீகத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் எதில் செய்யப்பட்டவை?

அ. கற்கள்
ஆ. டெர்ரகோட்டா
இ. வெண்கலம்
ஈ. செம்பு

143. ஹரப்பா மண் பாண்டங்கள் பொதுவாக எந்த நிறத்தைக் கொண்டிருந்தன?

அ. மஞ்சள்
ஆ. ஊதா பச்சை
இ. கருஞ்சிவப்பு
ஈ. இளஞ்சிவப்புடன் கூடிய மஞ்சள்

144. வேத வழிபாட்டு நூல்

அ. ரிக் வேதம்
ஆ. சாம வேதம்
இ. யஜூர் வேதம்
ஈ. அதர்வண வேதம்

145. மகாவீரர் பிறந்த இடம்

அ. லும்பினி
ஆ. கயா
இ. குந்தகிராமம்
ஈ. லிச்சாவி

146. ரிக் வேதத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை

அ. 1024
ஆ. 1028
இ. 1032
ஈ. 1036

147. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்

அ. கூன்பாண்டியன்
ஆ. சடாவர்ம சுந்தரப் பாண்டியன்
இ. விஜயாலய சோழன்
ஈ. சேரன் இளஞ்சேரலாதன்

148. புத்த மற்றும் சமண சமயங்கள் தோன்ற காரணமான சூழல் எது?

அ. சமய இலக்கியங்கள் புரியாத சமஸ்கிருதத்தில் இருந்தன
ஆ. சடங்குகள் மற்றும் வேள்விகள்
இ. சாதிமுறை கடுமையாக இருந்தன
ஈ. இவை அனைத்தும்

149. கீழ்க்கண்ட யார் புத்த மதத்தின் கடும் எதிரி?

அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. அஜாத சத்ரு
ஈ. புஷ்ய மித்ர சுங்கன்

150. நான்காவது புத்த மத மாநாட்டை கூட்டியவர்

அ. அசோகர்
ஆ. கனிஷ்கர்
இ. ஹர்ஷர்
ஈ. விக்ரமாதித்யர்


விடை: 141. இ 142. ஆ 143. ஈ 144. இ 145. இ 146. ஆ 147. அ 148. ஈ 149. ஈ 150. ஆ


அ. இண்டிகா
ஆ. அர்த்த சாஸ்திரம்
இ. குஜராத் வரலாறு
ஈ. அனைத்தும்

152. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு

அ. யானை
ஆ. மாடு
இ. குதிரை
ஈ. மான்

153. அலெக்சாண்டரின் நண்பர்

அ. செலியூகஸ் நிகேடர்
ஆ. அரிஸ்டாடில்
இ. நியர்சஸ்
ஈ. பிலிஃப்

154. பொருத்துக:

I. பத்ரபாகு - 1. கலிங்க அரசன்
II. சசாங்கன் - 2. சமணத் துறவி
III. பிரகதத்தன் - 3. மௌரிய அரசன்
IV. விசாகத்தன் - 4. முத்ரா ராட்சசம்

அ. I-1, II-2, III-3, IV-4
ஆ. I-1, II-3, III-2, IV-4
இ. I-2, II-1, III-4, IV-3
ஈ. I-2, II-1, III-3, IV-4

155. சமண மதம் எந்த 2 பிரிவுகளாகப் பிரிந்தது?

அ. ஹீனயானம், மகாயானம்
ஆ. தெரவாடின், ஷின்டோ
இ. திகம்பர், ஸ்வேதாம்பர்
ஈ. மகாசங்கிகர், வஜ்ரயானர்

156. மௌரியக் கலையின் சிறப்பம்சம் என்ன?

அ. பூக்கள் வடிவம்
ஆ. விலங்கள் வடிவம்
இ. கடவுளின் உருவங்கள்
ஈ. தூண்கள்

157. மௌரியக் கட்டடங்கள் மற்றும் சிற்பங்களுக்கான கல் எங்கிருந்து வந்தது?

அ. ஜெய்பூர்
ஆ. தென்னிந்தியா
இ. இந்தியாவிற்கு வெளியிலிருந்து
ஈ. சுணார்

158. ஹைடஸ்பஸ் என்னும் நதிக்கரையில் அலெக்ஸாண்டர் போரஸ் மன்னரை தோற்கடித்தார். இந்த ஹைடஸ்பஸ் என்பது பஞ்சாபின் எந்த நதியைக் குறிக்கிறது?

அ. ஜீலம்
ஆ. சட்லஜ்
இ. பியாஸ்
ஈ. சீனாப்

159. குப்த பேரரசை நிறுவியவர் யார்?

அ. ஸ்ரீகுப்தர்
ஆ. கடோகசர்
இ. முதலாம் சந்திரகுப்தர்
ஈ. சமுத்திரகுப்தர்

160. விக்கிரமாதித்யர் என்னும் பட்டம் யாருக்குத் தரப்பட்டது?

அ. இரண்டாம் சந்திரகுப்தர்
ஆ. முதலாம் சந்திரகுப்தர்
இ. கடோகசர்
ஈ. ஸ்கந்தகுப்தர்


விடை: 151. அ 152. ஈ 153. இ 154. 155. இ 156. ஆ 157. இ 158. அ 159. அ 160. அ

161. எந்த குப்த மன்னன் காலத்தில் பாகியான் இந்தியாவிற்கு வந்தார்?

அ. குமாரகுப்தர்
ஆ. ஸ்கந்தகுப்தர்
இ. முதலாம் சந்திரகுப்தர்
ஈ. இரண்டாம் சந்திரகுப்தர்

162. சதி என்னும் உடன்கட்டையின் தொடக்க கால நடைமுறை கி.பி. 510ல் குப்தர்கள் காலத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. இது எங்கு காணப்பட்டது?

அ. விதிஷா
ஆ. மால்வா
இ. உஜ்ஜயின்
ஈ. எரான்

163. பின்வரும் கலை வடிவங்களில் எது குப்தர்களின் காலத்தோடு அடையாளம் காணப்படுகிறது?

அ. மெக்ரவுலியில் உள்ள இரும்பு தூண்கள்
ஆ. சுல்தான்கஞ்சில் உள்ள புத்தன் வெண்கலச் சிலை
இ. புமாரா, பிடார்காவுன், பிரிட்டா, தியோகல் உள்ள செங்கல் கோவில்கள் மற்றும் அஜந்தா ஓவியங்கள்
ஈ. இவை அனைத்துமே

164. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசன் படைப்பு எது?

அ. துசம்ஹாரம்
ஆ. மேகதூதம்
இ. சகுந்தலம்
ஈ. ஹவம்சம்

165. யாத்திரிகர்களின் இளவரசர் என அழைக்கப்படுபவர் யார்?

அ. பாகியான்
ஆ. யுவான்சுவாங்
இ. இட்சிங்
ஈ. இவர் அனைவருமே

166. பொருளாதார மற்றும் கலாச்சாரம் தொடர்பானவற்றில் வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் பாலமாக விளங்கியது யார்?

அ. ராஷ்டிரகூடர்கள்
ஆ. பாலர்கள்
இ. பல்லவர்கள்
ஈ. சோழர்கள்

167. சோழப் பேரரசை நிறுவியவர் யார்?

அ. விஜயாலயா
ஆ. முதலாம் ராஜேந்திரர்
இ. ராஜராஜன்
ஈ. விஜயேந்திரர்

168. வர்த்தமானர்களின் தலைநகரம்

அ. தானேஸ்வரம்
ஆ. தட்ச சீலம்
இ. அவந்தி
ஈ. எதுவுமில்லை

169. 'சாக்கியமுனி' என்று பாராட்டப்படுபவர்

அ. பாகியான்
ஆ. மகாவீரர்
இ. ஹேமச்சந்திரர்
ஈ. யுவான் சுவாங்

170. கீழ்க்கண்ட எது ஹர்ஷரால் எழுதப்பட்டது?

அ. இரத்னாவளி
ஆ. காதம்பரி
இ. சுலோகபாரதி
ஈ. ஹர்ஷ சரிதம்


விடை: 161. ஈ 162. ஈ 163. ஈ 164. இ 165. ஆ 166. அ 167. அ 168. அ 169. ஈ 170. அ

171. கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.

அ. (A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்
ஆ. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல
இ. (A) சரி (R) தவறு
ஈ. (A) தவறு (R) சரி

172. ஹர்ஷர் தானேஸ்வரத்தின் மன்னனாக பதவியேற ஆண்டு

அ. கி.பி. 606
ஆ. கி.பி. 608
இ. கி.பி. 609
ஈ. கி.பி. 611

173. ஹர்ஷர் மரணமடைந்த ஆண்டு

அ. கி.பி. 619
ஆ. கி.பி. 637
இ. கி.பி. 647
ஈ. கி.பி. 657

174. இரண்டாம் புலிகேசி ஈரான் நாட்டுத் தூதுவரை வரவேற்கும் காட்சி ஓவியமாக செதுக்கப்பட்டுள்ள இடம்

அ. அஜந்தா
ஆ. எல்லோரா
இ. பாதாமி
ஈ. அய்ஹோலி

175. இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்ட ஆண்டு

அ. கி.பி. 642
ஆ. கி.பி. 753
இ. கி.பி. 755
ஈ. கி.பி. 767

176. ராஷ்டிர கூடர்களில் சிறந்த அரசர்

அ. தண்டி துர்கா
ஆ. மூன்றாம் கோவிந்தர்
இ. சிம்ம விஷ்ணு
ஈ. ஜெயவர்தனன்

177. பிரயாகை நதிக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசர்

அ. இரண்டாம் புலிகேசி
ஆ. ஹர்ஷவர்த்தனர்
இ. மூன்றாம் கோவிந்தர்
ஈ. அனைவரும்

178. 'சியூக்கி' என்னும் நூலை எழுதியவர்

அ. தர்மபாலர்
ஆ. ஹரிசேனர்
இ. யுவான் சுவாங்
ஈ. பாஹியான்

179. 'மகிபாலர்' என்பவர்

அ. கன்னோசி அரசன்
ஆ. வங்காள அரசன்
இ. ஹர்ஷரின் தளபதி
ஈ. மாளவ அரசன்

180. பொருத்துக:

I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள்

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3


விடை: 171. இ 172. 606 173. இ 174. அ 175. அ 176. ஆ 177. ஆ 178. இ 179. ஆ 180. ஆ
வரலாறு - 19

181. சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதை கண்டறிக.

அ. பிரித்திவிராசன் - சவுகான்
ஆ. ஜெயசந்திரன் - கஜினி நகர்
இ. ஷாநாமா - அபுபாஸல்
ஈ. தில்வாரா - ஆக்ரா

182. 'பதஞ்சலி' என்பவர்

அ. கன்வர்களின் படைத்தளபதி
ஆ. கலிக மரபின் அரசர்
இ. ஒரு சமஸ்கிருத இலக்கண வல்லுனர்
ஈ. பாலி மொழியில் புத்தகத்தை பரப்பியவர்

183. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.

1. அசுவகோஷர் - மகாவிபாஷம்
2. காளிதாசர் - மாளவி காக்கினி மித்ரம்
3. விசாகதத்தர் - முத்ரா ராக்டியம்

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 2 மற்றும் 3
ஈ. 1 மற்றும் 3

184. சுங்கர்களின் லட்சியமாக இருந்தது

அ. புத்த மதத்தை உலகெங்கும் பரப்புதல்
ஆ. வேத மதமான இந்து மதத்தை பரப்புதல்
இ. இலக்கியப் பணிகளில் முத்திரைப் பதித்தல்
ஈ. கட்டிடக் கலையில் சாதனை

185. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு

அ. கி.பி. 72
ஆ. கி.பி. 120
இ. கி.பி. 78
ஈ. கி.பி. 90

186. கீழ்க்கண்டவற்றில் தவறான தகவல்

1. மகாயானத்தில் புத்தர் கடவுளாக கருதப்படுகிறார்
2. மகாயானம் சமஸ்கிருதத்தில் பரப்பப்பட்டது
3. மகாயானம் ஹர்ஷரால் பின்பற்றப்பட்டது

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 3 மட்டும்
ஈ. எதுவுமில்லை

187. கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் உள்ள சிந்துவெளி நாகரீக நகரம்

1. ரூபர்
2. லோத்தல்
3. மொஹஞ்சதாரோ

அ. அனைத்தும்
ஆ. 1 மற்றும் 2
இ. 1 மற்றும் 3
ஈ. 2 மற்றும் 3

188. ஹரப்பா நாகரீகத்தில் இருந்த துறைமுக நகர்

அ. மொகஞ்சதாரோ
ஆ. ரூபர்
இ. காலிபங்கன்
ஈ. லோத்தல்

189. சுசுருசமிதம் எழுதிய சுசுருதர் கீழ்க்கண்ட யார் காலத்தைச் சார்ந்தவர்

அ. கனிஷ்கர்
ஆ. ஹர்ஷர்
இ. இரண்டாம் சந்திர குப்தா
ஈ. அனைவர் காலத்திலும் வாழ்ந்தவர்

190. சாத வாகனர்கள் ஆண்ட பகுதி

அ. இந்தியாவின் வடமேற்கு பகுதி
ஆ. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி
இ. கங்கைச் சமவெளி மற்றும் சம்பல் பள்ளத்தாக்கு
ஈ. கிருஷ்ணா-கோதாவரி ஆறுகளுக்கு இடையில்


விடை: 181. அ 182. இ 183. இ 184. ஆ 185. இ 186. ஈ 187. ஆ 188. ஈ 189. அ 190. ஈ

191. சமுத்திர குப்தரை இந்திய நெப்போலியன் என்று வர்ணித்தவர்

அ. ஜான் மார்ஷல்
ஆ. டாக்டர் ஸ்மித்
இ. ஆர்.டி. பானர்ஜி
ஈ. டாக்டர். பி. மங்கள முருகேசன்

192. சேர அரசர்களைப் பற்றி கூறும் நூல்

அ. மூவருலா
ஆ. பதிற்று பத்து
இ. புறநானூறு
ஈ. பரிபாடல்

193. 'அவனி சுந்தரி' கதையை எழுதியவர்

அ. கல்கி
ஆ. பரஞ்சோதி
இ. யுவான்சுவாங்
ஈ. தண்டின்

194. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான பிரதிகாரர்கள் மரபை தோற்றுவித்தவர்

அ. மகேந்திரபாலன்
ஆ. நாகப்பட்டர்
இ. விசால் தேவர்
ஈ. பிரிதிவி ராசன்

195. ராஜேந்திர சோழனால் கங்கை கரையில் தோற்கடிக்கப்பட்டவர்

அ. தர்மபாலன்
ஆ. கோபாலன்
இ. மகிபாலன்
ஈ. உபேந்திரர்

196. கஜினியால் தாக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தின் அமைவிடம்

அ. தில்வாரா
ஆ. சித்தோர்கர்
இ. கத்தியவார்
ஈ. புவனேஸ்வரம்

197. கஜினி முகம்மதுவின் இந்தியாவில் கடைசி படையெடுப்பு

அ. மதுரா
ஆ. கலிஞ்சார்
இ. சோமநாதபுரம்
ஈ. தானேஸ்வரம்

198. ராஜபுத்திரர்களின் ஒரு பிரிவான சந்தேல மரபின் கடைசி அரசனை தோற்கடித்தவர்

அ. கஜினி முகமது
ஆ. கோரி முகமது
இ. குத்புதீன் அய்பெக்
ஈ. சபக்டிஜின்

199. ராஜபுத்ர மன்னர்கள் போரில் இறந்தால் அல்லது தோல்வியடைந்தால் அரச குடும்பத்து பெண்கள் தீக்குளித்து இறந்து விடுவர். இந்நிகழ்வு கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டது.

அ. சதி
ஆ. ஜவ்ஹர்
இ. விலாவித்
ஈ. எதுவுமில்லை

200. ராஜசேகரர் எழுதிய நூல்

அ. பால ராமாயணம்
ஆ. பாலபாரதம்
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை


விடை: 191. ஆ 192. ஆ 193. ஈ 194. ஆ 195. இ 196. இ 197. ஈ 198. இ 199. ஆ 200. ஆ

201. ஆஜ்மீரை தலைநகராகக் கொண்டு ஆண்ட மரபினர்

அ. பாலர்கள்
ஆ. சௌகான்கள்
இ. சந்தேளர்கள்
ஈ. எவருமில்லை

202. வங்காளத்தை ஆண்ட பாலர் மரபின் முதல் அரசன்

அ. தர்மபாலன்
ஆ. கோபாலன்
இ. மகிபாலன்
ஈ. உத்திரபாலன்

203. இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்

அ. பாபர்
ஆ. கஜினி முகமது
இ. முகமது கோரி
ஈ. முகமது பின் காசிம்

204. கீழ்க்கண்ட எது முகமது கோரி இந்தியாவில் படையெடுத்தபோது அவர் கைப்பற்றாத இடம்

அ. மீரத்
ஆ. ஆஜ்மீர்
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

205. கீழ்க்கண்ட யார் சையத் மரபை சார்ந்த சுல்தானிய மன்னர்

அ. முகமது ஷா
ஆ. ஆலம் ஷா
இ. முபாரக் ஷா
ஈ. அனைவரும்

206. தாம் வெளியிட்ட நாணயங்களில் தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பதிவித்தவர்

அ. அலாவுதீன் கில்ஜி
ஆ. கியாசுதீன் துக்ளக்
இ. ஜலாலுதீன் கில்ஜி
ஈ. முகமது பின் துக்ளக்

207. சௌகான் மரபில் வந்த விசால்தேவர் தோமரர்களிடமிருந்து கைப்பற்றிய பகுதி

அ. கன்னோசி
ஆ. மாளவம்
இ. டெல்லி
ஈ. வங்காளம்

208. ஷா நாமாவை எழுதியவர்

அ. அல்பரூனி
ஆ. இபன்படூடா
இ. பிர்தௌசி
ஈ. பக்தியார்கில்ஜி

209. பொருத்துக

I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
III. தில்வாரா - 3. சமணர் கோயில்
IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்

அ. I-1 II-2 III-4 IV-3
ஆ. I-1 II-2 III-3 IV-4
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3

210. இரண்டாம் தரெயின் போரின் முக்கியத்துவம்
அ. முகமது கோரி தோற்கடிக்கப்பட்டார்
ஆ. பிரதிவிராசன் கொல்லப்பட்டார்
இ. இந்தியாவில் துருக்கியர் ஆட்சி ஏற்பட இது வழிவகுத்தது
ஈ. இந்தியாவில் ஆப்கானியர் ஆட்சி ஏற்பட இப்போர் வழிவகுத்தது

விடை: 201. ஆ 202. ஆ 203. ஈ 204. இ 205. ஈ 206. அ 207. இ 208. இ 209. ஆ 210. இ
கலாச்சாரம் - 1

1. உகாதி பண்டிகை எங்கு கொண்டாடப்படுகிறது?

அ. தமிழகம்
ஆ. ஆந்திரா
இ. கர்நாடகா
ஈ. கேரளா

2. என். ராஜம் எதோடு தொடர்புடையவர்?

அ. நடனம்
ஆ. ஓவியம்
இ. வயலின்
ஈ. கர்னாடக இசை

3. பின் வருவனவற்றில் எது தொன்மையான நடன வடிவம்?

அ. வாங்லா
ஆ. கல்பேலியா
இ. ஒடிசி
ஈ. பண்டவணி

4. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் ஐரோப்பியர் யார்?

அ. சர் அலெக்ஸாண்டர் கன்னிங்காம்
ஆ. வில்லியம் ஜோன்ஸ்
இ. சார்லஸ் வில்கின்ஸ்
ஈ. ஜேம்ஸ் பன்செப்

5. ராஜஸ்தானின் நடனம் எது?

அ. கார்பா
ஆ. குமர்
இ. ஜமர்
ஈ. நௌதங்கி

6. கீத் கோவிந்தம் புத்தகத்தை எழுதியவர் யார்?

அ. ஜெய்தேவர்
ஆ. மீரா
இ. உமபதி தர்
ஈ. தோலி

7. சரங்க் என்பது எந்த நேரத்தில் பாடப்படும் ராகம்?

அ. நள்ளிரவு
ஆ. காலை
இ. மதியம்
ஈ. மாலை

8. இந்தியாவின் முதல் சமஸ்கிருத மொழி திரைப்படம் எது?

அ. மாயா மிருகா
ஆ. ஹரிச்சந்திரா
இ. ஆதி சங்கராச்சாரியா
ஈ. கந்தகார்

9. தங்கமும் செல்வமும் குவிந்திருப்பதாக மேலை நாடுகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட நாட்டின் பெயர் என்ன?

அ. உடோபியா
ஆ. ஒயாசிஸ்
இ. எல்டராடோ
ஈ. இவை அனைத்தும்

10. இறந்தவர்களுக்காக பாடப்படும் ஆங்கில இலக்கிய வடிவம் என்ன?

அ. எலிஜி
ஆ. பாலட்
இ. ஹைபர்போல்
ஈ. ஓட்


விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. ஆ 6. அ 7. ஆ 8. இ 9. இ 10. அ

11. முஸ்லிம்களின் 3வது புனித தலமாக கருதப்படுவது எது?

அ. மெக்கா
ஆ. மெதீனா
இ. ஸ்ரீநகர்
ஈ. அல் அக்ஸா

12. விசுவநாதர் ஆலயம் எந்த புகழ் பெற்ற இந்து புனிதத் தலத்திலுள்ளது?

அ. காசி
ஆ. ராமேஸ்வரம்
இ. மதுரா
ஈ. அயோத்தி

13. பின்வரும் பக்தி மார்க்க துறவிகளில் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்தவர் யார்?

அ. நம்தேவ்
ஆ. சேனா
இ. கபீர்
ஈ. ரவிதாஸ்

14. ஆதி சங்கரரின் தத்துவம் எது?

அ. துவைதம்
ஆ. அத்வைதம்
இ. விசிட்டாத்வைதம்
ஈ. சைவம்

15. இந்துக்களின் உபநிஷத்துக்கள் எதைப் பற்றியவை?

அ. தத்துவம்
ஆ. மதம்
இ. யோகா
ஈ. சட்டம்

16. தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளின் ஆங்கில பிரதி முதன் முதலில் யாருடைய ஆட்சியின் போது தயார் செய்யப்பட்டது?

அ. முதலாம் ஜேம்ஸ்
ஆ. 2ம் ஜேம்ஸ்
இ. எலிசபெத் மகாராணி
ஈ. ஆலிவர் குரோம்வெல்

17. முகமது நபி எப்போது பிறந்தார்?

அ. கி.பி. 573
ஆ. கி.பி. 574
இ. கி.பி. 571
ஈ. கி.பி. 572

18. தனது நம்பிக்கைகளால் முகமது நபி ஜாரத் எனப்படும் யாத்திரையை மெக்காவிலிருந்து மேற்கொண்டு மெதினா சென்றார். இது எப்போது நிகழ்ந்தது?

அ. கி.பி. 621
ஆ. கி.பி. 622
இ. கி.பி. 623
ஈ. கி.பி. 624


விடை: 11. ஈ 12. அ 13. ஈ 14. ஆ 15. அ 16. அ 17. இ 18. ஆ

1. பின்வருவனவற்றில் எது பொதுத் துறை நிறுவனம்?

அ. எச்.எஸ்.பி.சி. பாங்க்
ஆ. எல்.ஐ.சி.
இ. சௌத் இந்தியன் பாங்க்
ஈ. பாங்க் ஆப் பஞ்சாப்

2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?

அ. ஐ.டி.பி.ஐ
ஆ. சிட்பி
இ. ஐ.எப்.சி.ஐ.
ஈ. நபார்டு

3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?

அ. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
ஆ. இயற்கை வாயு
இ. பெட்ரோலியம்
ஈ. இரும்பு தாது

4. அடிப்படை மற்றும் ஆதார தொழில் நிறுவனங்களை வளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட 5 ஆண்டு திட்டம் எது?

அ. முதல்
ஆ. இரண்டாவது
இ. மூன்றாவது
ஈ. நான்காவது

5. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?

அ. பிரான்ஸ்
ஆ. இத்தாலி
இ. ஜெர்மனி
ஈ. இங்கிலாந்து

6. தொழிற்புரட்சியோடு தொடர்புடையது எது?

அ. ஹர்கிரீவ்ஸ்
ஆ. ஆர்க்வ்ரைட்
இ. கிராம்ப்டன்
ஈ. இவை அனைத்துமே

7. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?

அ. ஜெர்மனி
ஆ. பிரான்ஸ்
இ. இத்தாலி
ஈ. ரஷ்யா

8. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?

அ. சீனா
ஆ. ஜப்பான்
இ. கொரியா
ஈ. சிங்கப்பூர்

9. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?

அ. டிஸ்ரேலி
ஆ. சர்ச்சில்
இ. அட்லி
ஈ. லாயிட் ஜார்ஜ்

10. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

அ. 1801
ஆ. 1802
இ. 1803
ஈ. 1804


விடை: 1. ஆ 2. ஆ 3. ஆ 4. ஆ 5. ஈ 6. ஈ 7. ஈ 8. ஆ 9. அ 10. ஆ

11. தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?

அ. கார்ல் மார்க்ஸ்
ஆ. பிரடக் எங்கெல்ஸ்
இ. செயிண்ட் சைமன்
ஈ. ராபர்ட் ஓவன்

12. பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?

அ. பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற தேனீர் விருந்து
ஆ. தேயிலை மீதான வரி
இ. பாஸ்டன் நகர சீரமைப்பு
ஈ. பாஸ்டன் நகர மேயரின் இல்லப் பெயர்

13. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அ. கார்ல் மார்க்ஸ்
ஆ. ஆல்பிரட் மார்ஷல்
இ. கார்டோ
ஈ. ஆடம் ஸ்மித்

14. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?

அ. மிக அதிக முதலீடு உருவாகுதல்
ஆ. மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பது
இ. உயர்ந்த தனி நபர் வருமானம்
ஈ. வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது

15. வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?

அ. ஜே.எம். கெய்ன்ஸ்
ஆ. கால்பிரைத்
இ. நர்க்ஸ்
ஈ. ராஸ்டோவ்

16. நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்

அ. ஜூட் மற்றும் பருத்தி
ஆ. சர்க்கரை மற்றும் ரப்பர்
இ. பேப்பர் மற்றும் இரும்பு
ஈ. இன்ஜினியரிங் மற்றும் சிமென்ட்

17. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?

அ. ம.பி.
ஆ. உ.பி.
இ. பீகார்
ஈ. ராஜஸ்தான்

18. இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?

அ. பிரதமர்
ஆ. ஜனாதிபதி
இ. ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர்
ஈ. ஏதாவது ஒரு மத்திய அமைச்சர்


விடை: 11. அ 12. ஆ 13. ஈ 14. ஈ 15. ஈ 16. அ 17. ஆ 18. அ

1. ஒரு குதிரைத்திறன் என்பது

அ. 946 வாட்
ஆ. 846 வாட்
இ. 746 வாட்
ஈ. 646 வாட்

2. வௌவால் ஏற்படுத்துவது

அ. குற்றொலி
ஆ. மீயொலி
இ. செவி உணர் ஒலி
ஈ. அனைத்தும் தவறு

3. மனிதன் மற்றும் சில விலங்குகளின் ஒலி உணரும் திறனை (ஹெர்ட்ஸ்) பொருத்துக:

I. மனிதன் - 1. 1000 - 1,00,000
II. யானை - 2. 100 - 32,000
III. பூனை - 3. 20 - 20,000
IV. கொறி விலங்குகள் - 4. 16 - 12,000

அ. I-3 II-1 III-2 IV-4
ஆ. I-3 II-4 III-1 IV-2
இ. I-3 II-2 III-1 IV-4
ஈ. I-3 II-4 III-2 IV-1

4. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும்

அ. மாயபிம்பம்
ஆ. மெய்பிம்பம்
இ. பொய்பிம்பம்
ஈ. மாய மற்றும் மெய்பிம்பங்கள்

5. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம்

அ. பரப்பு இழுவிசை
ஆ. ஈர்ப்பு விசை
இ. மைய நோக்கு விசை
ஈ. மைய விலக்கு விசை

6. முதன்மை நிறங்கள்

அ. சிவப்பு, பச்சை, நீலம்
ஆ. பச்சை, சிவப்பு, கருப்பு
இ. சிவப்பு, பச்சை, வெள்ளை
ஈ. கருப்பு, மஞ்சள், நீலம்

7. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம்

அ. காற்று
ஆ. ஆக்சிசன்
இ. நீர்
ஈ. சூரியன்

8. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை

அ. 9.9 N
ஆ. 9.10 N
இ. 9.8 N
ஈ. 9.11 N

9. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும்

அ. சமமாக இருக்கும்
ஆ. தண்ணீரின் அளவை பொறுத்து மாறுபடும்
இ. பாத்திரத்தின் அளவை சார்ந்து வேறுபடும்
ஈ. மேற்கூறிய எதுவும் சரியில்லை

10. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம்

அ. 20 கி.மீ.
ஆ. 18 கி.மீ.
இ. 25 கி.மீ.
ஈ. 30 கி.மீ.


விடை: 1. இ 2. ஆ 3. ஈ 4. அ 5. அ 6. அ 7. ஈ 8. இ 9. அ 10. ஆ

11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது

அ. கேபிள்
ஆ. ரேடியோ அலைகள்
இ. மைக்ரோ அலைகள்
ஈ. ஆப்டிகல் பைபர்

12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்?

அ. ஸ்டீபன்ஸன்
ஆ. ஜேம்ஸ்வாட்
இ. மெக்ஆடம்
ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ்

13. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம்

அ. பெட்ரோலியம்
ஆ. நிலக்கரி
இ. இயற்கை வாயு
ஈ. சூரியன்

14. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்

அ. சுழற்சி இயக்கம்
ஆ. வேக இயக்கம்
இ. நேர்கோட்டு இயக்கம்
ஈ. அலை இயக்கம்

15. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்

அ. எடை அதிகமான பொருள் முதலில் விழும்
ஆ. அவை ஒரே நேரத்தில் விழும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு

16. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர்

அ. மார்ஷல் டாப்ளர்
ஆ. ஸ்டீபன் டாப்ளர்
இ. ஐசக் டாப்ளர்
ஈ. கிறிஸ்டியன் டாப்ளர்

17. ஒலிப்பதிவு செய்யும் ஒலி நாடாவில் உள்ளது
அ. இரும்பு ஆக்ஸைடு
ஆ. குரோமியம் டை ஆக்ஸைடு
இ. இரண்டும் இருக்கும்
ஈ. மேற்சொன்ன இரண்டில் ஒன்று

18. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய

அ. 150 கி.மீ
ஆ. 200 கி.மீ
இ. 250 கி.மீ
ஈ. 300 கி.மீ

19. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்

அ. காலங்களின் விதி
ஆ. பரப்புகளின் விதி
இ. சுற்றுப்பாதைகளின் விதி
ஈ. தொலைவுகளின் விதி

20. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும்

அ. உட்கவரும்
ஆ. எதிரொளிக்கும்
இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு


விடை: 11. ஈ 12. ஆ 13. ஈ 14. இ 15. ஆ 16. ஈ 17. ஈ 18. ஆ 19. இ 20. அ

21. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை

அ. 100o C
ஆ. 110o C
இ. 120o C
ஈ. 130o C

22. ஒரு மின் விளக்கின் ஆயுள்

அ. 1,000 மணிகள்
ஆ. 1,500 மணிகள்
இ. 2,000 மணிகள்
ஈ. 2,500 மணிகள்

23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்

அ. வலக்கை பெருவிரல் விதி
ஆ. மின்காந்த தூண்டல்
இ. காந்த தூண்டல்
ஈ. இடக்கை விதி

24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு
அ. ஆவியாதல்
ஆ. உருகுதல்
இ. உறைதல்
ஈ. பதங்கமாதல்

25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்
அ. திரவத்தின் நடுப்பகுதியில்
ஆ. திரவத்தின் அடிப்பகுதியில்
இ. திரவத்தின் மேற்பரப்பில்
ஈ. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்

26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி
அ. வேகமாக பரவும்
ஆ. மெதுவாக பரவும்
இ. மாற்றம் இல்லை
ஈ. அனைத்தும் தவறு


விடை: 21. இ 22. அ 23. ஆ 24. ஈ 25. இ 26. அ

1. பூக்கும் தாவரத்தின் பெயர்

அ. கிரிப்டோ கேம்கள்
ஆ. பெனரோ கேம்கள்
இ. தலோஃபைட்டா
ஈ. பிரையோஃபைட்டா

2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்

அ. புல்
ஆ. கீழாநெல்லி
இ. அவரை
ஈ. செம்பருத்தி

3. தாவர வைரஸ்களில் காணப்படுவது

அ. ஆர்.என்.ஏ.
ஆ. டி.என்.ஏ.
இ. ஆர்.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ
ஈ. இவற்றில் எதுவுமில்லை

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்

அ. வைரஸ்கள் நேனோமீட்டர் அல்லது மில்லிமீட்டர் என்ற அலகில் அளக்கப்படுகிறது
ஆ. தாவர வைரஸ்களில் மிகச்சிறியது சாட்டிலைட் வைரஸ்
இ. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் பாக்டீரியோ பேஜ்
ஈ. அனைத்தும் சரி

5. சரியான கூற்றை தேர்ந்தெடு:

அ. தாவரங்களில் உணவை கடத்தும் திசுக்கள் - புளோயம்
ஆ. தாவரங்களில் நீரை கடத்தும் திசுக்கள் - சைலம்
இ. செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்டீரியா
ஈ. அனைத்தும் சரி

6. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

அ. லெம்னா
ஆ. உல்ஃபியா
இ. அல்லி
ஈ. சால்வீனியா

7. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு

அ. தாலஸ்
ஆ. ஹைப்பா
இ. குறு இழை
ஈ. மைஸீரியம்

8. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு

அ. அனாடமி
ஆ. எம்பிரியாலஜி
இ. மைக்காலஜி
ஈ. சைட்டாலஜி

9. தாவரத்தின் ஆண்பாகம் என்பது

அ. புல்லி
ஆ. சூலகம்
இ. அல்லி
ஈ. மகரந்த தாள் வட்டம்

10. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை

அ. ரைசோபஸ்
ஆ. லைக்கன்கள்
இ. செர்க்கோஸ்போரா
ஈ. அகாரிகஸ்


விடை: 1. ஆ 2. ஆ 3. அ 4. ஈ 5. ஈ 6. இ 7. அ 8. இ 9. ஈ 10. ஆ

11. சிறுகுடலின் நடுப்பகுதி

அ. ஜெஜீனம்
ஆ. இலியம்
இ. முகுளம்
ஈ. எபிதீலியம்

12. உமிழ்நீரில் காணப்படும் நொதி

அ. டயஸ்டேஸ்
ஆ. சைமேஸ்
இ. டயலின்
ஈ. கிளிசைன்

13. பொருத்துக:

I. லியூக்கோ சைட் - 1. இரத்தம் உறைதல்
II. திராம்போசைட் - 2. பாப்பில்லரி தசைகள்
III. வெண்ட்ரிக்கிள் - 3. நண்டு
IV. புறச்சட்டகம் - 4. கிராணுலோசைட்

அ. I-2 II-3 III-1 IV-4
ஆ. I-4 II-1 III-2 IV-3
இ. I-3 II-2 III-4 IV-1
ஈ. I-1 II-3 III-4 IV-2

14. கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை

அ. 8
ஆ. 7
இ. 4
ஈ. 6

15. பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய்

அ. பிலாஸ்செரி
ஆ. கிராஸ்பெரி
இ. பெப்ரைன்
ஈ. மஸ்கார்டைன்

16. ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள்

அ. கார்பன் - டை - ஆக்சைடு
ஆ. குளோரோ புளூரோ கார்பன்
இ. நைட்ரஜன் - டை - ஆக்சைடு
ஈ. ஹைட்ரஜன் சல்பைடு

17. யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு

அ. கண்புள்ளி
ஆ. உட்கரு
இ. கசையிழை
ஈ. நுண்குமிழி

18. மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள்

அ. 206
ஆ. 210
இ. 208
ஈ. 216

19. இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம்

அ. டியோடினம்
ஆ. பைலோரஸ்
இ. கணையம்
ஈ. பித்தபை

20. மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து

அ. கார்போ ஹைட்ரேட்
ஆ. புரதம்
இ. கொழுப்பு
ஈ. வைட்டமின்


விடை: 11. அ 12. இ 13. ஆ 14. ஆ 15. இ 16. ஆ 17. இ 18. அ 19. ஆ 20. ஆ

21. பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் எதில் உள்ளன?

அ. டி.ஏ.பி.
ஆ. யூரியா
இ. சூப்பர் பாஸ்பேட்
ஈ. காம்போஸ்ட்

22. பின் வருவனவற்றில் எதை தடுப்பூசியால் தடுக்க முடியாது?

அ. பெரிய அம்மை
ஆ. சர்க்கரை வியாதி
இ. போலியோ
ஈ. கக்குவான் இருமல்

23. பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பது யாருடைய குரோமோசோம்களால் தீர்மானிக்கப்படுகிறது?

அ. தந்தை
ஆ. தாய்
இ. தந்தை மற்றும் தாய்
ஈ. தாத்தா

24. ஆயுர்வேதம் என்பது

அ. உடல் நலம் பற்றிய தீர்மானம்
ஆ. நோய் தீர்க்கும் புத்தகம்
இ. குணமாக்கும் அறிவியல்
ஈ. வாழ்வு பற்றிய அறிவியல்

25. வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர்

அ. கெரல் வினெயெஸ்
ஆ. டேக்ஸனர்
இ. லியுவென்ஹாக்
ஈ. பெர்லினர்

26. ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்

அ. விட்டாகர்
ஆ. ஸ்டேன்லி
இ. வில்லியம் ஹார்வி
ஈ. ஜேம்ஸ்வாட்

27. உடல் உஷ்ண நிலையை சீராக்குவது

அ. தோல்
ஆ. தண்ணீர்
இ. நுரையீரல்
ஈ. கேசம்


விடை: 21. ஈ 22. ஆ 23. அ 24. ஈ 25. அ 26. இ 27. அ

1. சிவாலிக் தொடரில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா நகர்

அ. டேராடூன்
ஆ. நைனிடால்
இ. முசௌரி
ஈ. சிம்லா

2. உலகின் மிகப்பெரிய டெல்டாப் பகுதி

அ. சிந்து சமவெளி
ஆ. கங்கை சமவெளி
இ. கங்கை-பிரம்மபுத்ரா சமவெளி
ஈ. பிரம்மபுத்ரா சமவெளி

3. சுப்ரீயர் ஏரி அமைந்துள்ள நாடு

அ. ரஷ்யா
ஆ. அஸர்பெய்ஜான்
இ. கனடா
ஈ. ஸாம்பியா

4. பொருத்துக:

I. வட அட்லாண்டிக் - 1. கானரி
II. தென் அட்லாண்டிக் - 2. பெங்குலா
III. தென் பசிபிக் - 3. பெரு
IV. வட பசிபிக் - 4. க்யூரோஷியா

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3

5. சகாரா பாலைவனத்திலிருந்து வட திசையில் இத்தாலியை நோக்கி வீசும் காற்று

அ. போன்
ஆ. சினூக்
இ. சிராக்கோ
ஈ. லூ

6. இந்தியாவில் எங்கு பழம்பாறைகள் காணப்படுகின்றன

அ. தக்காண பீடபூமி
ஆ. இமாச்சலப்பகுதி
இ. பள்ளத்தாக்குகள்
ஈ. இந்தியாவெங்கும்

7. ஆர்டிக் பெருங்கடல் எங்கு அமைந்துள்ளது

அ. வட அரைகோளம்
ஆ. தென் அரைகோளம்
இ. நிலநடுக்கோட்டுப் பகுதி
ஈ. ஆஸ்திரேலியா அருகில்

8. நாராயணி என்று அழைக்கப்படும் நதி

அ. கங்கை
ஆ. காக்ரா
இ. கண்டகி
ஈ. தாமோதர்

9. தாமோதர் நதி இறுதியில் கலக்குமிடம்

அ. கங்கை ஆறு
ஆ. உப்பு ஏரி
இ. வங்காள விரிகுடா
ஈ. ஹூக்ளி

10. பெரிய அரண் பவழத் தொடர் எங்குள்ளது

அ. பசிபிக் பெருங்கடல்
ஆ. இந்தியப் பெருங்கடல்
இ. அட்லாண்டிக் பெருங்கடல்
ஈ. ஆர்டிக் பெருங்கடல்


விடை: 1. அ 2. இ 3. இ 4. இ 5. இ 6. அ 7. அ 8. இ 9. ஈ 10. அ

11. தென்மேற்கு பருவக்காற்று எந்த மாதம் துவங்கும்

அ. ஏப்ரல்
ஆ. மே
இ. ஜுன்
ஈ. ஜுலை

12. கீழ்க்கண்டவற்றுள் இமயமலையின் குறுக்கே செல்லும் ஆறு?

அ. கங்கை
ஆ. யமுனை
இ. சட்லெஜ்
ஈ. ராவி

13. விந்திய, சாத்பூரா மலைகளுக்கு இடையே அமைந்துள்ள நதி

அ. தபதி
ஆ. நர்மதை
இ. கோசி
ஈ. கோதாவரி

14. பொருத்துக:

I. ஆசியா - 1. சாக்கடல்
II. ஆப்ரிக்கா - 2. அஸ்ஸாய் ஏரி
III. வட அமெரிக்கா - 3. வால்டேஸ்
IV. தென் அமெரிக்கா - 4. மரணப் பள்ளத்தாக்கு

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3

15. 'கோண்டுவானா' என்பது

அ. நிலப்பகுதி
ஆ. நீர்பரப்பு
இ. பேஞ்சியாவை பிரித்த கடல் பகுதி
ஈ. இவற்றில் எதுவுமில்லை

16. இந்தியா இலங்கை நடுவில் அமைந்துள்ள தீவு

அ. ராமேஸ்வரம்
ஆ. பாம்பன் தீவுகள்
இ. தலை மன்னார்
ஈ. எதுவுமில்லை

17. இந்தியாவின் தென்கோடி முனை அமைந்துள்ள பகுதி?

அ. தமிழ்நாடு
ஆ. லட்சத்தீவுகள்
இ. திருவனந்தபுரம்
ஈ. அந்தமான் நிக்கோபர் தீவுகள்

18. அதிகமான சாலைகளைக் கொண்ட மாநிலம்

அ. மகாராஷ்டிரா
ஆ. பீகார்
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. உத்தரப் பிரதேசம்

19. மிகுதியாக பாக்ஸைட் தயாரிக்கும் மாநிலம்

அ. ஆந்திரப் பிரதேசம்
ஆ. தமிழ்நாடு
இ. பீகார்
ஈ. பஞ்சாப்

20. துருக்கல் மண்ணுடன் தொடர்புடையது

அ. வண்டல் மண்
ஆ. கரிசல் மண்
இ. செம்மண்
ஈ. மலை மண்


விடை: 11. இ 12. இ 13. ஆ 14. ஆ 15. அ 16. ஆ 17. ஈ 18. ஆ 19. இ 20. ஈ
புவியியல் - 3

21. நைல் நதி கலக்கும் கடல்

அ. செங்கடல்
ஆ. கருங்கடல்
இ. மத்திய தரைக்கடல்
ஈ. பிரிட்டன்

22. 'பேந்தலாசா' என்பது

அ. ஒரு மலை
ஆ. நிலப்பரப்பு
இ. ஒரு கண்டம்
ஈ. நீர்ப்பரப்பு

23. 'டால்' ஏரியின் அமைவிடம்

அ. காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஆ. கங்கை வடிநிலப்பகுதி
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. ராஜஸ்தான்

24. 'வேரவால்' துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்

அ. குஜராத்
ஆ. கர்நாடகா
இ. ஒரிசா
ஈ. கேரளா

25. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறு எது?

அ. தபதி
ஆ. நர்மதை
இ. மகாநதி
ஈ. எதுவுமில்லை

26. ரூர்கேலா இரும்பு எக்கு ஆலைக்கு அருகிலுள்ள துறைமுகம் எது?

அ. ஹால்தியா
ஆ. காண்ட்லா
இ. பாரதீப்
ஈ. விசாகப்பட்டினம்

27. அரபிக் கடல் பின்வரும் நாடுகளில் எதன் கரையை தொடுகிறது?

அ. சவுதி அரேபியா
ஆ. ஓமன்
இ. கென்யா
ஈ. ஈராக்

28. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் பகுதிகளைக் கொண்டிருப்பது எது?

அ. புதுச்சேரி
ஆ. கேரளா
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. மகாராஷ்டிரா

29. குக்டி வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?

அ. மகாராஷ்டிரா
ஆ. ஜம்முகாஷ்மீர்
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. உத்தராஞ்சல்

30. 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்ட டெஹ்ரி நகரத்தில் ஓடும் ஆறு எது?

அ. நர்மதா
ஆ. அலக்நந்தா
இ. பாகீரதி
ஈ. கோசி


விடை: 21. இ 22. ஈ 23. அ 24. அ 25. இ 26. இ 27. ஆ 28. அ 29. இ 30. இ

31. ஐராவதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் எது?

அ. பாங்காக்
ஆ. ஹனோய்
இ. மணிலா
ஈ. மாண்ட்லே

32. சபர்மதி ஆறு எங்கு ஓடுகிறது?

அ. கேப்டவுண்
ஆ. இஸ்லாமாபாத்
இ. ஆமதாபாத்
ஈ. தில்லி

33. பின்வரும் வாயுக்களில் எது வளி மண்டலத்தில் இல்லை?

அ. ஆர்கான்
ஆ. கிரிப்டான்
இ. ரேடான்
ஈ. செனான்

34. டிகோ கார்சியா தீவுகள் எங்குள்ளன?

அ. அரபிக் கடல்
ஆ. பசிபிக் கடல்
இ. இந்தியப் பெருங்கடல்
ஈ. அட்லாண்டிக் கடல்

35. அட்லாண்டிக் பெருங்கடல் எவற்றைக் கொண்டுள்ளது?

அ. பால்டிக் கடல்
ஆ. கரீபியன் கடல்
இ. கருங்கடல்
ஈ. இவை அனைத்தையுமே

36. வளிமண்டல அடுக்குகளில் எது நமக்கு அண்மையில் உள்ளது?

அ. டிரபோஸ்பியர்
ஆ. ஸ்ட்ராடோஸ்பியர்
இ. மெஸோஸ்பியர்
ஈ. அயனோஸ்பியர்

37. உலகில் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ. சீனா
ஆ. இந்தியா
இ. தாய்லாந்து
ஈ. அமெரிக்கா

38. உலகில் அரிசி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ. சீனா
ஆ. இந்தியா
இ. தாய்லாந்து
ஈ. இலங்கை

39. ஜூட், காபி, கரும்பு, வாழைப்பழம், ஆரஞ்சு, பஞ்சு ஆகியவற்றை பணப் பயிர்கள் என கூறுவது எதனால்?

அ. இவற்றை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதால்
ஆ. குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் தருவன என்பதால்
இ. விற்பனைக்காக வளர்க்கப்படுவதால்
ஈ. உற்பத்தியாளர்களின் சொந்த உபயோகத்திற்காக இவை வளர்க்கப்படுவதால்

40. ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், சிவசமுத்திரம் ஆகியவை எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

அ. கிருஷ்ணா
ஆ. காவேரி
இ. வைகை
ஈ. கங்கை


விடை: 31. ஈ 32. இ 33. இ 34. இ 35. ஈ 36. அ 37. அ 38. ஆ 39. இ 40. ஆ

41. பீட், பிட்டுமோனஸ், ஆந்திரசைட் மற்றும் லிக்னைட் ஆகியவை எதோடு தொடர்புடையவை?

அ. இரும்பு
ஆ. மாங்கனீஸ்
இ. நிலக்கரி
ஈ. அலுமினியம்

42. கொடோபாக்சி எரிமலை எந்த நாட்டில் உள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. ஈகுவேடார்
இ. எகிப்து
ஈ. நியூசிலாந்து

43. ஜிப்ரால்டர் வளைகுடா அட்லாண்டிக் பெருங்கடலை எதோடு இணைக்கிறது?

அ. பசிபிக் பெருங்கடல்
ஆ. மத்திய தரைக்கடல்
இ. ஸ்பெயின்
ஈ. இவை எதுவுமல்ல

44. டைனோசர் முட்டைகள் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கோபி பாலைவனம் எங்குள்ளது?

அ. ராஜஸ்தான்
ஆ. ஆப்கானிஸ்தான்
இ. பாகிஸ்தான்
ஈ. மங்கோலியா

45. ஷாராவதி நதிக்கரையில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி தான் இந்தியாவிலேயே மிக உயரத்திலுள்ள நீர்வீழ்ச்சி. இது எந்த மாநிலத்திலுள்ளது?

அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. ராஜஸ்தான்
ஈ. ஆந்திரபிரதேசம்

46. சந்திரன் பூமியைச் சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும்?

அ. 30
ஆ. 29
இ. 27
ஈ. 25

47. கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவில் எங்கு சந்திக்கின்றன?

அ. இமயமலை
ஆ. திரிபுரா
இ. நீலகிரி
ஈ. ஆனைமலை

48. உள்நாட்டு மொழிகள் என இந்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது ஆகியவற்றை அங்கீகரித்துள்ள நாடு எது?

அ. கென்யா
ஆ. தென் ஆப்பிரிக்கா
இ. உகாண்டா
ஈ. பிஜி

49. மெசபடோமியா என்பது எதன் பழைய பெயர்?

அ. ஈரான்
ஆ. ஈராக்
இ. ஓமன்
ஈ. சிரியா

50. பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுடன் இணைப்பது எது?
அ. லே கணவாய்
ஆ. கைபர் போலன் கணவாய்
இ. கோயத் கணவாய்
ஈ. ஹயல் கணவாய்


விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. ஈ 45. ஆ 46. இ 47. இ 48. ஆ 49. ஆ 50. ஆ
புவியியல் - 6

51. திண்மையான பாறைகளை ஊடுருவி ஆற்றினால் உருவாக்கப்படும் ஆழமான செங்குத்து சரிவுடைய 'V' வடிவ பள்ளத்தாக்கு
அ. கென்யான்கள்
ஆ. வளைநெளிவுகள்
இ. பானைத்துளை
ஈ. சிதைந்த துமைகள்

52. ஏஞ்சல் நீர் வீழ்ச்சி உள்ள நாடு

அ. வெனிசுலா
ஆ. தென் ஆப்பிரிக்கா
இ. நியூசிலாந்து
ஈ. பிரிட்டன்

53. கடல் நீரின் நகர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. அலை
ஆ. நீரோட்டம்
இ. பேரலை
ஈ. ஆழியலை மோதல்

54. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. ஸோஜிவா - காஷ்மீர்
ஆ. ஷிப்கில்லா - இமாச்சல பிரதேசம்
இ. நாதுல்லா - சிக்கிம்
ஈ. ஜெலிப்லா - ஜார்கண்ட்

55. வரலாற்று காலத்தில் உருவான மடிப்பு மலைகள்

அ. ஆரவல்லி
ஆ. சாத்பூரா
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

56. 'சகாயத்ரி' என்று குறிப்பிடப்படுவது

அ. மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி
இ. விந்திய மலை
ஈ. கிழக்கு தொடர்ச்சி மலை

57. காதர் மற்றும் பாங்கர் என்பவை எதனோடு தொடர்புடையது?

அ. மணல்
ஆ. கரிசல் மண்
இ. வண்டல் மண்
ஈ. செம்மண்

58. காட்டிலாக்கா நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் ஏழை விவசாயிகள்

அ. பழங்குடியினர்
ஆ. குமரிதாரர்கள்
இ. ஒப்பந்ததாரர்கள்
ஈ. குறுநில விவசாயிகள்

59. கடக ரேகையால் பிரிக்கப்படாத மாநிலம்

அ. குஜராத்
ஆ. ராஜஸ்தான்
இ. பீகார்
ஈ. மேகாலயா

60. கீழ்க்கண்டவற்றுள் எவை ஏறக்குறைய ஒரே இடத்திலிருந்து தோன்றுபவை?

அ. கங்கை, சிந்து
ஆ. பியாஸ், தபதி
இ. கங்கை, பிரம்மபுத்ரா
ஈ. சிந்து, பிரம்மபுத்ரா


விடை: 51. அ 52. அ 53. ஆ 54. ஈ 55. ஆ 56. அ 57. இ 58. ஆ 59. இ 60. ஈ

61. டாலமைட் தாது அதிகம் கிடைக்கும் மாநிலம்

அ. ஒரிசா
ஆ. பீகார்
இ. சட்டீஸ்கர்
ஈ. ஜார்கண்ட்

62. வறட்சியான வேளாண்மை செய்யப்படும் பகுதி

அ. கங்கைச் சமவெளி
ஆ. தார்பாலைவனம்
இ. சோழ மண்டல சமவெளி
ஈ. தக்காண பீடபூமி

63. தவறான இணையை தேர்ந்தெடுக்க

அ. ஜப்பான் - டையூன்
ஆ. அரேபியா - சமுனஸ்
இ. வட அமெரிக்கா - ஹரிக்கேன்ஸ்
ஈ. சீனா - வில்லி வில்லி

64. சைப்ரஸ் இணைப்போடு தொடர்புடைய நாடுகள் எவை?

அ. கிரீஸ் - இத்தாலி
ஆ. துருக்கி - கிரீஸ்
இ. துருக்கி - போர்ச்சுக்கல்
ஈ. ஸ்பெயின் - ஜியார்ஜியா

65. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. காஸாகும் பாலைவனம் - மெக்ஸிகோ
ஆ. கோபி பாலைவனம் - மங்கோலியா
இ. கலஹாரி பாலைவனம் - பாகிஸ்தான்
ஈ. தக்லா பாலைவனம் - சவுதி அரேபியா

66. நியூசிலாந்து இந்த பெருங்கடலில் அமைந்துள்ளது

அ. அட்லாண்டிக் பெருங்கடல்
ஆ. அண்டார்டிக் பெருங்கடல்
இ. ஆர்டிக் பெருங்கடல்
ஈ. பசிபிக் பெருங்கடல்

67. கீழ்க்கண்டவற்றில் எது அட்லாண்டிக் கடற்பரப்பில் உள்ளது

அ. பால்டிக்
ஆ. மெக்ஸிகோ வளைகுடா
இ. கரீபியன்
ஈ. இவை அனைத்தும்

68. ஐந்து கேடய எரிமலைகள் எரிந்து உருவான தீவு

அ. பாரன் தீவு
ஆ. ஹவாய் தீவு
இ. அலாஸ்கா
ஈ. ஜப்பான்

69. கீழ்க்கண்டவற்றில் கண்ட பனியாறுகள் எவை

அ. கிரீண்லாந்து
ஆ. அண்டார்டிகா
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

70. கீழ்க்கண்டவற்றில் உலோக கனிமம்

அ. மைக்கா
ஆ. சுண்ணாம்புக்கல்
இ. ஜிப்சம்
ஈ. எதுவுமில்லை


விடை: 61. அ 62. ஈ 63. ஈ 64. ஆ 65. ஆ 66. ஈ 67. ஈ 68. ஆ 69. இ 70. ஈ

71. ஏலகிரி மலை கீழ்க்கண்ட எந்தத் தொடரில் அமைந்துள்ளது?

அ. மேற்கு தொடர்ச்சி மலை
ஆ. கிழக்கு குன்றுகள்
இ. இரண்டும் இணையும் இடத்தில்
ஈ. எதுவுமில்லை

72. கோடைக்காலத்தில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வீசும் தவக்காற்று

அ. லூ
ஆ. நார்வெஸ்டார்
இ. மாங்கோ ஷோவர்
ஈ. சுவாத்ரின்

73. இந்தியாவில் அதிகம் பழங்குடி மக்கள் வாழும் பகுதி

அ. இமயமலையின் வடகிழக்குப் பகுதி
ஆ. கங்கைச் சமவெளி
இ. சிந்து வடிநிலப்பகுதிகள்
ஈ. சம்பல் பள்ளத்தாக்கு

74. பாகிஸ்தானுடன் பொது எல்லை கோடுகள் கொண்ட மாநிலங்கள்

அ. குஜராத், அருணாச்சல பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர்
ஆ. குஜராத், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான்
இ. ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப்
ஈ. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்

75. கீழ்க்கண்ட மலைகளில் எது புவியியல் வரலாற்றின்படி மிகவும் பழமையானது

அ. நீலகிரி
ஆ. சாத்புரா மலைத்தொடர்
இ. விந்தியமலை
ஈ. ஆரவல்லி

76. பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் இடம்

அ. பிண்டாரி பனியாறு
ஆ. மானசரோவர் ஏரிக்கருகில் உள்ள பனியாறு
இ. திபெத்துக்கு அருகே
ஈ. நர்மதா

77. கங்கை சிந்து சமவெளியில் அகன்று இருப்பது

அ. கிழக்கில் இருந்து மேற்கே
ஆ. மேற்கில் இருந்து கிழக்கே
இ. இடையில்
ஈ. எங்குமில்லை

78. பிளவு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நதியின் பெயர்?

அ. லூனி
ஆ. சாம்பல்
இ. சன்
ஈ. தபதி

79. வங்காள தேசத்தில் கங்கை நதி புகும்போது துவராகாவிற்கு அப்பால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. பத்மா
ஆ. மேக்னா
இ. ஹூக்ளி
ஈ. சுவரன் கங்கை

80. தீபகற்ப இந்தியாவின் வடமேற்கு பகுதி

அ. தக்காண பீடபூமி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலை
இ. மாளவ பீடபூமி
ஈ. சோட்டா நாக்பூர் பீடபூமி


விடை: 71. ஆ 72. ஆ 73. அ 74. ஆ 75. ஈ 76. ஆ 77. அ 78. ஈ 79. அ 80. இ
புவியியல் - 9

81. நாகார்ஜுன சாகர் திட்டம் தொடர்புடைய நதி

அ. கோதாவரி
ஆ. கிருஷ்ணா
இ. காவிரி
ஈ. மகாநதி

82. இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் தமிழ்நாடு வகிக்குமிடம்

அ. 7
ஆ. 8
இ. 10
ஈ. 11

83. தென்மேற்கு பருவகாற்று காலம் என்பது

அ. அக்டோபர் - டிசம்பர்
ஆ. ஜூன் - செப்டம்பர்
இ. ஜனவரி - மார்ச்
ஈ. ஏப்ரல் - ஜூன்

84. மாவட்ட நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது

அ. மாவட்ட வருவாய் துறை
ஆ. மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலகம்
இ. மாநில அரசு
ஈ. மத்திய அரசு

85. அடிப்படை மருத்துவ மையம் என்பது அமைக்கப்படுவது

அ. பரப்பளவு அடிப்படையில்
ஆ. மக்கள் தொகை அடிப்படையில்
இ. தொழில் வளர்ச்சி அடிப்படையில்
ஈ. கல்விக் கூடங்களின் எண்ணிக்கை அடிப்படையில்

86. இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் பள்ளத்தாக்கு

அ. பெரியார்
ஆ. ஹூக்ளி
இ. தாமோதர்
ஈ. மகாநதி

87. பின்வரும் நாடுகளில் எங்கு யுரேனிய தாது அதிகம் காணப்படுகிறது?

அ. இந்தோனேசியா
ஆ. தென்கொரியா
இ. ஜையர்
ஈ. அர்ஜென்டினா

88. தொழிற்புரட்சிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது எது?

அ. அலுமினியம்
ஆ. யுரேனியம்
இ. மைகா
ஈ. நிலக்கரி

89. ஹிப்பிங் என்னும் மிகப் பெரிய இரும்புத் தாது சுரங்கம் எங்குள்ளது?

அ. கனடா
ஆ. சீனா
இ. அமெரிக்கா
ஈ. பிரிட்டன்

90. தேசிய நீர்வழி என அறிவிக்கப்படாத ஆறு எது?

அ. பிரம்மபுத்திரா
ஆ. கோதாவரி
இ. சட்லஜ்
ஈ. கிருஷ்ணா


விடை: 81. அ 82. ஈ 83. ஆ 84. இ 85. ஆ 86. இ 87. இ 88. ஈ 89. இ 90. இ

91. வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா ஆறு எப்படி அழைக்கப்படுகிறது?

அ. அஜய்
ஆ. பத்மா
இ. ஜமுனா, மேக்னா
ஈ. பிராமனி

92. பனிக்காலத்தில் பஞ்சாப் எதன் மூலமாக மழையைப் பெறுகிறது?

அ. வட கிழக்கு பருவக்காற்று
ஆ. தென் மேற்கு பருவக்காற்று
இ. மத்திய தரைக் கடல் மற்றும் ஈரான் வளைகுடாவிலிருந்து வரும் புயல்காற்று
ஈ. திரும்ப வரும் பருவக்காற்று

93. தென்னிந்தியாவின் மிக அதிக வெப்பமான மாதம் எது?

அ. மே
ஆ. ஜூன்
இ. ஏப்ரல்
ஈ. ஜூலை

94. ஒட்டு மொத்த இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு என்ன?

அ. 120 செ.மீ.
ஆ. 180 செ.மீ.
இ. 105 செ.மீ.
ஈ. 70 செ.மீ.

95. வட கிழக்கு பருவகாலத்தில் மழை பெறும் பகுதி எது?

அ. அசாம்
ஆ. கேரளா
இ. மே. வங்கம்
ஈ. தமிழகம்

96. தக்காண பீடபூமியில் 2 நதிகளுக்கு இணை கோடாக அமைந்துள்ள மலை எது?

அ. நீலகிரி
ஆ. சாத்புரா
இ. மகாதேவ்
ஈ. விந்தியன்மலை

97. தீபகற்ப இந்தியாவின் உயரமான சிகரம் எது?

அ. நந்தா தேவி
ஆ. எவரெஸ்ட்
இ. ஆனைமுடி
ஈ. தௌலகிரி

98. அமைதி நதியின் பள்ளத்தாக்கு எங்கிருக்கிறது?

அ. பிரேசில்
ஆ. கனடா
இ. அர்ஜெண்டினா
ஈ. மெக்சிகோ

99. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில் அரிசி உற்பத்தி செய்த பகுதி எது?
அ. சீனா
ஆ. இந்தோனேசியா
இ. இந்தியா
ஈ. பிரேசில்

100. கடினமான கோதுமை எது செய்ய உதவுகிறது?

அ. பிரெட்
ஆ. கேக்
இ. பிஸ்கட்
ஈ. பேஸ்ட்


விடை: 91. இ 92. இ 93. அ 94. இ 95. ஈ 96. ஆ 97. இ 98. ஆ 99. அ 100. அ
புவியியல் - 11

101. உலகில் அதிக கோதுமை உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. கனடா
ஆ. அமெரிக்கா
இ. சீனா
ஈ. ஆஸ்திரேலியா

102. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?

அ. இந்தியா
ஆ. சீனா
இ. கியூபா
ஈ. அமெரிக்கா

103. உலகில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. இலங்கை
ஆ. சீனா
இ. இந்தோனேசியா
ஈ. இந்தியா

104. உலகில் காபி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. பிரேசில்
ஆ. கொலம்பியா
இ. கோஸ்டாரிகா
ஈ. மெக்சிகோ

105. வாணிபத்திற்கு பயன்படும் ரப்பர் எதிலிருந்து பெறப்படுகிறது?

அ. ரெசின்
ஆ. கோந்து
இ. லேடக்ஸ்
ஈ. ஸ்டார்ச்

106. மக்காச்சோள உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

அ. கனடா
ஆ. அமெரிக்கா
இ. சீனா
ஈ. ரஷ்யா

107. ஸ்பைஸ் ஐலண்ட் எனப்படும் தீவு எது?

அ. மொலுக்காஸ்
ஆ. சாலமன்
இ. பால்க்லாந்து
ஈ. குவாம்

108. பிரேசிலோடு காபி தொடர்புடையது போல கிராம்பு எதோடு தொடர்புடையது?

அ. சீனா
ஆ. நியூசிலாந்து
இ. சான்ஸிபார்
ஈ. இத்தாலி

109. உலகில் மீன்பிடிப்பு அதிகம் உள்ள பகுதி எது?

அ. வட மேற்கு பசிபிக்
ஆ. வட மேற்கு அட்லாண்டிக்
இ. வட கிழக்கு அட்லாண்டிக்
ஈ. வட மேற்கு இந்திய பெருங்கடல்

110. மீன் வளத்தையே முக்கியமாக நம்பியுள்ள நாடு எது?

அ. நியூசிலாந்து
ஆ. புருனே
இ. ஐஸ்லாந்து
ஈ. பங்களாதேஷ்


விடை: 101. இ 102. இ 103. ஈ 104. அ 105. இ 106. ஆ 107. அ 108. இ 109. அ 110. இ
புவியியல் - 12

111. மெனோ என்பது எதன் உயர் ரக இனம்?

அ. பசு
ஆ. எருமை
இ. வெள்ளாடு
ஈ. செம்மறி ஆடு

112. கூற்று: (A) நீர் பகுதியைக் காட்டிலும் நிலப்பகுதி விரைவில் வெப்பத்தை எடுத்துக் கொள்ளும்.

காரணம்: (R) நீருக்கு நிலத்தைவிட வெப்ப ஏற்புத்திறன் அதிகம்.

அ. கூற்றும் காரணமும் சரியானவை. Aக்கு R சரியான விளக்கமாகும்
ஆ. A மற்றும் R சரியானவை. Aக்கு R சரியான விளக்கமல்ல
இ. A சரி R தவறு
ஈ. A மற்றும் R இரண்டும் தவறானவை

113. உலகின் மிகப்பெரிய பனியாறான மலாஸ்பீனாவின் அமைவிடம்

அ. யாகூட் வளைகுடா (அலாஸ்கா)
ஆ. பவளக்கடல் (ஆஸ்திரேலியா)
இ. மெக்ஸிகோ வளைகுடா
ஈ. தென் சீனக்கடல்

114. கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?

அ. கரக்கோட்டா - ஜாவா
ஆ. செயின்ட் ஹெலன் - வாஷிங்டன்
இ. பிராக்யூடின் - மெக்ஸிகோ
ஈ. மாயான் - ஜப்பான்

115. ஒரு தீவை அதன் முதன்மை நிலத்தோடோ அல்லது வேறு தீவோடோ இணைக்கும் மணல் தொடர்

அ. மணல் திட்டு
ஆ. ஓங்கல்
இ. டெம்போலா
ஈ. அலை அரிமேடை

116. சர்க்குகளில் பனியாறு உருவாவதால் உருவாகும் ஏரி

அ. ஆரெட்டுகள்
ஆ. டார்ன்
இ. பக்க மெரைன்கள்
ஈ. எதுவுமில்லை

117. இதுவரை கண்டறியப்பட்டுள்ள நிலப்பலகைகள்

அ. 6
ஆ. 10
இ. 12
ஈ. 8

118. பியாஸ் நதி எந்த மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது
அ. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்
ஆ. பஞ்சாப், ஹரியானா, ஜம்மு
இ. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம்
ஈ. பஞ்சாப், ஹரியானா

119. சகாயத்ரி என்று குறிப்பிடப்படுவது

அ. மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி
இ. விந்திய மலை
ஈ. கிழக்கு தொடர்ச்சி மலை

120. ஜெயந்தியா, காசி மற்றும் காரோ குன்றுகள் அமைந்துள்ள பகுதி

அ. மேற்கு இமாலயத் தொடர்
ஆ. மத்திய இமாலயத் தொடர்
இ. கிழக்கு இமாலயத் தொடர்
ஈ. சிவாலிக் தொடர்


விடை: 111. ஈ 112. அ 113. அ 114. ஈ 115. இ 116. ஆ 117. இ 118. இ 119. அ 120. இ
புவியியல் - 13

121. எவரெஸ்ட் சிகரத்தின் அமைவிடம்

அ. இமாத்திரி
ஆ. இமாச்சல்
இ. சிவாலிக்
ஈ. எதுவுமில்லை

122. இந்தியாவில் உயரமான பீடபூமி

அ. சோடா நாக்பூர்
ஆ. லடாக்
இ. மாளவபீடபூமி
ஈ. தக்காண பீடபூமி

123. நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர்

அ. இம்பால்
ஆ. ஐஸ்வால்
இ. அகர்தலா
ஈ. கோஹிமா

124. கீழ்க்கண்டவற்றில் நிலத்தால் சூழப்பட்டுள்ள மாநிலம்

அ. குஜராத்
ஆ. ஒரிசா
இ. பீகார்
ஈ. மேற்குவங்கம்

125. எந்த மாநிலத்தில் நர்மதை உற்பத்தியாகிறது

அ. மத்திய பிரதேசம்
ஆ. உத்திர பிரதேசம்
இ. மகாராஷ்டிரம்
ஈ. ஆந்திர பிரதேசம்

126. இந்தியாவில் கனிமவளங்கள் நிறைந்த பகுதி

அ. மாளவ பீடபூமி
ஆ. சோடா நாக்பூர் பீடபூமி
இ. மைக்கால் குன்றுகள்
ஈ. அஜந்தா

127. கீழ்க்கண்டவற்றுள் கங்கையின் துணையாறு அல்லாதது

அ. கோமதி
ஆ. கண்டக்
இ. கோசி
ஈ. காக்ரா

128. இந்திய எல்லையில் உள்ள சிகரங்கள் எவை?

1. கஞ்சன் ஜங்கா
2. தவளகிரி
3. காட்வின் ஆஸ்டின்

அ. அனைத்தும் சரியானவை
ஆ. 1 மற்றும் 2 சரியானவை
இ. 1 மற்றும் 3 சரியானவை
ஈ. 2 மற்றும் 3 சரியானவை

129. பொருத்துக

I. கரக்கோரம் - 1. இமாச்சல பிரதேசம்
II. சட்லஜ் கோஜ் - 2. ஜம்மு காஷ்மீர்
III. நாதுல்லா - 3. சிக்கிம்
IV. போம்டிலா - 4. அருணாச்சல பிரதேசம்

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-2 II-1 III-4 IV-3
இ. I-1 II-2 III-4 IV-3
ஈ. I-2 II-1 III-3 IV-4

130. பொருத்துக

I. கார்பெட் தேசிய பூங்கா - 1. உத்ராஞ்சல்
II. கானா பறவைகள் சரணாலயம் - 2. ராஜஸ்தான்
III. மானாஸ் சரணாலயம் - 3. ஜார்க்கண்ட்
IV. காசிரங்கோ சரணாலயம் - 4. அஸ்ஸாம்

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3


விடை: 121. இ 122. ஆ 123. ஈ 124. இ 125. அ 126. ஆ 127. ஈ 128. ஆ 129. ஆ 130. ஆ

131. குளிர் காலத்தில் அதிக காற்றழுத்தம் உள்ள பகுதி
அ. தென்மேற்கு பகுதி
ஆ. தென்கிழக்குப் பகுதி
இ. வடகிழக்குப் பகுதி
ஈ. வடமேற்குப் பகுதி

132. கங்கைச் சமவெளியில் காணப்படுவது

அ. சுந்தரவனக் காடுகள்
ஆ. தரைகள்
இ. டைகா
ஈ. ஊசியிலைக் காடுகள்

133. பொருத்துக

I. வண்டல் மண் - 1. நெல்
II. கரிசல் மண் - 2. பருத்தி
III. சிவப்பு மண் - 3. பருப்பு வகைகள்
IV. மணல் - 4. தேக்கு

அ. I-1 II-2 III-3 IV-4
ஆ. I-1 II-2 III-4 IV-3
இ. I-2 II-1 III-3 IV-4
ஈ. I-2 II-1 III-4 IV-3

134. பொருத்துக

I. யுரேனியம் - 1. ஹட்டி
II. தாமிரம் - 2. கேத்ரி
III. துத்தநாகம் - 3. பாஞ்சாலி
IV. தங்கம் - 4. ஜடுகுடா

அ. I-4 II-3 III-2 IV-1
ஆ. I-4 II-2 III-3 IV-1
இ. I-1 II-2 III-3 IV-4
ஈ. I-1 II-3 III-2 IV-4

135. கீழ்க்கண்ட மாநிலங்களில் எது வங்கதேசத்துடன் பொது எல்லை கொண்டிருக்கவில்லை?

அ. திரிபுரா
ஆ. மேகாலயா
இ. மிசோரம்
ஈ. அருணாச்சல பிரதேசம்


விடை: 131. ஈ 132. அ 133. அ 134. ஆ 135. ஈ
வேதியியல் - 1

1. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது

அ. காப்பர் சல்பேட்
ஆ. சில்வர் நைட்ரேட்
இ. சோடியம் பென்சோயேட்
ஈ. சில்வர் புரோமைடு

2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்

அ. அயடோபார்ம்
ஆ. குளோரோஃபார்ம்
இ. சாலிசிலால்டிஹைடு
ஈ. யூரோட்ரோபின்

3. பொருத்துக:

I. முகரும் உப்பு - 1. KNO3
II. நைட்டர் - 2. CaOCl2
III. பச்சை விட்ரியால் - 3. (NH4)2CO3
IV. சலவைத்தூள் - 4. FeSO47H2O

அ. I-3 II-1 III-4 IV-2
ஆ. I-2 II-3 III-1 IV-4
இ. I-4 II-1 III-2 IV-3
ஈ. I-1 II-2 III-3 IV-4

4. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது

அ. MnO2
ஆ. CeO2
இ. N2O5
ஈ. Fe2O3

5. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?

அ. மின்னிறக்கக்குழாய்
ஆ. வெப்ப விளைவு
இ. காந்தப்புல விளைவு
ஈ. அனைத்தும் தவறு

6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது

அ. ரேடியம் - மேடம் க்யூரி
ஆ. கதிரியக்கம் - ஹென்ரி பெக்கரல்
இ. நியூட்ரான் - சாட்விக்
ஈ. புரோட்டான் - எதிர்மின் சுமை

7. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது

அ. 10% அசிட்டிக் அமிலம்
ஆ. 50% அசிட்டிக் அமிலம்
இ. 90% அசிட்டிக் அமிலம்
ஈ. 100% அசிட்டிக் அமிலம்

8. வெள்ளை துத்தம் என்பது

அ. காப்பர் நைட்ரேட்
ஆ. கால்சியம் சல்பேட்
இ. ஜிங்க் சல்பேட்
ஈ. காப்பர் சல்பேட்

9. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது

அ. புவி ஈர்ப்பு முறை
ஆ. நுரை மிதப்பு முறை
இ. மின்காந்த முறை
ஈ. இவற்றில் எதுவுமில்லை

10. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை

அ. தனி ஆல்கஹால்
ஆ. தூய ஆல்கஹால்
இ. ஆற்றல் ஆல்கஹால்
ஈ. இவற்றில் எதுவுமில்லை


விடை: 1. ஆ 2. ஆ 3. அ 4. ஆ 5. அ 6. ஈ 7. ஈ 8. இ 9. ஆ 10. இ

1. பின்வருவனவற்றில் எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?

அ. 1996
ஆ. 1928
இ. 1992
ஈ. 2004

2. இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்

3. புல்ஸ் ஐ (Bull's Eye) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?

அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. ரோயிங்
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்

4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?

அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. போலோ
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்

5. டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. பி.எஸ். பேடி
ஆ. சுனில் கவாஸ்கர்
இ. கபில் தேவ்
ஈ. மன்சூர் அலிகான் பட்டோடி

6. உபேர் கோப்பை (Uber Cup) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. செஸ்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து

7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?

அ. 6
ஆ. 5
இ. 7
ஈ. 9

8. ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. கோல்ஃப்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து

9. வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?

அ. டூரான்டோ கப் போட்டி
ஆ. ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டி
இ. சந்தோஷ் ட்ராஃபி போட்டி
ஈ. ரஞ்சி டிராஃபி போட்டி

10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. செஸ்
ஆ. நீச்சல் போட்டி
இ. கிரிக்கெட்
ஈ. ஹாக்கி


விடை: 1. ஆ 2. ஆ 3. அ 4. ஆ 5. ஈ 6. இ 7. இ 8. இ 9. அ 10. ஈ

11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. பேட்மின்டன்
ஆ. கோல்ஃப்
இ. கூடைப்பந்து
ஈ. ஹாக்கி

12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்

13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?

அ. 20 அங்குலம்
ஆ. 24 அங்குலம்
இ. 28 அங்குலம்
ஈ. 32 அங்குலம்

14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

அ. கோல்ப்
ஆ. போலோ
இ. கபடி
ஈ. வாலிபால்

15. நோ டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

அ. கோல்ஃப்
ஆ. கேரம்
இ. பிரிட்ஜ்
ஈ. சாக்கர்


விடை: 11. அ 12. ஆ 13. இ 14. அ 15. இ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக